நா.முத்துக்குமாரின் நினைவு தினம் இன்று 14th Aug
ஒருவர் தன் முதல் கவிதையை எழுதிய உடனேயே பாரதியாக தன்னை கருதிக்கொள்ள இடமளிக்கும். அதே கவிதைகள் எதார்த்த வாழ்விலிருந்து அவனை நாடு கடத்திவிடுகின்றன.
இதுதான் கவிதையின் ஆச்சர்யம். இதுதான் கவிதையின் அபாயமும்.
எந்த ஒரு நல்ல கவிதையும் வாசிப்பவனைப் பரவசப்படுத்துவதுபோலவே எழுதியவனை இம்சிக்காமல் இருப்பதில்லை. அதனால்தான், ஒரு கவிஞன் கவிதையின் நுட்பங்களை அறிந்து மேலெழுந்து வருகையில் அவன் மனதாலும் உடலாலும் சிதைந்து காணப்படுகிறான்.
உண்மையில், கவிதைகள் வெளிப்பார்வைக்குத்தான் ரம்மியமானவை.
அதை ஆக்கியளிக்கும் கவிஞனுக்கு அப்படியல்ல".
*******யுகபாரதி*****.
நா.முத்துக்குமாரின் கவி உலகம்:
விரும்பி செய்யும் வேலையில்,
நொடியில் இரவாகும் பகல்,
விரும்பாமல் செய்யும் வேலையில்
ஏங்குகிறது தேநீர் இடைவேளைக்கும்மதிய உணவுக்கும்!
***************************
நான் ஏன் நல்லவனில்லைஎன்பதற்கு மூன்று காரணங்கள்.
ஒன்று நான் கவிதை எழுதுகிறேன்.
இரண்டுஅதைக் கிழிக்காமலிருக்கிறேன்.
மூன்றுஉங்களிடம் அதைப்படிக்கக் குடுக்கிறேன்
****************************************
போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
*******************************
உயில்
மகன் பிறந்த பிறகுதான் அப்பாவின் பாசத்தை அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!
***************
இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்குகள்
ஞாபகங்கள் எரிகின்றன”
*****************
கடவுளிடம் பேசுகிறோம்
என்கிற பயமே இல்லாமல்
குழந்தைகளிடம் பேசுகிறார்கள்
வளர்ந்த மனிதர்கள்”
**************************************
எல்லாக் காலத்திலும்
குழந்தைகளின் வானத்திலிருந்து
இசையுடன் உதிர்ந்துவிழுகிறது
ட்விங்கிள் ட்விங்கிள்
லிட்டில் ஸ்டார்”
*****************************
கடைசிவரை
எல்லாப் பெண்களுக்கும்
பிடிபடுவதே இல்லை,
சமையலறைக் கட்டங்களைத்
தாண்டி மலையேற
என்றைக்குத் தாயம் விழும்?”
******************************
உனது பேரெழுதி பக்கத்தில எனது பேரை நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாம கொடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்
********************************
கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே
*******
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா *******
திரும்பி வா நண்பனே