பிரேசில்
பிரேசில் நாட்டில், கடன் அட்டைகள் கார்ட்டியோ டி டெபிட்டோ (ஒருமை) (cartão de débito) என்று அழைக்கப்படுகின்றன. இவை காசோலைகளுக்கு மாற்றாக மிகவும் பிரபலமாகி வருகின்றன.இருப்பினும், காசோலைகள் அந்த நாட்டில் இன்னமும் பிரபலமாகவே உள்ளன.
கனடா
கனடா நாடு முழுவதுமே எஃப்ட்போஸ் அமைப்பு பயன்பட்டு வருகிறது. இது இண்டராக் நேரடி செலுத்துதல் (Interac Direct Payment - ஐடிபி) என வழங்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு அறிமுகமானது துவங்கி அந்நாட்டில் ஐடிபி மிகவும் பிரபலமான ஒன்றாகி விட்டது. முன்னர், 1980ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து, ஏபிஎம் பயன்பாட்டிற்கு பற்று அட்டைகள் பயன்பட்டு வந்தன. 1990ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், கனடாவின் மிகப் பெரும் ஆறு வங்கிகள் பாதுகாப்பு, துல்லியம் மற்றும் இயலுமை ஆகியவற்றிற்கான ஒரு அளவுமானியாக வெள்ளோட்டத் திட்டங்களைத் துவக்கின. மெல்ல மெல்ல, 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சில்லறை விற்பனையாளர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் இண்டராக்கினை பணம் செலுத்துவதற்கு ஒரு தோற்றுவாயாக அளிப்பதாகக் கணக்கிடப்பட்டது. சில்லறை வணிகர்கள், காப்பிக் கடைகள் போன்ற மிகச் சிறு வணிகர்கள் விரைவான சேவைக்காக ஐடிபி அளிப்பதை எதிர்த்து வந்தனர். 2009ஆம் ஆண்டில் சில்லறை வணிகர்களில் 90 சதவிகிதம் பேர் ஐடிபி என்பதை பணம் செலுத்துவதற்கு ஒரு மாற்று வழியாக வழங்கலாயினர்.
கனாடாவில், பற்று அட்டை சில சமயம் "வங்கி அட்டை" எனப்படுகிறது. இது வாடிக்கையாளருக்கு ஒரு வங்கி அளிக்கும் அட்டை. இது அந்த வங்கி மற்றும் இதர வங்கிகளைப் பொறுத்த நிதி மாற்றம், விஞ்சிய தொகைகளை சோதித்தறிதல், விலைச் சீட்டுகளுக்குப் பணமளித்தல், போன்ற நடவடிக்கைகளுக்கும் மற்றும் இண்டராக்கில் இணைப்பு பெற்று கொள்முதல் நடவடிக்கை முனையாகவும் விளங்குவதாகும். 1994ஆம் ஆண்டு நாடெங்கிலும் அறிமுகமான பிறகு, இவ்வாறான ஐடிபி வழி பணம் செலுத்தும் முறைமை மிகவும் பரவலாகி விட்டது. 2001ஆம் ஆண்டின்படி, ரொக்கத்தை விட பற்று அட்டைகளைக் கொண்டே கனடா நாட்டில் பெரும்பான்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.[13] இத்தகைய பரவலான பயன்பாட்டிற்கு இரு காரணங்கள் முக்கியமானதாக இருக்கலாம்: முதலாவது, ரொக்கமாக எடுத்துச் செல்ல வேண்டியிராத வசதி மற்றும் இரண்டாவதாக ஏபிஎம் எனப்படும் தானியங்கி முறைமையிலான வங்கி இயந்திரங்கள் மற்றும் வலைப்பின்னலில் நேரடியாகப் பணம் பெறும் வணிகர்கள்.
உண்மையில், பற்று அட்டையின் பயன்பாட்டினைப் பொறுத்த வரையினில், கனடா நாட்டு மக்களே உலக அளவில் தலைமை தாங்குபவர்களாக உள்ளனர். 2001ஆம் ஆண்டில், ஒரு நபருக்கு 71.7 பற்று அட்டை நடவடிக்கைகளாக இருந்தது. இதை அடுத்திருக்கும் நாட்டிற்கு (ஃபிரான்சில் 60.3) உள்ள வாடிக்கையாளர் விகிதத்தை விட இது மிக அதிகமானது. 11 நாடுகளுடனான ஒப்புமையில், கனடா நாட்டில் பற்று நடவடிக்கைகளின் சராசரி மதிப்பு (2001ஆம் ஆண்டில் யூஎஸ்$27) மிகவும் குறைந்ததாகும். இதுவே ஜப்பானில் யூஎஸ்$405 என்பதாகவும் மற்றும் சுவிட்சர்லாந்தில் யூஎஸ்$100 என்பதாகவும் உள்ளன. இவ்வாறாக, பிற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடுகையில், கனடா நாட்டு மக்கள் தங்கள் பற்று அட்டையை அதிக அளவிலும், மிகக் குறைவான மதிப்புள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாகவும் காணப்படுகிறது.
பற்று அட்டைகளை சேமித்த மதிப்பு அட்டை என்பனவாகவும் கொள்ளலாம்; அதாவது இந்த அட்டையை வழங்குபவர் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அட்டையின் உடைமையாளருக்கு கடப்பாடு உடையவராகிறார். இவை சேமித்த மதிப்பு அட்டையிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றன என்றால், அவை அநாமதேயமாகவும், வழங்குனருக்காக மட்டுமே பயன்படுபவை என்பதுமேயாகும். மாறாக,பற்று அட்டைகள் ஒரு தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்குடன் தொடர்புற்று இண்டராக் வலைப்பின்னலில் எங்கு வேண்டினும் பயன்படுத்தப்படலாம்.
கனடாவில், வங்கி அட்டைகள் பிஓஎஸ் மற்றும் ஏபிஎம் ஆகியவற்றில் மட்டுமே பயன்படும். குறிப்பிட்ட சில நிதி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் ஐக்கிய அமெரிக்க நாட்டில் நைஸ் (NYCE) வலைப்பின்னலில் இவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன.
] கனடாவில் நுகர்வோர் பாதுகாப்பு
கனாடா நாட்டில் நுகர்வோர் பற்று அட்டை சேவை வழங்குனர்கள் அனைவரும் மேற்கொண்டுள்ள ஒரு தன்னார்வக் கோட்பாடு* என்பதன் கீழாகப் பாதுகாப்பு பெறுகின்றனர். இது கனடிய பற்று அட்டை சேவை நுகர்வோருக்கான நடைமுறைக் கோட்பாடு[15] என (சில நேரங்களில் பற்று அட்டைக் கோட்பாடு எனவும்) வழங்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டிற்கான ஒழுகுதலை கனடா நிதி நுகர்வோர் முகமை (Financial Consumer Agency of Canada, (FCAC)) கண்காணித்து வருகிறது. நுகர்வோரின் புகார்களை இதுவே விசாரிக்கிறது.
எஃப்சிஏசியின் வலைத்தளம் அளிக்கும் விபரங்களின்படி, 2005ஆம் ஆண்டு இந்தக் கோட்பாட்டில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, பூசலுக்கு உட்பட்ட ஒரு நடவடிக்கையின் பொறுப்பு நுகர்வோருக்கானது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு நிதி நிறுவனத்தினுடையது. மேலும், இத்தகைய ஒரு நடவடிக்கையைப் புலனாய்கையில் எத்தனை நாட்களுக்கு இது தொடர்பான வங்கிக் கணக்கை முடக்கி வைக்கலாம் என்பதையும் வரம்பிடுகிறது.
சிலி
சிலி நாட்டில் உள்ள எஃப்ட்போஸ் அமைப்பு ரெட்காம்பிரா (கொள்முதல் வலைப்பின்னல்) என்பதாகும். இதனைத் தற்போது நாடெங்கிலும் குறைந்த பட்சம் 25,000 நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பினைப் பயன்படுத்தி பெரும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான அங்காடிகள், சில்லறைக் கடைகள், மதுச்சாலைகள் மற்றும் உணவங்கங்களில் கொள்முதல் செய்யலாம்.
கொலம்பியா
கொலம்பியாவில் உள்ள அமைப்புகள் ரெடெபான் மல்ட்டிகலர் மற்றும் கிரெடிபாங்கோ விசா ஆகியவையாகும். இவற்றை நாடெங்கிலும் குறைந்த பட்சமாக 23,000 நிறுவங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பினைப் பயன்படுத்தி பெரும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான அங்காடிகள், சில்லறைக் கடைகள், மதுச்சாலைகள் மற்றும் உணவங்கங்களில் கொள்முதல் செய்யலாம். கொலம்பிய பற்று அட்டைகள் மாஸ்டிரோ (பின்), விசா எலெக்டிரான் (பின்), விசா டெபிட் (கடன் அட்டையாக) மற்றும் மாஸ்டர்கார்ட்-டெபிட் (கடன் அட்டையாக) ஆகியவையாகும்.