FTC Forum

Entertainment => Song Lyrics => Topic started by: Global Angel on January 31, 2012, 02:22:42 AM

Title: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 02:22:42 AM
படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சுருதி ஹாஸன், பென்னி டயால், கிரீஷ்
வரிகள்: தாமரை

அடியே கொல்லுதே!
அழகோ அள்ளுதே!
உலகம் சுருங்குதே!
இருவரில் அடங்குதே!

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே!

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீ இன்றிக் காய்ந்திடுதே!
(அடியே..)

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே
துரத்துவதும் ஏனோ?

முதலும் முடிவும் நீ எனத்
தெரிந்த பின்பு
தயங்குவதும் வீணோ!

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே!
பொன் நேரம் வந்ததே!

உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே!
என் மீது பாய்ந்ததே!

மழைக் காலத்தில் சரியும்
மண் தரை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே!
(அடியே..)

அழகின் சிகரம் நீயடி!
கொஞ்சம் அதனால்
தள்ளி நடப்பேனே!

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே
உன்னை மணப்பேனே!

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே
என் மீது ஊறுதே!

எல்லா வானமும் நீ
சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே!

எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனை தோற்று நீ
என்னை வென்றாயே!
(அடியே..)
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 02:25:22 AM
படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுதா ரகுநாதன்
வரிகள்: தாமரை

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இன் நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 02:25:54 AM
படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: SPB சரண், நவீன்

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கவர்கின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே

இனி உன்னைப் பிரிய மாட்டேன்
துளி தூரம் நகரமாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே..

ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் கொன்றாய் கொன்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி
(நீ இன்றி..)

விரலோடு விழியும் வாடும்
விரகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க

எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
(ஓ ஷாந்தி..)


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 02:36:56 AM
படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சின்மயி



பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

சரணம் 1
‍========
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆ: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெ: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா

பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள..

சரணம் 2
========
ஆ: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆ: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
பெ: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 02:49:06 AM
படம்: கோ
பாடல்: என்னமோ ஏதோ
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

என்னமோ ஏதோ
மின்னி மறையிது விழியில்
அன்டி அகலுது வழியில்
சிந்தி சிதறுது வெளியில்

என்னமோ ஏதோ
சிக்கி தவிக்கிது மனதில்
இறக்கை விரிக்குது கனவில்
விட்டு பறக்குது தொலைவில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

நீயும் நானும் எந்திரமாய்
யாரோ செய்யும் மந்திரமாய் பூவே …..
முத்தமிட்ட மூச்சுக்காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அஞ்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமாய்
யாரோ செய்யும் மந்திரமாய் பூவே …..

lets go, wow wow எங்களின் தமிழச்சி என்னமோ ஏதோ
your looking so black

மறக்க முடியலையே என் மனம் அன்று
உம்மனம் so lovley இப்படியே இப்ப
உன்னருகில் நானும் வந்து சேரவா இன்று

Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா
Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா
Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா
Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
காண காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 02:53:01 AM
படம்: கோ
பாடல்: கள கள காலா கேங்கு
இசை: ஹரிஸ் ஜெயராஜ்

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..
கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்ல வேடன் தங்கள்

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

இது ஒரு வாலிப கோட்டை, மறந்திடு நீ வந்து வீட்டை
நீ என்னக்கு நான் உன்னக்கு.. சேர்ந்திருந்தால் நாம் நமக்கு..
இமைகளில் ஈரமே இல்லை
இதயத்தில் பாரமும் இல்லை
பல் முளைத்த மின்னலை போல்
நாள் முழுதும் நாம் சிரிபோம்

இது போன்ற நாட்கள்தான்
உதிராத பூகல்தான்
நங்கள் நிலவும் கதிரும்
இணைந்த போழுதாவோம்

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாது தொட்டு விட ஓடு..
போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாது தொட்டு விட ஓடு ஓடு ஓடு..

நதிகளும் தேங்குவதில்லை, அலை கடல் தூங்குவதில்லை
வாழும் வரை விழித்திருந்தால் உன் கனவை யார் பறிப்பார்..
ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்.. விதிகளை வேர்வையில் வெல்வோம்

வேற்றுமையின் வேரறுத்து, வானவில்லை சேர்ந்திருப்போம்.
ஒன்று கூடி யோசித்தோம்.. நம்மை நாமே நேசித்தோம்..
எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்..

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள்..
மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்ல வேடன் தங்கள்..

கள கள.. காது வந்து கிட்ஸ்..
பல பல.. Yeah Bala Bala..
கள கள.. Drop You Say..
பல பல.. Boombastha..
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 02:53:29 AM
படம்: கோ
பாடல்: வெண்பனியே முன்பனியே
இசை:ஹரிஸ் ஜெயராஜ்

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கன்னலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள்
உன்னலே தேய்கிரதே
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்

ஒரு எமை குளிர, ஒரு எமை வேளிர
உன்னகுலே உறங்கினேன்..
ஒரு இதழ் மலர, மறு இதழ் உளற
உன்னை அதில் உணர்கிறேன்..
ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையும் இனம்..

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா

Everything Is Chilled Now..
All Is Gonna Be Alright..
Oh I’ll Be There, I’ll Be There For You..
Everything Is Chilled Now..
Frozen In Love..
Lets Warm And Close Around Now..

இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்
என்னகுல்லே என்னகுல்லே

எவ்வணம் அதில் இவளொரு செவானம்
சொவேதம் அதில் அலைந்திட வாநிறம்
கணம் கணமே

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கன்னலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்..

 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 02:57:28 AM
படம்: எங்கேயும் காதல்
பாடல்:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : பிரபு தேவா

ஆண்:
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்

பெண்:

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் எதுவும் இசையில் எதுவும் இனிமையடி

வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதயபுதரில் சிதறி சிதறி வழிவது ஏன்
உதிரும் துளியில் உதிரம் முழுதும் உதிர்வது ஏன்

ஆண்:
உருகாதே உயிரே விலகாதே மனதே

பெண்:

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

பசை ஊரும் இதழ் , பசி ஏறும் விரலும்

உயிரின் இடையில் மயிரின் இழையும் தூரமது

ஒரு வெள்ளை திரையை உன் இதயம் திறந்தாய்
சிறுக சிறுக இறகை திருடும் தாரிகையே

விடியும் வரையில் எழுதும் எதுவும் தூரிகையே

பெண் :
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீள கூறி காதல் துடிக்க துடிக்க

ஆண் :

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

பெண்:

நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 02:59:22 AM
படம்: எங்கேயும் காதல்
பாடல்:தீ இல்லை, புகை இல்லை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : பிரபு தேவா

ஆண்:
தீ இல்லை, புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூவில்லை மடல் இல்லை
புது தேனை சொரிகிறாய் மனதிலே

என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்

முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்

விலையை தந்தேனே என்னை

வாங்கிகொண்டேனே உன்னை

ஆடை கொண்டதோ தென்னை

பெண்:
வெகுநாளாய் கேட்டேன் விழி தூறல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்து உன்னாலே

விலகாத கையை தொட்டு
விழியோர மையை தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே

விலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோத காதல் ஆகாத

ஆண்:

ஆண்:
தீ இல்லை, புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூவில்லை மடல் இல்லை
புது தேனை சொரிகிறாய் மனதிலே

என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்

முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்

புனல் மேலே வீற்று பனிவாடை கற்று
புனைந்தது நமக்கொரு புது பாட்டு

பெண்:
கடற்கரை நாரைகூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து

சிலு சிலுவென்று குளிரெடுக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க

எதிர்கால வாழ்வே நீதானே
என்னை எடுப்பாயா உன்னில் ஒழிப்பாயா

ஆண்:
தீ இல்லை, புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூவில்லை மடல் இல்லை
புது தேனை சொரிகிறாய் மனதிலே

என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்

முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்

 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:00:52 AM
படம்: எங்கேயும் காதல்
பாடல்: எங்கேயும் காதல் .. விழிகளில்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஆலாப் ராஜு
வரிகள்: தாமரை

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:03:38 AM
படம்: எங்கேயும் காதல்
பாடல்: லோலிதா ஹா லோலிதா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், பிரஷாந்தினி
வரிகள்: தாமரை

லோலிதா ஹா லோலிதா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
(பொன்மஞ்சள்..)
(லோலிதா..)

கொட்டும் போதே மழை குட்டால் விட்டால் பிழை
வாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி பச்சை குள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்

நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாய மதில்கூட பல வென்னிலா

மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்துசென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கம்மாக மாறுதே
(லோலிதா..)

தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் வெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாய்த்தும் வரம்பில்லையே
ஓ (லோலிதா..)
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:04:13 AM
படம்: எங்கேயும் காதல்
பாடல்:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

(நெஞ்சில்..)

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

(நெஞ்சில்..)

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

(நெஞ்சில்..)

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

(நெஞ்சில்..)
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:06:28 AM
படம்: வாரணம் ஆயிரம்
பாடல்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கெளதம்
ஏஹே ஆஹா…
லாலா… லாலா….

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…
நில்லாம் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை…
பொன்வண்ணம் சூடிய காரிகை….
பெண்ணே நீ காஞ்சனை….

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி…..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…

ஆஹா…..ஓஹோ..ஹோ…
ஆஹா ஹ ஹா ஹா
ஆஹா ஹ ஹா ஹா
ஆஹா ஹ ஹா ஹா
ஆஹா ஹ ஹா ஹா
ச ச ச ச ச ச….

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ… கோபம் இல்லா
நீ நின்ற இடமெல்லாம்
விலையேறிப் போகாதோ
நீ சிந்தும் வழியெல்லாம்
பனிக்கட்டியாகாதோ
என்னோடு வா
வீடுவரைக்கும்
என் வீட்டைப்பார்
என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சு போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சு போகாதே
போகாதே தே…தே… தே…

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…
ஓஹோ….ஹோ
நில்லாம் வீசிடும் பேரலை…
ஹோ… ஹோ….
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை…
பொன்வண்ணம் சூடிய காரிகை….
பெண்ணே நீ காஞ்சனை….

ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஊ ஊ ஊஹூ
ஊ ஊ ஊஹூ
ஆஹா…..

துக்கங்களை தூக்கிச் சென்றாய்
தூக்கிச் சென்றாய்…
ஏக்கங்களைத் தூவிச் சென்றாய்
உன்னைத்தாண்டி போகும் போது
போகும் போது…..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று என் காலும்
என் காலும் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே
காதல் என்னைக்கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத்தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…
நில்லாம் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை…
பொன்வண்ணம் சூடிய காரிகை….
பெண்ணே நீ காஞ்சனை….

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
ஓஹோ ஹோ…
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி…..
அந்தாதி…

ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஊ ஊ ஊஹூ
ஊ ஊ ஊஹூ
ஊ ஊ ஊஹூ
சா……….
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:08:57 AM
படம்: வாரணம் ஆயிரம்
பாடல்: மச்சி மச்சி மொரைச்சிட்டான்டா
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கெளதம்
மச்சி மச்சி
மொரைச்சிட்டான்டா
மடக்கி மடக்கி
அடிச்சிட்டான்டா
அண்ணாநகரு
டவரு நீடா
மல்லுக்கட்டி அடிடா
செக்கைப்போடு
போட்டுட்டான்டா
சைக்கிள் கேப்பில்
கவுத்துட்டான்டா
பார்ட்டி இப்போ
உனக்குத்தான்டா
டொம்முனு கட்டிப்புடிடா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

சூது வாது தெரியாது
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது
முகத்தை கழுவு லேசா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

பங்க் அடிச்சு தெரிஞ்சிக்குவோமே
கடைசியில படிச்சிக்குவோமே
சன் ரைசைப் பார்த்ததில்லை கண்ணின் மணி
எங்களுக்கு இயேர்லி மார்னிங் பத்து மணி
போடு….
லைட் ஹவுஸ் உயரத்தையும்
எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரிட்சையில் பதில் எழுத
பாதிப் பேப்பர்ல நொண்டும்
சுட்டாத்தான் நெருப்பு…
பட்டாத்தான் பொறுப்பு….

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

சூது வாது தெரியாது
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது
முகத்தை கழுவு லேசா

ஹா ஹா ஹ ஹா ஹா ஹா….

தண்டாலு தினம் எடுப்போமே
பஸ்க்கியும் தான் பல அடிப்போமே
அர்னால்ட போல ஏத்தி அம்சமா போவோம்…
ஏதாச்சும் சண்ட வந்தா ஆப்ஸன்டாவோம்…
இரவுண்டுக்கட்டி கெலப்புங்கடா
இரத்தம் சூடாக இருக்கு..
பவருக்கட்டி நொறுக்குங்கடா
பறக்க இறக்கைகள் எதுக்கு…
காத்தாடிப் போல…
போவோண்டா மேலே

ஏத்தி ஏத்தி ஏத்தி..
ப பா பா ப பா ப பா
மாத்தி மாத்தி மாத்தி …
ப பா பா ப பா ப பா

சூது வாது தெரியாது…
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது…
முகத்தை கழுவு லேசா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:10:23 AM
படம்: பீமா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
நீ தூரப்பச்சை என் நெடுநாள் இச்சை
ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே

தும்பியாக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தமிடவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தமிடவா
(சிறு பார்வையாலே..)

உதைக்கும் அலைகளிலே மிதக்கும் படகனவே
மறைக்கும் முகிலிடையே ஸ்ரீக்கும் முழு நிலவே
அடக்கம் தடுக்கிறதே அடக்கி பிடிக்கிறதே
நெருங்கி வருகையிலே நொருங்கி உடைகிறதே

உன் நெஞ்சில் இட்டு என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டி பார்க்கும் வாலாட்ட
நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை
என்னை தேடி வந்தாய் பாராட்ட
(சிறு பார்வையாலே..)

சிலிர்க்கும் ச்டிகளிலே துளிக்கும் முதல் இலையே
இனிக்கும் கரும்பினிலே கிடைக்கும் முதல் சுவையே
விழுந்தேன் இரவினிலே எழுந்தேண் கனவினிலே
கனவ்ல் நீ இருந்தால் மறந்தேன் வெளி வரவே

ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே
அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே
நீ கொஞ்சும் போது கொல்லும் நஞ்சு
ஆனால் கூட அள்ளி உண்பேனே
(சிறு பார்வையாலே..)
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:11:00 AM
படம்: லேசா லேசா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஃப்ராங்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹீ உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
ஒரு ஆசை மனைவிப்போல் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
(ஏதோ..)

நல்ல மரம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாயே நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது

தாய்மடியில் சேய்தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியில் விடலாமா

குழந்தையும் குமரியின் ராயாச்சா
கொஞ்சிடும் பருவம் போயாச்சா
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாய் ஆச்சா
(ஏதோ..)

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ

இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் சொல்வேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
(உன் பாதம்..)

 
 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:11:38 AM
படம் : ஆதவன்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : பென்னி தயாள்
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார்
டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட

டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

நேற்றென்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்றென்பதை தவிரவும் எதுவுமில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன கணிதமா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு
எதுவும் இல்லை புனிதமா
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

டமக் டமக் டமக் டமக்
டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
உன் கூடத்தான் பூமியே திரண்டு வரும்
உன் பாதையில் ஆயிரம் விருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கீழே
வாசலில் நாங்கள் நடுவிலே
தோளின் மேலே ஏ வானம் இல்லை
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பி பாரு தினம் தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்

டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட


 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:12:14 AM
படம்: செல்லமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, மஹதி
என் சோனாலி சோ சோனாலி
மை சோனாலி சோ சோனாலி

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்
(காதலிக்கும்..)

சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே சரிகிறதே
அடி விண்ணும் மண்ணும் உணக்குள்ளே விளம்பரமோ
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ
ஹேய் மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ
என் காதலி காதலி காதலி காதலி
என்னை காதலி காதலி காதலி
(காதலிக்கும்..)

உன்முகம் கொண்ட பருவினிலும்
விண்மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி என்னை கொல்லுதடி
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டிக் கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை

என் காதலி காதலி காதலி காதலி..
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:13:46 AM
படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், மஹதி

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல
(ஐயய்யோ..)

வள்ளுவரின் குரளாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு
காதல் மடம் அழகா உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு
உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
தினம் நீ கனவில் வருவதனால்
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு
(ஐயய்யோ..)

காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில் ஊஞ்சல்
கட்டி புத்தன் ஆடுவான்
காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட
போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்
காலையும் மாலையும் புடிக்கும்முன்னா
இன்று காதல் பாடங்கள் படிக்க வைப்பேன்
காவல்காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்
அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
(துணிச்சல் புடிச்சிருக்கு..)
புதியாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
..
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:14:21 AM
படம் : லேசா லேசா
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக்

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே

கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்பராகம் என்னவென்று காட்டுவேன்
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே...

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே

ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:14:55 AM
படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், கேகே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி
ஏலோ ஏலேலோ ஏலாங்கடியோ

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ
சகுணம் பார்த்து சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே
அடியே (கல்யாணம்தான்..)

ருசியா பேசுற ருசியா பார்க்கூற
ருசியா சமையலும் செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா
பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா
மிளகுல ரசமா மிளகை தூக்க
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
நண்டு வருக்க தெரியுமா கோழி பொறீக்க தெரியுமா
ஆட்டு காலு நசுக்கி போட்டு சூப்பு வைக்க தெரியுமா
என் இடுப்பு ஓரமா இருக்குதையா காஅமா
கண்டு நீயும் புடிச்சா எடுத்துக்கையா தாராளமா
(கல்யாணம்தான்..)

ஊரு ஓரமா ஐயனார் போல நீ
மீசைய காட்டி மிரட்டுரியே
ஓ குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ
வேளியே தாண்ட அஞ்சுறியே
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போல தான்
பங்குனி வரட்டும் பரிசம் தாரேன்
அதுக்கு முன்னாலே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு நீ
மஞ்ச பூசி குளிச்சிட்ட மனசுக்குள்ள வேர்க்குது
உன்ன நானும் பார்துட்டா உடம்பு முழுக்க கூசுது
வேண்டியத அறைச்சு தான் தேச்சு விட வரட்டுமா
விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா
(கல்யாணம்தான்..)


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:15:52 AM
படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சித்ரா

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
(இதுதானா..)

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:16:25 AM
படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி

யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன தின்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்களம்
போக போக புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே
உள் நெஞ்சில் உடைய செய்
(மழை மழை..)
(யார் வந்தது..)

நீ மட்டும் ம்ம் என்றால் உடலோடு உடல் மாற்றல் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே
அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தா
(மழை மழை..)
தீண்டாமல் சருகாவேன் நீ வந்து
தொட்டால் நான் சிறகாவேன்
ஐயோடி நான் கல்லாவேன் உலியாக
நீ வந்தால் கலையாவேன்
ஹேய் நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலிகள் ஏன்?
(மழை மழை..)

Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:16:54 AM
படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், மதுமிதா

என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண் கொண்டு கடைந்தவளே
உன்னை கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொல்ல வாராயோ
(என்னை பந்தாட..)

செங்குயிலே சிறு வெயிலே
மண்ணில் உள்ள வளம் இன்னதின்னதென
செயற்கை கோல் அறியும் பெண்ணே
உன்னில் உள்ள வளம் என்னதென்ன
உள்ளங்கை அறியும் கண்ணே
நீ அழகின் மொத்தம் என்று சொல்லு
அந்த ப்ரம்மன் வைத்த முற்றுப்புள்ளி

செங்குயிலே சிறு வெயிலே
வாய் திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழ விடு அன்பே

இனியவனே எனையனே
உன்னை காணவில்லை என்னும் போது
நெஞ்சில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும்
பஞ்சு மெத்தைகளில் தூக்கம் இல்லை என்று
பற்கள் தலையணையை கடிக்கும்
உன்னை தொட்டு பார்க்க மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டு விட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே என்னவனே
மூக்கு மீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாராய்
(என்னை பந்தாட..)


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:17:25 AM
படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துறத்துவது நிஜமா நிஜமா?

முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா?
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா?
சத்தியத்தில் உடைத்த காதல் சாகாது அல்லவா?
(முதற்கனவே..)

எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
தொலைந்த என் கண்களை பார்ஹ்த்டதும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தைஅ எடுத்துவிட்டாய்
இதயத்தை தொலைததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
(முதற்கனவே..)

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விர்ல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துலையிட்உவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:18:04 AM
படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், திப்பு
மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனத்தில் மனத்தில் மனத்தில் உள்ள முதல் வரி என்ன?

குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
(குல்முஹர் மலரே..)

மலரின் தொழிலே உயிரை கொல்லுதல் இல்லையடி
மனிதன் உயிரை கொன்றால் அதன் பெயர் மலரே இல்லையடி
அதன் பெயர் மலரே இல்லையடி
(குல்முஹர் மலரே..)
(மலரே மலரே..)

உயிரை திரிகி உந்தன் கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசி கொள்ளாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே
என் இரவை எரித்து குழைத்து குழைத்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ? என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே
(குல்முஹர் மலரே..)

உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து கலகம் மூட்டுகிறாய்
இன்று இந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டாதே
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாட்டு கிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
(மலரே மலரே..)

மலரே மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
தூக்கி எரியாதே........ தூக்கில் போடாதே

முகவரி என்ன?
முகவரி என்ன?
முகவரி என்ன?
தூக்கில் போடாதே

முகவரி என்ன?
முகவரி என்ன?
முகவரி என்ன?
தூக்கில் போடாதே


 
 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:18:56 AM
படம்: காக்க காக்க
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, சுசித்ரா

உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அனைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிக்கொள்வாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின்..)

சுவாசமின்ரி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன்
வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே
தொலைந்து போவேனே நான் நான் நான்..
(உயிரின்..)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ
விரல்கள் தாராயோ நீ நீ நீ..
(உயிரின்..)


 
 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:19:28 AM
படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிணி, கார்த்திக், க்ரீஷ்

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓ! ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

ஒரு பார்வை நீளத்தை, ஒரு வார்த்தை நாணத்தை,
தாங்காமல் வீழ்ந்தேனே! தூங்காமல் வாழ்ந்தேனே!
நதி மீது சருகைப் போல் உன் பாதை வருகின்றேன்.
கரைத் தேற்றி விடுவாயோ? கதி மோட்சம் தருவாயோ?
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப் போனேனே!
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!

நீ என்பது மழையாக, நான் என்பது வெயிலாக,
மழையோடு வெயில் சேரும், அந்த வானிலை சுகமாகும்.
சரி என்று தெரியாமல், தவறென்று புரியாமல்,
எதில் வந்து சேர்ந்தேன் நான், எதிர்பார்க்கவில்லை நான்.
என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்,
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்.

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:20:04 AM
படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: அருண், க்ரீஷ்

ஜூன் போனால் ஜூலை காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!

ஆரைக்குள்ளே மழை வருமா?
வெளியே வா குதூகலமா!
இந்த பூமிப் பந்து, எங்கள் கூடைப் பந்து!
அந்த வானம் வந்து, கூரை செய்ததின்று!
கறை இருக்கும் நிலவினை சலவை செய்!
சிறையிருக்கும் மனங்களைப் பறவை செய்!
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

இருப்போமா வெளிப்படையாய்?
சிரிப்போமா மனதுடையாய்?
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே!
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே!
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்,
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்,
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே
!


 
 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:21:06 AM
படம்: வாரணம் ஆயிரம்
பாடல்: முன்தினம் பார்த்தேனே
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கெளதம்

ஹாய் மாலினி
அ யாம் கிருஷ்ணன்
நான் இத சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகா இருக்க
இங்கே எவனும் இவ்வளவு அழகா ஒரு…ஹா
இவ்வளவு அழகா பார்த்திருக்க மாட்டாங்க

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே….
இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே…
வானத்தில் நீ வெண்ணிலா..
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே….
இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே…

கோலார் தட்டில் உன்னை வைத்து
நிழல் செய்ய பொன்னை வைத்தால்
கோலாரும் தோற்க்காதா பேரழகே…
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ….
வருகிறேன்….

ஓ… நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி…
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி….
விரலால் ஒரு கனவு நூறு விடை சொல்லடி

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக….
உள்ளமும் புன்னானதே….
இத்தனை நாளாக…
ஓ மை லவ்
உன்னை நான் பாராமல்
எஸ் மை லவ்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே…

கடல் நீளம் அங்கு சேரும்
அலை வந்து தீண்டும் துரம்
மனம் சென்று பார்க்காதோ… ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்க்கப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்…. துரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே….
உயிர் இரண்டும் உறையக்கண்டேன் நெருங்காமலே…
உனையின்றி எனக்கு ஏது எதிர்காலமே….

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே….
இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே…
வானத்தில் நீ வெண்ணிலா..
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

வெண்ணிலா….

வெண்ணிலா….

 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:21:47 AM
படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி, சுருதி ஹாசன்
வரிகள்: நா. முத்துக்குமார்


ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

அடி நியூட்டன் ஆப்பிள் விழ
புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி
ஓசை கேட்காமலே இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே எனை காதல் செய் நண்பனே

குத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய் மாறி போனனேன் நானே

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்
தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:22:21 AM
படம் : ஏழாம் அறிவு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கபிலன்
 


யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா



 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:23:14 AM
படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பல்ராம், நரேஷ் ஐயர், சுசித் சுரேசன்
வரிகள்: பா. விஜய்


இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

இன்னும் என்ன தோழா, , எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
தொடு வானம் இனி தொடும் தூரம்!
பலர் கைகளை சேர்க்கலாம்!

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:23:54 AM

)
திரைப்படம் : ஏழாம் அறிவு
பாடியவர்கள்: கார்த்திக் , மேகா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : நா.முத்துக்குமார்

முன் அந்திச் சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே..
(முன் அந்திச்)

ஓ...அழகே ஓ...இமை அழகே
ஹே...கலைந்தாலும் உந்தன் கூந்தல்
ஓரழகே...
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு
மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று
கடலில் சேராதோ ஒ..ஒ..
(ஹே ஹே பெண்ணே )



அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உனைத் தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தைப் போலே, என்னைச் சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே, என்னைத் தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்
ஹே ஹே பெண்ணே


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:24:24 AM
ஓஹோ..

நெஞ்சை பூபோல் கொய்தவளே

என்னை ஏதோ செய்தவளே

நெஞ்சை பூபோல் கொய்தவளே

என்னை ஏதோ செய்தவளே

ஓஹோ..

நெஞ்சை பூபோல் கொய்தவளே

என்னை ஏதோ செய்தவளே

நெஞ்சை பூபோல் கொய்தவளே

என்னை ஏதோ செய்தவளே

ஓஹோ..

 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:24:47 AM
ம்ம்ம்...
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ ஹோ...ஒரே ஞாபகம்
ஒஹோ ஹோ...உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும்போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:25:26 AM
Movie Name: Unnaale Unnaale (2006)
Singer: Haricharan, Madhusri
Music Director: Harris Jeyaraj
Producer: Oscar Ravi Chandran
Director: Jeeva
Actors: Sada, Tanisha, Vinay

வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன

வெட்கத்தை உடைத்தாய்
தீக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்

விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை
ஓ என் செய்வாய் நாளும் எனை
(வைகாசி நிலவே)

தூவானம் என தூறல்கள் விழ
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பியதே
கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
இதோ எனக்காக விரிந்தது இதழ்
எடுக்கவா தேனே
கனி எதற்காக கனிந்தது
அணில் கடித்திடத்தானே
ஹோ காலம் நேரம் பார்த்துக்கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்
(வைகாசி நிலவே)
(வெட்கத்தை உடைத்தாய்)

நூலாடையென மேலாடையென
பாலாடை மேனிமீது படரட்டுமா
நானென்ன சொல்ல நீ என்னை மெல்ல
தீண்டித் தீவைக்கிறாய்
அனல் கொதித்தாலும் அணைத்திடும்
புனல் அருகினில் உண்டு
அணை நெருப்பாக இருக்கையில்
எனை தவிப்பதுகண்டு
ஹோ மோகத்தீயும்
தேகத்தீயும் தீர்த்தம் வார்த்துத் தீராதம்மா
(வைகாசி நிலவே)
(வெட்கத்தை உடைத்தாய்)
(விழியில் இரண்டு)

 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:26:39 AM
படம் : பச்சைக்கிளி முத்துச்சரம் (2007)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : நரேஷ் அய்யர், கார்த்திக், கீரிஷ்
பாடல் வரி : தாமரை
கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
நீ.. ஒரு மல்லி சரமே
நீ.. இலை சிந்தும் மரமே
என்.. புது வெள்ளி குடமே
உன்னை தேடும் கண்கள்


ஏ ..நீ தங்க சிலையா
வெண் ..நுரை பொங்கும் மலையா
மன் ..மதன் பின்னும் வலையா
உன்னை தேடும் கண்கள்


புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ


தாமரை இலை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா


நீ ..ஒரு மல்லி சரமே
மண்ணில் ..இலை சிந்தும் மரமே
மின்னும் ..புது வெள்ளி குடமே
உன்னை தேடும் கண்கள்


ஏ ..நீ தங்க சிலையா
வெள்ளை ..நுரை பொங்கும் மலையா
அம்பால் ..மதன் பின்னும் வலையா
உன்னை தேடும் கண்கள்


ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்


நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை


கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க


தாமரை இலை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா


தாமரை இலை நீர் நீ தானா (ஒரு மல்லி சரமே)
தனி ஒரு அன்றில் நீ தானா (இலை சிந்தும் மரமே)
புயல் தரும் தென்றல் நீ தானா (நீ தங்க சிலையா)
புதையல் நீ தானா (மதன் பின்னும் வலையா)

ஒரு மல்லி சரமே...


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:27:10 AM
படம் : அயன் (2009)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரீஸ்ராகவேந்திரா, மஹதி
பாடலாசிரியர் : வைரமுத்து

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் எங்கே.... என் ஜீவ‌ன் எங்கே


என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப்போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சேர்கிறாய்


நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே


க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் இம்ம‌ண்ணும் பொய்யாக‌ க‌ண்டேனே


அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஈற்றுப் போனேனே


வெயிற்கால‌ம் வ‌ந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை கொண்டால் தான் காத‌ல் ருசியாகும்


உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்


நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் எங்கே.... என் ஜீவ‌ன் எங்கே


க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே


காத‌ல் மெய்க்காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்று நம் பூமி தனை விட்டு போகாதே


ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே


ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே... என் உச்ச‌த் தார‌கையே...
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும் ந‌ம் காத‌ல் மாறாதே


நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே


அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் எங்கே.... என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்


உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையை ஏன் வைகிறாய்?

 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:27:42 AM
படம் : லேசா லேசா (2002)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
பாடலாசிரியர் : வாலி

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...


நான் தூங்கி நாளாச்சு நாளெல்லாம் வாளாச்சு
கொல்லாமல் என்னைக் கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்
தெரிகிறதே விரிகிறதே
தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையே பொழிகிறதே


லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது.. உறவிது.. உறவிது

வெவ்வேறு பேரோடு வாழ்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா


நீயென்றால் நான் தானென்று
உறவறிய ஊர் அறிய
ஒருவரின் ஒருவரின் உயிர் கரைய
உடனடியாய் உதடுகளால் உயில் எழுது


லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
 

 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:29:09 AM
படம் : காக்க காக்க (2003)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் :  திப்பு, ஷாலினி சிங்
பாடல் வரி : தாமரை
சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே

என்னை கொஞ்சம் மாற்றி...


என் நெஞ்சில் உன்னை ஊற்றி...
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

ஒன்னே ஒன்னு சொல்லணும்.....
ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நாணம் மாறி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்... நீ சொல்வாயா
யாரை நான் கேட்பேன்... நீயே சொல்வாயா

என்னை கொஞ்சம் மாற்றி...


என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை
இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கிள்ளி கொண்டு
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை

நீ கிள்ளும் பூக்களை... நான் சூடி கொள்ளவே
என் இன்றை எண்ணம் இன்றே வந்தாசே
ஆனாலும் நேரிலே... எப்போதும் போலவே
இயல்பாக பேசி போவது என்றாச்சே
என்னை கொஞ்சம் மாற்றி... என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
ஒரு சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே


என்னை இங்கே வர செய்தாய்
என்னனவோ பேச செய்தாய்
புன்னகைகள் பூக்க செய்தாய் இன்னும் என்ன
அருகினில் அமர்ந்து என்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துரு துரு பார்வைக்கும் தான் அர்த்தம் என்ன?  என்ன?

என் பார்வை புதுசு தான்
என் பேச்சும் புதுசு தான்
உன்னாலே நானும் மாறிபோனேனே
கூட்டத்தில் என்னை தான்
உன் கண்கள் தேடனும்


என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே


என்னை கொஞ்சம் மாற்றி...


என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நாணம் மாறி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்... நீ சொல்வாயா
யாரை நான் கேட்பேன்... நீயே சொல்வாயா
நீயே சொல்வாயா நீயே சொல்வா...யா...
நீயே சொல்வாயா....

 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:29:40 AM
படம் : தாம்தூம் (2008)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் :  ஹரீஸ் ராகவேந்திரா
பாடல் வரி : நா.முத்துகுமார்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ....

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:30:15 AM
படம் : அயன் (2009)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் :  கார்த்திக்
பாடல் வரி : பா.விஜய்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே



கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே



ஆசை என்னும் தூண்டில் முள் தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோக நிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:30:52 AM
படம் : மின்னலே (2001)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
பாடல் வரி : தாமரை

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓ ஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே

நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு

நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

இதை யாரிடம் கேட்டு சொல்வேன்

கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே

ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை

நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்

நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
ஒரு ஒரு முறை சொல்லி விடு...
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
சொல்லி விடு...    சொல்லி விடு...    சொல்லி விடு.

 
 
 
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:31:25 AM
படம் : சத்யம் (2008)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : பல்ராம், பாம்பே ஜெயஸ்ரீ
பாடல் வரி : யுகபாரதி

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓரு ஆயிரம் மேல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நல் இரவினில் இரைந்திடுவேனே



செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

குரலில் உன் குரலில் மெல்லிசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் உன் பணி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வெள்ளலை சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக்கனி சுகம் புரிவது போலே
கூந்தலில் இனி மீது தினம் மாறும்  பரிமாறு
நீ நீச்சல் குளம் போலே நெடு நேரம் இளைபாரு

ஓரு ஆயிரம் மேல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நல் இரவினில் இரைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

வஹஹஹஹஹ நீயோ
வஹஹஹஹஹ நானோ
வெட்கம் வெட்கம்

வஹஹஹஹஹ நீயோ
வஹஹஹஹஹ நானோ
நித்தம் நித்தம்

நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும்

ஒலியில் மின்னொலியில் என் வளையலும் நெளிவது போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் இரைவது போதும்

போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்

கண் தூங்க போனாலும் தூங்காது ஆள் வாசம்
சகாயமே உன் அருகினில் இளைபிறுவேனே
தடாகமே பொன் முதுவனில் நனைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே

மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

ஓரு ஆயிரம் மேல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம்.... ம் ம் ம் ம் ம்
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:31:58 AM
படம்: உள்ளம் கேட்குமே (2005)
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள்: ஹரிஹரன்

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்


ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து

வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
கணுக்கள்தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா
தோல்விகள் இன்றி பூரணமா

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்


இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார் யார்

ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:32:29 AM
படம் :வாரணம் ஆயிரம் (2008)
இசை :ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் :ஹரிஹரன், தேவன், P. பிரசன்னா
பாடல் வரி: தாமரை

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே நீ மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை


நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சலை
தூக்கங்களை தூக்கிச் சென்றாள்....... தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது...... போகும் போது..
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:32:59 AM
படம் : பீமா (2008)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : சின்மயி, சாதனா சர்கம், நிகில் மேத்யூ
பாடல் வரி : வைரமுத்து
எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே..

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

இனி இரவே இல்லை,
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை,
அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

உன்னைக் காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே....
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:33:33 AM
படம் :மின்னலே (2001)
இசை :ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் :ரூப் குமார் ரத்தோடு, திப்பு
பாடல் வரி: வாலி


வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனை ந்தது
நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ மனமே

வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

ஜன்னலில் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே ஆ..ஹ ஹா ஹா
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:34:04 AM
படம்: வாரணம் ஆயிரம் (2008)
பாடியவர் : கார்த்திக், V. பிரசன்னா
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடல் வரி : தாமரை

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ
தனியா.. எங்கே போனாளோ
தனியா.. எங்கே போனாளோ
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ
தனியா.. எங்கே போனாளோ
தனியா.. எங்கே போனாளோ
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

.ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:35:08 AM
படம் : எங்கேயும் காதல் (2011)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரீஸ்ராகவேந்திரா, சின்மயி
பாடல் வரி : மதன் கார்க்கி

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ


என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின் சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ


ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி


வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதயப்புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்


உருகாதே உயிரே விலகாதே மலரே
உன் காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த நெஞ்சில்..

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ


பசி ஊறும் இதழும் பசி ஏறும் விரலும்
விரதம் முடித்து இரையை விறையும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் தூரம் அது


ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே


விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளக்கூறி காதல் காணி துடிக்க துடிக்க

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ


என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின் சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்


Title: Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
Post by: Global Angel on January 31, 2012, 03:35:34 AM
படம்: மின்னலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: தாமரை

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேண்க்குகிறேன் உன் நினைவால் நானே நான்
(வசீகரா..)

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
(வசீகரா..)

தினமும் நீ குளித்தாலும் எனை தேடி என் சேலை நுனியால்
உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து
என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
(வசீகரா..)