15
« Last post by Symphony on May 26, 2024, 11:31:48 PM »
தனிமையின் காதலில்
நடப்பதைப் கூர்ந்து
கவனித்து பார்த்தால்
தனிமை ஒன்றே
போதும்அடி !
என் உயிரும்!
என் உயிரும் துடிக்கிறது சகித்துக் கொண்டு
சில நேரம்!
கிழித்து போட்ட
காகிதம் போலத்தான்
நானும் ஒரு குப்பை தொட்டி
ஆகி விட்டேன் என்றும்,
என் மீது காறி உமிழும்
எச்சம் வலியினைதந்தாலும்
ஏற்றுகொள்கிறேன் ,
பாவம் செய்ததை
நெஞ்சம் மறப்பதில்லை என்றும்...
நான் மனிதனே இல்லை
என்று கூறி விட்டு
வெளியே போனாலும் சரி...
என் வலி எனக்கு மட்டும்......
கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
வார்த்தை இல்லாமல் பேசினேன்!
கவலை இல்லாமல் வாழ்ந்தேன் நானே!
என் தாயின் கருவறையில்!
இன்றோ தனிமையில் விடப்பட்டேன் ?
காதலின் மாயையில் நானும் துளைந்தேன்
மாயமாகி என்னை நானே வஞ்சகம் செய்துவிட்டேன்....
என் துயரை மறக்க அழுதேன்!!
என் அழுகையை மறைக்க மழையில் எனை ஒழித்துக் கொண்டேன் !! - மவுனமாக,
மவுனம்தனை மறைக்க விழிமுடலானேன்! - விழிமுடியதை மறைக்க தனிமையானேன்!!!
நான் இப்போது தனிமையின் காதலில் விழுந்தேன் ?
விழுவேன் என்று தெரியாமல்
இப்பொழுது
புரிந்து கொண்டேன்
என் அன்னையின்
கருவறையின்
சிம்மாசனம் தன்னில்
இராஜா நான் - இன்றோ
ஓர் வியாபாரியின் கைப்பாவையாக சிக்கி
சீரழிந்து - உமிழும்
உமக்கு எம்மை மெழுகாய்
உதிர்ந்து ஒளி வீசியதில்
எனக்கோ சூடு 🔥 தான் மிஞ்சியது
எம் இளமையும் உதிரமும்
உறிஞ்சி சக்கையாக வீசியெறிந்து விட்டாய்
முதுமையில் தனித்து விடப்பட்டேன் ?
மீண்டும் கருவறையில்
புகுந்து கொண்டேன்
என் அன்னையின் கருவறையிலும் அல்ல பூமாதேவியின் கருவறையில்!!!!!!
"உங்கள் இராஜூ"