பொங்கல்
உழைப்புக்கு மரியாதை செய்யும் ஒருநாள்
உழவருக்கு நன்றி சொல்லும் திருநாள்
மாடாய் உழைத்திடும் உழவர்க்கு
உறுதுணையாய் நின்று உழைத்திடும்
மாடுகளுக்கும் நன்றி சொல்லும் நன்னாள்
பகலவனுக்கு படையலிட்டு
உலகை உய்ப்பிக்கும் ஆதவனுக்கு
நன்றி சொல்லும் நாள்
கால் மேல் கால் போட்டு
கழுத்தில் டை கட்டி
குளிரறைக்குளே வியர்க்காமல்
உடை கசங்காமல் உழைப்பதை
பெருமையாக நினைக்கிறோம்
சேற்றில் கால் பதித்து
உடையெல்லாம் அழுக்காகி
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி
உலகிற்கே உணவு அளித்திடும்
உழவர் தம்மை
நினைத்திட மறக்கிறோம்
அந்த வானம் மழை பொழிந்தாலொலிய
மண்ணில் விதை விழுந்தாலொலிய
உழவன் கால் சேற்றில் பதிந்தாலொழிய
சோறு தட்டில் விழாது
நெல்லை சொல்லில் மட்டுமே பார்க்கலாம்
உறவுகளின் புன்னகை
வீட்டில் பொங்க
இனம் புரியா இன்பம் மனதில் பொங்க..
நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க
பொங்கட்டும் தை பொங்கல்.
FTC நண்பர்கள் அனைவருக்கும்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்