(https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.15752-0/p280x280/123026062_2728209670753471_5481009539509966086_n.jpg?_nc_cat=110&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=rInQkilLK8gAX-OUpmS&_nc_ht=scontent.fmaa2-2.fna&tp=6&oh=30b97b2ded103e145f22a8d40f4a639a&oe=5FC14C13)
நீண்ட காத்திருப்புக்கு அப்புறம் கிடைத்த அந்த பஸ் சீட்டில் ஆசுவாசமாக சாய்ந்து கொண்ட ஜீவா ஒரு நின்மதி பெருமூச்சை விட்ட வண்ணம் சுற்றும் முற்றும் பார்வையை சுழல விடடான் . பல்லின மக்களின் நிறக்கலவையாக அந்த பஸ் நகர்ந்துகொண்டிருந்தது .
எப்பொழுதும் ஐரோப்பிய நாட்டின் காலைகள் இப்படித்தான் இயந்திரத்தனமாய் இயங்கிக்கொண்டிருக்கும் . அடுத்த பஸ் நிறுத்தத்தில் ஒரு வயதான வெள்ளைப் பெண்மணி உள்ளேறி இருக்கைகாக கண்களால் துழாவுவதை பார்த்த பலரும் தங்கள் கண்களை மூடி தூங்குவதை போல் பாசாங்கு செய்வதை அந்த மூதாட்டியும் உணர்ந்திருப்பார் போலும் , மெதுவாக புன்னகைத்துக் கொண்டே சற்று நகர்ந்து கொண்டிருந்த பொழுது " அம்மணி இந்த இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள் " எனும் அந்த நாட்டு மொழி , குரல் அந்த பஸ்ஸில் இருந்த சிலரை திரும்பி பார்க்க வைத்தது, அதில் ஜீவாவும் ஒருவன் .
கைகளின் மா நிறத்தை வைத்து அந்த குரலை வைத்தும் யாரோ ஆசிய நாட்டவர் என்ற முடிவுக்கு வர முடிந்தது அவனால், மற்றபடி இறுகிய குளிர் ஜக்கெட்டில் உடலை போர்த்தி ஒரு கருப்பு நிற கை ப் பையை சுமந்து முதுகு காட்டி நின்ற அவளை அவளது முகத்தை அவன் பார்த்தானில்லை.. சரி யாரோ உதவும் மனது கொண்டவள் , நல்லவள் எனும் எண்ணம் மட்டுமே அவன் மனதுக்குள் ஓடி ஓய்ந்தது.
நகரும் பஸ்ஸின் மென்மையான அசைவு அவனுக்கு தாலாட்டுவதை போல் இருக்கவே இன்னும் 45 நிமிட பயணத்தை கண் மூடி பயணிக்க அவன் தீர்மானித்திருந்தான் . மூடிய இமைகளுக்குள் அவன் காதலி உறங்க விடாமல் இம்சை செய்தாள்.
அவன் அண்ணியின் தங்கை சித்ரகலா... இருபத்தின் ஆரம்பத்தில் இளமை துள்ள என்ன மைத்துனரே என்னை கட்டி கொள்ள கசக்குமா என கண் சிமிட்டி கேட்டகணத்தில் தடுமாறி சரிந்த மனதுக்குள் புகுந்து இன்னும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் ஆனந்த சொரூபி . கொஞ்சம் குழந்தை தனமான போக்கு தான் , எதை பார்த்தாலும் அதை தனக்கு சொந்தமாக்க வேண்டும் என நினைக்கும் எண்ணம் , பிடிவாதம், அவனுள் அவனை திருத்திவிட முடியும் எனும் நம்பிக்கை இருந்தது ..
மீண்டும் சித்ரகலா உருவம் அவன் கண்ணுக்குள் வந்து இதழ்களில் புன்னகையை பரவ விட்டிருந்தது ... கண் விழித்து பார்த்தவன் அட இன்னும் 5 நிமிடங்கள் தான், தான் சேர வேண்டிய தரிப்பிடம் வந்துவிடும் என்பதை உணர்ந்து நிமிர்ந்து அமர்ந்து சுற்றும் மறுபடி கண்களை துளாவ விட்டான்.
அந்த பெண் அவனுக்கு முன் இருக்கையில் இருப்பது அவனுக்கு தெரிந்தது . அவள் முகத்தை பார்க்க முடியவில்லை தலை முடியை தூக்கி ஒரு கொண்டையாக போட்டு கேயார் கிளிப் மாட்டி இருந்தாள்.
விலை உயர்ந்த சென்ட் போலும் நறுமணம் நாசியை துளைத்தது . அன்றைய நாளிதழை ஆராய்ந்தவண்ணம் இருப்பது தெரிந்தது .
அவனது தரிப்பிடம் வந்தது எழுந்து அவள் முன்பாக வந்து பஸ் நிறுத்துவதட்காக காத்திருந்த சில வினாடிகளில் மீண்டும் அவன் பார்வை அவள் மீது பாய்ந்தது .. என்ன உணர்ந்தாளோ அவளும் நிமிர்ந்துபார்த்தாள், அவள் போட்டிருந்த கரு நிற கண்ணாடியின் வழியே அவனை உறுத்து பார்ப்பது போல் இருந்தது , சடடென முகத்தை திருப்பவும் தரிப்பிடத்தில் பஸ் நிற்கவும் சரியாக இருந்தது ....
- தொடரும்
2)
(https://scontent.fixm1-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p280x280/68312327_357575411846688_8880286505902276608_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=QnJqnOwuIPAAX_lWDu7&_nc_ht=scontent.fixm1-1.fna&tp=6&oh=4420990a98df463569ad5cb613d04cfb&oe=5FC41339)
என்றைக்கும் இல்லாதவாறு தலை வலி மண்டையை பிளந்து விடும் போல் இருந்தது மதுவந்திக்கு .. கால நிலை மாற்றமாக இருக்குமோ இல்லை உடலுக்குள் ஏதாவது மாற்றமாக இருக்குமா ... சிந்தனையை ஓடவிட்ட்டபடி இருந்தவளை..
" என்ன மதி தலை வலி இன்னும் சரியாகலையா , வாயேன் ஒரு ஒரு பிளாக் டீ ஸ்ட்ரோங்கா குடிக்கலாம் தலைவலியும் பறந்திடும் கொஞ்சம் ரிலாக்ஸ்சாவும் இருக்கும் .." எனும் தோழி சரண்யாவின் அழைப்பு மதுவந்திக்கு சரியென்றுபடவே " சரி வா போகலாம் " என்று இருக்கையை விட்டு எழுந்தாள்.
கொஞ்சம் பொறு என்று தோழியை நிறுத்தியவள், கணணியை லோக் அவுட் செய்துவிட்டு மணிபர்ஸை எடுத்து சில்லறையாக பணம் உள்ளதா என்று சரி பார்த்து நிமிர்ந்தாள்.
இதையெல்லாம் கவனித்த சரண்யா " இருந்தாலும் இதெல்லாம் ஓவர் மதி ஒரு ஐந்து ரூபாய் கூட என் பர்சில் இருந்து தர முடியாத அளவுக்கு நான் கஞ்சஸ் இல்லைம்மா .. பர்ஸ் அத அங்கேயே வச்சிட்டு வா " என என முறைத்தவளை ஒரு சிறு புன்னைகையோடே எதிர்கொண்டு நடக்கலானாள் மதுமிதா .
" நீ திருந்தவே போறதில்லடி " என்று மனத் தாங்கலுடன் கூடவே ஒட்டி நடந்தாள் அவள் ஆருயிர் தோழி சரண் எனும் சரண்யா ...
§§§§§§§§§
"மச்சான் மழை அதிகமா பெய்யும் போல இருக்கு வா இந்த ரெஸ்டாரண்ட் ல ஒரு சாயா சாப்பிடலாம்.." என்று அழைத்த நண்பன் ரமேஷிடம்.. " சரி மச்சி எனக்கும் குடிச்சா நல்லாருக்கும் என்று தோணுது வா குடிக்கலாம் " என்று கூறியவாறே ரமேஸுடன் கூட அந்த கபேதிரியா நோக்கி நடந்தான் ஜீவா ..
மதியம் தாண்டி 4 மணிக்கெல்லாம் இந்த நாட்டு மக்கள் தேநீர் மீது கொண்ட மோகத்தை அங்கே இருந்த கூட்டம் பறை சாற்றியது .. விதவிதமான தேநீர் சிற்றுண்டி வகைகளுடன் அந்த கபேதிரியாவில் இருந்து வந்த நறுமணம் அதை கடந்து செல்பவரை நிச்சயம் உள்ளே இழுத்து ஒரு கப் அருந்த வைக்கும் என்பதில் ஜீவாக்கு எந்த ஐயமும் இல்லை .
இந்த இடத்தில இருக்கலாம் என்று அழைத்த ரமேஷ் காட்டிய இடத்தில் அமர்ந்து தேநீருக்கான ஆடரை கொடுத்து நிமிர்ந்த இருவர் கருத்தையும் எதிரே ஒரு மேசை தள்ளி அமர்ந்து தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த இரு பெண்களும் கவர்ந்தார்கள்கள்..
ஒருத்தி பின்புறம் மட்டுமே தெரிந்தது முகம் தெரிவதாயில்லை .. அவள் எதிரே இருந்தவள் நன்றாகவே தெரிந்தாள்.. கொஞ்சம் ஒல்லியான உருவம் மாநிறத்திலும் கம்மியான தோல் நிறம் குட்டையாக வெட்டிய முடி .. கொஞ்சம் கோபமாக இருக்கிறாள் என்பது அவளது கண்கள் அவள் தோழியை உறுத்து பார்த்ததிலேயே தெரிந்தது ...
ரமேஸும் ஜீவாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள் ...சார் நீங்கள் ஆடர் செய்தவை" என்று மேசை மீது கொண்டு வைத்தவற்றுக்கான பணத்தை ரமேஷ் தர முன் வரவும் இல்லை நான் கொடுக்குறேன் என முன் வந்து ஜீவா கொடுக்கவும் . " சரி மச்சி நெக்ஸ்ட் நான் தரேன் " அப்டின்னு தன் மணிபர்ஸை மூடி உள்ளே வைத்தான் ரமேஷ் ...
இவர்கள் உரையாடல் எதிரே கோபமுற்று இருந்தவள் கண்ணிலும் கருத்திலும் பட்டிருக்கும் போலும் ..
" ஏண்டி என் மானத்த வாங்குறே .. நானே பணம் தறேண்டி நீ எனக்கு அடுத்தமுறை சேர்த்து கொடு , ப்ளீஸ் நான் இந்தமுறை தரேன் .. அந்த பசங்கள பார்த்தியா அவங்க எப்படி டீசண்டா நடந்துக்குறாங்க , நீ ஏண்டி இப்டி இருக்கிறே ... சத்யமா முடியலடி .. என" கோபமாக அலுத்துக் கொண்டாள் அந்த குட்டை முடிக்காரி...
இவள் பேசவே மாட்டாளா... என்ன அமைதியவே அவ டீயை குடிக்கிறாள் என இவர்கள் இருவரும் நினைத்திருப்பார்கள் போலும் ... நினைவைலைகள் சில வேளைகளில் அவர்களை சென்றடையும் போலும் ... நீண்ட நேரம் காத்திருக்க வைக்காது அந்த பெண் எதோ சொல்ல ஆரம்பித்தாள் ...
"லுக் சரண்யா..உனக்கு நான் பலதடவை சொல்லிட்டேன் எனக்கான செலவை நான்தான் பார்த்துக் கொள்ளுவேன் அதுக்கு சம்மதித்தால் மட்டுமே என்னால் உன்கூட வெளிய வர முடியும் என்று சொல்லி இருக்கிறேன் ..அதை நீ மறந்தால் நான் பொறுப்பில்லை .. இப்படி அடுத்தவர் முன்னிலையில் என்னை நீ அவமானப் படுத்துறது போல் நடந்து கொள்வாயென நான் நினைக்கல .. மத்தவங்க எப்படி நடந்துக்குறாங்க என்றது எனக்கு முக்கியம் இல்ல நான் எப்படி நடந்துக்கணும்னு எனக்குள்ள ஒரு இதோட இருக்கேன் .. உனக்கு தெரியாதது இல்ல , இனிமேல் இப்டி நடந்துக்காத , இல்ல இப்டிதான்னா இதுவே நா உன்னோட வெளிய வார கடைசி தடவையா இருக்கும் , லுக் இதையும் கேட்டுக்க அடுத்த மேசைல உக்காந்து நாம என்ன பேசுறோம்னு காது கொடுத்து கேட்க்குறவங்களோட ஒப்பீனியன் உனக்கு வேணும்னா மான அவமானமா இருக்கலாம் எனக்கு இல்லை கிளம்புறேன் ... "
கோர்வையா பேசி முடித்து அந்த இருக்கையை விட்டு எழுந்து இவர்கள் பக்கம் திரும்பி ஒரு பார்வையை கனலாக வீசி சென்றவளை பார்த்து இருவருமே பிரமித்து உக்கார்ந்திருந்தனர் ...
" மது ... ஸ்டாப் ... இருடி நானும் வாறன் ... அடி இருடி" எனும் அவள் தோழி சரண்யாவின் அழைப்பு காதிலே வாங்காதது போல் விறு விறு வென வெளிக்கதவை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் மது எனும் மதுவந்தி .....