உலகம் விஞ்ஞானம் இல்லாத ஒரு யுகத்தையும் தாண்டியிருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் நிற்கும் ஒரு யுகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
விஞ்ஞானம் இல்லாத காலத்திலும் மனிதர்கள் வாழ்ந்தார்கள். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
விஞ்ஞானம் மனிதனை, நாம் கையால் பிடிக்க மாட்டோமா என ஏங்கிய சந்திரனையே நம் காலடிக்கு கீழ் கொண்டுவந்து விட்டது.
இந்த உலகத்தையே நமது உள்ளங்கைகுள் அடக்கி விட்டது.
அதே நேரம் உலகில் பலவிதமான நோய்கள், இயற்கை அழிவுகள், இதற்கும் மூலகாரணியாக விஞ்ஞானமே விளங்குகிறது.உலக அழிவுக்கு மூலகாரணமாக இருப்பதும் இந்த விஞ்ஞான வளர்ச்சியே.
ஆகவே, இந்த விஞ்ஞான வளர்ச்சி நமக்கு தேவை தானா என எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. விடை உங்கள் மூலம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் இதை விவாத அரங்கில் சமர்ப்பிக்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் இங்கே வைக்கலாம்
நண்பர்களே.
எனது கருத்தை நானும் சொல்வேன்.
நன்றி நண்பர்களே!