3)
" டீ ஆறுது குடி மச்சான் ... " என்று சிரித்துக்கொண்டே தன் தேநீர் கோப்பையை எடுத்து தேநீரை பருக ஆரம்பித்தான் ராஜேஷ் ..
" ஹஹ்ஹா .. ஆமா மச்சி குடிக்கலாம்" ன்னு ஆரம்பிச்ச ஜீவா மனதில் முறைத்து சென்ற அந்த பெண் முகம் நிழலாடியது ..
" ஜீவா அந்த பொண்ணு பார்க்க நல்லா இருக்கா .. ஆனா ஏண்டா சின்ன விசயத்துக்கு கோபப்படுறாள் ... லவர் கூட ஏதும் போல .. அந்த முகம் ...க்யூட் ல .." என வினவிய நண்பனுக்கு சிரித்துக் கொண்டே " ஏண்டா அவ நம்மள கேவலமா சொல்லிட்டு போறா உனக்கு அது கொஞ்சமும் மைண்ட்ல எட்டல ? உப்ப நீ அப்படியே தினம் 2 ஸ்பூன் சுகருக்கு பதிலா சேர்த்துக்கோ .." என நக்கலாக பதில் கொடுத்தான் ஜீவா .
"மச்சி பொண்ணுங்க கிட்ட நாம வெட்கம் மானம் ரோசம் கோபம் இதெல்லாம் பார்க்க கூடாதுடா அதிலும் அழகான பொண்ணுங்க கிட்ட கூடவே கூடாது ... ஹாஹாஹா " என வாய் விட்டு சிரித்த நண்பனை கொஞ்சம் கோபமும் சிரிப்பும் கலந்த குரலோடு .." 2 ஸ்பூன் இல்லடா 2 கிலோ தினம் சேர்த்துக்கணும் நீ .. வா போகலாம் " ன்னு எழுந்து நடக்கலானான் ஜீவா ....
இருவர் மனதிலும் இரண்டு விதமான எண்ணங்களை விதைத்தது அறியாமல் மதுவந்தி தன் இருக்கையில் அமர்ந்து அவளுக்கான வேலையில் மூழ்கி இருந்தாள் ..
§§§§§§§§§§§§
" எக்ஸ்கியூஸ்மீ... எனும் குரலில் நிமிர்ந்த மதுவந்தி இவன் எங்க இங்க வந்தான் ... பின்னாடியே வந்திருப்பானோ.. இல்லை இருக்காது இது பேங்க் யார் வேணா வரலாம் போகலாம் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வருகிறார்கள் இதில் நினைக்க என்ன இருக்கிறது .. ஆனாலும் இது நாள்வரை இவனை நான் இங்கு பார்த்ததில்லையே எனும் எண்ணங்கள் ஓட ... சடடென சுதாரித்து
"எஸ் ப்ளீஸ் என்னுடைய பெயர் மதுவந்தி நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும் .." என்று சாதாரண உரையாடலை ஆரம்பித்தாள் ..
தன் குரலுக்கு திரும்பி பதில் கொடுத்தவளை பார்த்த ஜீவாவுக்கும் சரி கூட நின்ற ராஜேஷுக்கு சரி சாக் தான் . உதடுகள் புன்னகை பூத்திருந்தாலும் கண்களில் கவனம் தெரிந்தது அது ஜீவாவின் கண்களில் பட தவறவில்லை .. சுதாரித்துக்கொண்டு ..
" மிஸ் மதுவந்தி .. என்னுடைய பேங்க் கார்டு ஒர்க் பண்ணல .. என்னால எந்த பேங்க் ட்ரான்க்சக்சனும் பண்ண முடியல .."
" சரி உங்க பேங்க் கார்ட் அண்ட் பாஸ்போர்ட் அல்லது ஐ டி கார்ட் கொடுக்க முடியுமா" என கேட்டவளுக்கு இரண்டையும் கொடுத்து விட்டு காத்திருந்தான் ..
கணனியில் பார்வையை ஓட விட்டபடி அவனது தகவலை கார்டில் பார்த்து டைப் பண்ணிய விரல்களில் அவன் கண்கள் ஓடியது .. அழகான மெல்லிய விரல்கள் அதில் ஒரு மெல்லிய ரிங் ... அடர் சிவப்பில் நெய்ல் போலிஷ் .. அளவுக்கு அதிகமா இல்லாம அளவான நீளத்தில் நகங்கள் .. நீளமான மூக்கு அன்று கருப்பு கண்ணாடியில் பளபளத்த கண்கள் இன்று கண்ணாடி இல்லாமல் அழகாக இருந்தது .. ஐ லாஷ் .. ஆர்டிபிஷியலா இருக்குமோ .. தவறாமல் அழகு நிலையம் போறவள்னு மட்டும் நன்றாக தெரிந்தது ... அவள் பார்க்கும் வேலைக்கு அதுவும் தேவைதான் .. பெர்சனாலிட்டி ரொம்ப தேவைப்படுற ஒரு ஜாப் தான் சோ குத்தமில்ல .. இப்படியா அவன் எண்ண ஓட்டங்கள் ஓடும் பொழுது அதை கலைக்கும் விதமா ..
" மிஸ்டர் ஜீவிதன் ... வழக்கமாக வருடா வருடம் இது நடைபெறுற ஒண்ணுதான் ... கஸ்டமர் நேர வந்து கவுண்டர்ல அவங்க டீடெயில்ஸ் புதுப்பிக்கணும் ... உங்களுக்கு நாங்கள் தபால் அனுப்பி இருக்கின்றோம் வர சொல்லி நீங்கள் வராத பட்ஷத்தில் பேங்க் கார்ட் லாக் செய்திருக்கிறார்கள் .. நான் அதை திரும்பி ஆக்டிவேட் பண்ணி தருகிறேன் .. வெயிட் .." ன்னு கூறியவாறு அவளது இருக்கையை விட்டு எழுந்து பாஸ்போர்ட் காப்பி பண்ண சென்றாள்..
" ம்ம்ம் டேய் மச்சி செம ஸ்மார்ட் டா இவ .. திமிர் கொஞ்சம் இருக்கும் போல .. ஆனா செம்ம " ன்னு கிசுகிசுத்தவனை " ஸ்... சும்மா இருடா காதுல விழுந்தா அவ மறுபடி ஏதா சொல்லுவா வெளிய போய் பேசலாம்" ன்னு அடக்கவும் அவள் திரும்பி வந்தாள்.
" இந்தாங்க சார் உங்க பாஸ் அண்ட் ஐ டி கார்ட் ..
பணம் உங்க அக்கவுண்டில் இருந்து எடுக்க விரும்புறீங்களா" ன்னு கணனியில் பார்வையை ஓட விட்டபடி கேட்டாள் அவள் ..
இல்லை .. நன்றி உங்கள் உதவிக்கு நன்றி மிஸ் மதுவந்தி .. சென்று வருகிறோம் இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் " என அந்த நாட்டு மொழியில் விடை பெற்றான் அவன் ..
அந்த நேரம் பார்த்து அந்த குட்டை முடிக்காரி அங்கு வந்தாள் .. அவள் முகத்தில் கோபம் தெரிந்தது ... இவர்களை கண்டதும் குழப்பமாக அது மாறியது ... புருவத்தை உயர்த்தி என்னனு அவள் மற்றவளை கேட்பதும் பார்வை வடடதுல் விழுந்தது ...
" நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு .. உங்களுக்கும் அது உரித்தாகட்டும் மிஸ்ட்டர் ஜீவிதன் " என மின்னலாய் ஒரு ஒரு விரிந்த புன்னகையை வீசினாள் அவள் .
ஒரு கணம் பிரமித்து போன ஜீவிதன் சுதாரித்துக்கொண்டு விரிந்த புன்னகையை பதிலாக கொடுத்து விடை பெற்றான் ..
வெளிக் கதவை நோக்கி இவர்கள் நகரவும் அந்த குட்டை முடி சரண்யா இவளிடம் குனிந்து ரகசியமாக எதையோ கேட்கவும் இவள் மறுப்பாக தலசைப்பதும் இவர்கள் கண்ணுக்கு புலப்பட்ட்து ..
ஆனாலும் அவர்கள் என்ன பேசுவார்கள் எனும் சிந்தனையை மீறி அவளது அந்த சிரிப்பு அவனை சிந்தனையை ஆட்க்கொண்டிருந்தது...
தொடரும்