என் இனிய இசையே...
நீ இன்றி... நான் இல்லை..
என் சின்ன உலகமே..
உன் பின்னே தவம் கிடக்குதே...
உன் செல்ல சிணுங்களில்..
என் காலை பொழுதும் விடியுமே....
உனை தீண்டும் வேளையிலே...
நான் இன்றி... இவ்வுலகமே மயங்குதே..
உன் சுவாசம்.. எடுத்தே
நான் விடும் மூச்சும்... . சங்கீதம் ஆகுதே...
உன் பண்பட்ட அதிர்வாலே..
ஆறறிவு உயிர்களன்றி.. ஈரறிவும் மயங்குதே..
ஒளியுடன்.. நீ இணைகையிலே
என் உள்ளம் உருகி.... பனியாகுதே..
நீ எனை ஆட்கொண்டதினாலே..
என் ஆன்மாவும் மகிழ்ச்சியில் திளைக்குதே..
உன் பலம்... நீ அறியாயோ...
பஞ்சபூதமும்... அடங்கும் உன்முன்னே..
உயிர்கொல்லும் தனிமையும்... மிரண்டோடுமே..
உன் கரம் எனை அணைக்கையிலே...
என் இனிய இசைநாதமே...
நீயே என் கனவு காதலன்...
என் உயிரோடு கலந்த உணர்வே..
நீ இன்றி.. சுழலாது என் உலகமுமே