இயற்கையா இறையா
யார் கொண்ட கோபம்
இது யார் தந்த சாபம்
இரண்டாம் அலை....
பிரபஞ்ச உயிரியல்
பரிணாமத்தின் சுழற்ச்சிக்கு
இது பேராபத்து
காலம் நமக்கு
படிப்பினை
கற்றுதந்துள்ளது
இந்த பூமிக்கு
மரணங்கள் ஒன்றும்
புதியது இல்லை
ஆனாலும்
இதுபோன்ற நம் கவனகுறைவான
செயல்களால் நிகழும்
பேராபத்துக்கள்
ஏற்ப்புடையது அல்ல....
கடவுளை ..அறிவியலை...
நம்புகிறவர்களும்
எதிர்ப்பவர்களும்...
புரிந்துகொள்ளுங்கள்
சில கண்மூடி தனமான
இறைநம்பிக்கைகளும்
கோட்பாடுகள் அற்ற
கடவுள் மறுப்புகளும்
இப்போது தேவை இல்லை
ஒன்றினைந்து உலகை காப்போம்
காலங்கள் நேரங்கள்
யாரைத்தான் விட்டது
போனவர்களுக்காக
வருந்தாமல்
இருப்பவர்களையாவது
காப்பாற்றுவோம்...
மனித இன வரலாற்றில்
மறக்கமுடியாத
பேரழிவு இது...
தனிமனித இடைவெளி
நமக்குள் இருக்கட்டும்
தன்மைகளில் ..மனதில் ..
இடைவெளி வேண்டாம்..
தன்னலம் வேண்டாம்...
இந்த மரணப் பாதையிலும்
மனிதம் காப்போம்
மாற்றம் வரும் நாளில்
உலகை மீட்போம்....
..............அபிசிற்பி......