வணக்கம்,
இசை தென்றலில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவிடுகிறேன்.
இந்த இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைத்து தொகுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் "மாமன்னன்"
மாமன்னன் வெறும் பொழுதுபோக்கிற்கான படமாக இல்லாமல்
சமூகத்தின் அழுக்குகளை நீக்க சொல்லும் படம்.
சமூகநீதி, சமநீதி வேண்டுமென்பதை சொல்லும் ஆகச்சிறந்த திரைப்படம்.
இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களுமே அருமை.
அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது
"நெஞ்சமே நெஞ்சமே" பாடல்
வரிகள் - யுகபாரதி
இசை - ஏ.ஆர். ரகுமான்
குரல் - விஜய் யேசுதாஸ் & சக்திஸ்ரீ கோபாலன்
ரகுமான் yow bhai ennaya pannivechiruka moment.
இந்த மனுசன் என்னன்னு நினைச்சு இந்ந பாட்ட compose பண்ணார்ன்னு தெரில.
ஒரு ஒருத்தரோட குரலையும் ஒவ்வொரு உணர்வு வெளிப்படுது
அமைதியா, சாந்தமா, யாருக்கும் தீங்கு நினைக்காத, அன்பு மட்டுமே காட்டணும்னு feel தரக்கூடிய விஜய் யேசுதாஸ் குரல்
திகட்டாத காதல் தரக்கூடிய சக்திஸ்ரீ கோபாலன் குரல்
Reprise version la
திசை தெரியாம நின்னவனுக்கு, வழிக் காட்டி கூட்டிட்டு போற தேவா குரல்.
சில விஷயங்கள் மட்டுமே எனக்கு ஆத்ம திருப்தி கொடுக்கும் அதில் ஒன்று இந்த பாடல்.
நன்றி யுகபாரதிsir மற்றும் ரகுமான்sir.
பிடித்த வரிகள்
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நெஞ்சம் இல்லையே
படத்தில் இந்த பாடல் வருவதற்கு முந்தைய காட்சிகளில் ஏற்பட்ட வலிக்கு என்ன ஒரு இனிமையான மாற்று மருந்து இந்த பாடல் வரிகள் !!
இந்த பாடலை இசை ரசிகர்களுக்கு அனைவருக்கும் டெடிக்கேட் பண்றேன்.
special டெடிக்கேஷன் to my homies Dora Paapa, Junior Samyuktha and Fairyma.