சந்தோஷமோ, சோகமோ
சரியோ, தவறோ
என்னுடைய வாழ்க்கையில்
என் முடிவுகளே
முடிவாக இருக்கட்டும்
என்றாய்
மண்ணில் புதையும் வரை
வடுவோடும்.. வலியோடும்..
முடிந்து போகும் வார்த்தைகள்
வாழ்க்கையில்
அனுபவம் ஆயிரம்
கற்றுத் தந்தாலும்
முற்றுப்புள்ளி இல்லாமல்
கேள்விகள் மட்டும்
மனதிற்குள் ஏராளம்...
எதற்க்காக இந்த முடிவு ?
என் அறியாமையின் ஏமாற்றத்தால்
உன் பிரிவை தாங்கிக்கொள்ளும் சக்தியில்லை
புரிந்து விட்டால்
உன்னை பிரிய
அனுமதித்திருக்கமாட்டேன்
மறந்து விட நினைத்தாலும்
மறக்க முடியாமல் தவிப்பது
என்னவோ வாழ்வின்
முதல்காதல்தான்!