ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 182
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/182.png)
பக்தியோடு பார்த்தாய்
தெய்வமாய்
ஆதலாலோ என்னவோ
சந்நிதானத்திலே
வைத்து சமாதி கட்டுகிறான் ....
இலகுவான மனதோடு
இருப்பவளை ஏனோ உவமைக்காய்
நிலவோடு ஒப்பிட்டு
பெருமை பிதற்றுகிறான் ....
அறிவுவளர்க்க ஆசானிடம்
சென்றால் கனிவோடு நடவாமல்
களியாட்டம் ஆடுகிறான் ....
கடைக்கண்ணி செல்ல
அண்டை வீட்டில் விட்டாலும்
பசுந்தளிர் என்றும்
பாராமல் பாம்பாய்
முழுங்க துடிக்கிறான் ....
பெண் சிசுவென, இருந்தாலும்
காப்பது அரிதாகி போகிற
எழுபதாண்டுகளை கடந்த சுதந்திர இந்தியா
தீர்வு தான் என்ன ?
சாட்டையை கையிலெடுத்து
சட்டத்தை மாற்று
மிருகமாய் மாறினவனை
மிருகக்கூண்டில் அடை
செய்வதறியாது மரணபயத்தை
அவனும் உணர்ந்தே மரணிக்கட்டும் .....
மகள்களை அரவணைத்து
காத்த பெருமிதத்தில்
என் சுதந்திர தேவி
தலைநிமிர்வாள் .......