ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 205
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/205.jpg)
என் காதல்..!
கடலின் ஆழம் தெரிந்த எனக்கு
காதலின் ஆழம் தெரியலையே
ஆழம் பார்க்கத்தான் ஆசை
சுழலில் மாட்டினால் என்கதி ?
கரைக்கு வந்தவன் கண்டது
கண்ணெதிரே ரோஜாவை ...
மொட்டாகி நின்றவள் இதழ்
விரித்தாள் ...மெலிதாய் அவள்
முணுமுணுத்தாள் ... தோர்ர்ர்ர்
இப்போது தெரிந்தது எனக்கு
கடலின் சுழல் குறைவுதான்
இவள் காதலின் சுழல்
கஜாவை விட என்னை
கடுமையாய் தாக்குகிறதே ..
காதல் என்பது மரமானால்
அதன் நிழலில் , அவள் நினைவில்
இளைப்பாற இரவுதான் சரியோ
ரோஜா ... தோர் மீது வீசும்
உன் குளிர் காற்று ..
நீ ரோஜாவல்லவா உனக்கு
இரவுதான் சரி ..பகல் வந்தால்
பாவம் நீ கருகிபோவாயே
இரவே.. நீண்ட இரவே
காதல் மரத்தில் நிழல்வேணும்
ரோஜாவின் மனதில் இடம் வேணும்.