மனம் வாடித் தவிக்கிறேன்
என்னவளைப் பிரிந்து
என் அன்பே!!
கண்ணீர் விட்டு கதற முடியாமல்
உன் நினைவுகளை மட்டும்
நெஞ்சில் சுமந்து திரிகிறேன்
என் அன்பே!!
நித்தம் உன்னிடம் பேசத் துடித்தும்
மௌனமாய என் மனதுள்ளே
அழுகிறேன்
என் அன்பே!!
பேச துடிக்கும் இதயம் கூட
வார்த்தைகளின்றி வாடி விடும்
ரோஜா மலராகியிருக்கிறது
என் அன்பே!!
யாரரிவார் என் மனதின் சோகத்தை ?
உன் ஒற்றை பார்வை
என் சோகம் தீர்க்கும்
என்பதை நீ அறிவாயா?
என் அன்பே!!
என் மனதை உன்னிடம்
கொடுத்து
உன் மனதை எனக்கே எனக்கென
நீ தருவாய் என ஆசைப்பட்டேன்
என் அன்பே!!
மனம் என்ன பண்டமாற்று பொருளென
நான் நினைத்தேன்
என எண்ணினாயோ
என் அன்பே!!
வண்ணத்து பூச்சியாக வண்ணமாக இருந்த
என் வாழ்வில் வண்ணங்களை இழந்து தவிக்கிறேன்
உன்னால் என் அன்பே !!!
(https://media.giphy.com/media/5Svk5vzkMIa1W/giphy.gif)