Author Topic: வீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா?  (Read 843 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சிலர் வீட்டு மனை வாங்குவதை, வீடு கட்டுவதை முதலீடாகவே செய்கிறார்கள். அப்படி வாங்கிவிட்ட பிறகு சட்டச் சிக்கல், இரண்டு பேர் பதிவு செய்துவிட்டார்கள், ரவுகளால் மிரட்டப்படுகிறார்கள் என்றெல்லாம் வருகிறது. இப்படி மக்கள் நிறைய கஷ்டப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை, உங்களைப் போன்ற ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னர் வாங்கினால் தவிர்க்க முடியுமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தினசரி ஒருத்தரையாவது இதுபோன்ற பிரச்சனையுடன் சந்திக்கிறோம். பூமிக்காரகன் செவ்வாய். இந்தச் செவ்வாய் நீச்சமாய் இருந்தாலோ, 8, 12ல் போய் மறைந்திருந்தாலோ அவர்கள் பெயரில் பூமி வாங்கக் கூடாது. அவருடைய மனைவிக்கு செவ்வாய் நன்றாக இருந்தால், அவர்கள் பெயரில் வாங்கிக் கொள்ளுங்கள். உங்க பெயரில் வாங்கிவிடாதீர்கள் என்று சொல்கிறோம்.

அப்படி வாங்குவதென்றால் ஃபிளாட்ஸ் ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால் கட்டடக்காரகன் சுக்ரன். பூமியாக இருக்கும் போதுதான் செவ்வாய். பூமியை கட்டிவிட்டால் அது சுக்ரன் நிலைக்குப் போய்விடும். அப்பொழுது குடும்பத்தில் யாருக்கு செவ்வாய் நன்றாக இருக்கிறதோ, அதாவது பூமிக்காரகன் நன்றாக இருக்கிறதோ அவர்கள் பெயரில் பூமியை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

ஒரு‌த்தரு‌க்கு மிதுன லக்னம். இந்த மிதுன லக்னத்தில் 4வது வீட்டில் கன்னியில் செவ்வாய். கன்னிச் செவ்வாய் கடல் நீரையும் வற்றச் செய்யும். 4வது வீட்டில் செவ்வாய் இருந்தால் ஒரு வகையில் பரவாயில்லை. ஆனால், அது கன்னியில் இருப்பதால் உங்கள் பெயரில் பூமி எதையும் வாங்க வேண்டாம், அது சரியாக வராது என்று சொன்னேன்.

அதற்கு அவர், இதெல்லாம் சும்மா சார். நான் யாரையும் நம்புவதாக இல்லை. தாராமாக இருந்தாலும், தாயாக இருந்தாலும் தனக்கு மிஞ்சின பிறகுதான் என்று வைத்துக் கொண்டால்தான் பிழைக்க முடியும் என்று சொன்னார்.

உங்களுடைய ஜாதகப்படி இப்படி இருக்கிறது என்று சொன்னேன். அதன்பிறகும், வாங்கினார். தற்பொழுது சாலை விரிவாக்கப்படுத்தினார்களே, அதில் அவர் இடம் போய்விட்டது. சாலை ஓரத்தில் என்று சொல்லித்தான் அதிக விலைக்கு விற்றிருக்கிறார்கள். இவர் வாங்கியது 40 லட்சம், ஆனால் அரசு அவருக்கு கொடுத்திருப்பது 4 லட்சம். இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை என்று அழுகிறார்.

6க்கு உரியவர்களுடைய திசை, 8க்கு உரியவர்களுடைய திசை, செவ்வாய் ராகு, செவ்வாய் சனி சேர்ந்திருந்து செவ்வாய் திசை இதெல்லாம் நடந்தால் அவர்கள் வாங்கிய சொத்தை மற்றொருவர் அபகரிப்பார்கள், இல்லையென்றால் அது கையைவிட்டுப் போகும் அல்லது யாராவது ஆக்கிரமிப்பு செய்வார்கள் என்று இத்தனையையும் பார்த்துதான் சிலருக்கெல்லாம் பூமியை வாங்கலாம், பூமியை வாங்கக்கூடாது கட்டடமாக வாங்கிக் கொள்ளுங்கள், செவ்வாய் பலவீனமாக இருந்தால் கீழ்த்தளத்தில் குடியிருக்காதீர்க‌ள், முதலாவது, 2வது மாடிக்கு மாறிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.

அடுத்து, செவ்வாய் அவர்களுடைய ஜாதகத்தில் என்ன மாதிரி இருக்கிறது என்று பார்த்துவிட்டு கருமண் பூமி அல்லது செம்மமண் பூமியை வாங்குங்கள். செவ்வாய் சந்திரனுடன் இருந்தால் மணல் பகுதியை வாங்குங்கள். அதாவது நதியை ஒட்டி, கடலோரப் பகுதிகளில் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று இவ்வளவு விஷயங்களையும் சொல்கிறோம்.

இதற்கேற்றார்போல் அவர்கள் பின்பற்றும் போது, இடர்பாடுகளோ, சொத்து வாங்கிய பின் ஏமாற்றங்களோ, இழப்புகளோ சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. திசைகளையெல்லாம் கூட சொல்கிறோம். என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து, இந்தக் கோள்களுக்கு இந்த திசை என்று சுக்ர திசை என்றால் தெற்கு, தென்கிழக்கு திசையில் வாங்குங்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.

இதுபோன்று கலந்தாலோசித்து வாங்கும் போது, தலைமுறை தலைமுறையாக அந்தச் சொத்து தங்கும். அதில் மாற்றம் இல்லை.