மதம் தாண்டி மனிதனை நேசிக்கும்
மகிழ்ச்சியான நாளில் ,
பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் !
உடமையுடன் சேர்த்து உக்கிரத்தையும் அழித்து ,
புதியவையுடன் இணைத்து புன்னகையும் பொங்கும்
போகி பொங்கல்..
இறைவனின் பெயறால் விழாவை வைத்து
இனத்திற்கு இடையே இடைவெளி அமைய..
அதற்குமுன்னே ..
இயற்கையை இறைவனாக்கி ..
தொழிலை தெய்வமாக்கி ..
இனத்தை இனக்கமாக்கி வழிபடும்
தமிழ் கலாச்சார அடையாளம்!
பொங்கலோ பொங்கல்...
நீர் இன்றி அமையாது உலகு மட்டுமல்ல!!
ஒளியின்றி ஓர் உயிர் ஏது !!
என்ற உண்மையை, உலகிற்கு உணர்த்தும்
எம் இணத்தின் பெருமையாம் !!
பொங்கலோ பொங்கல்...
உழுது விளைத்த நெற்பயிரின் முதல் முடியை
உடையவனான உதயனுக்கு உச்சி பார்த்து
உபசரிக்கும் உண்ணத திருநாள் பொங்கல்..
வருடத்தின் முதல் நாள் தை யின் திருநாள்
அறுவடையின் ஆணந்தத்தை ..
உற்றாறுடன் இணைந்து வீட்டிற்கு வெளியே
வீதியை விழா கோலமாக்கி ,
கரும்பினை காவலாக்கி மஞ்சள் மணம் கமழ..
புதுப்பானை கோலமிட்டு புத்தரிசி பொங்கலிட.. ஆதவனுடன் ஏறுக்கும் எறுதுக்கும்,
படையலாக்கும் பொங்கலோ பொங்கல்..
உழவுக்கு உறுதுணையாம்!!
அஃறினையின் பெறுமையாம் !!
எம் குடும்பத்தின் ஒர் உறவு,
காளைக்கும் கன்றுக்கும்..
அதை ஈனும் பசுவுக்கும் மறியாதையை !!
செயலால் உணர்த்தும் எம் மூத்த குடியின்
முத்தாய்ப்பு மாட்டுப்பொங்கல்...
நெற்கரும்பு பந்தளில் ,
மஞ்சள் தழை காற்றுடன் பேச ..
கோலங்களின் காட்சியால் !!
கோசாலை கோவிலாக,
கொம்புகள் வண்ணங்களிள் வட்டமிட
இயற்கையின் பட்டாடை மறங்களின் போர்வை!! இலைகள் மாலையாக மாற!!
முப்பழங்கள் படையலிட !!
காளையர்கள் புடை சூழ ,
கண்ணியர்கள் புலவை ஓத ,
புதுப்பானை புத்தரிசி மாட்டு பொங்கல்...
கல்தோன்றி முள்தோன்றா முதற் குடி
மூத்த குடி எம் தமிழ் குடியின் பெருமையில் ஓன்று,
நம் பாட்டணாரின் பந்நூறாண்டு வழி வந்த
பொங்கலோ பொங்கல்...
நண்பர்கள் அணைவருக்கம் பொங்கல் நல்வாழ்த்துகள்...