இயற்கையின் பருவ மாற்றத்தில் கணக்கிட்ட காலத்தை..
இன்று இலக்கங்களில்(Numbers) தேடுகிறது உலகம்...
மனிதமும், இயற்கையின் ஓர் அம்சமென்பதை மறந்து ..
மானுட மதியால், விளைந்த எந்திரங்களின் பின்னே ஓடுகிறான்..
ஓரறிவு ஜீவன் முதல் ஆறறிவு உயிர்கள் அடங்குமாம், அந்த ஐந்தில்..
நம் புலன்களால் மட்டுமே, உணரும் அனைத்தும் அடங்குமாம், அதே ஐந்தில்..
இப்பிரபஞ்சமே! நிலம், நீர், நெருப்பு, காற்று, மேகத்தில் அடங்கி நிற்க..
நீ ஏனடா! எண்களின் கைகளை, பற்றிக்கொண்டு நடைபோடுகிறாய்..
தொழில்நுட்பம் துணைகொண்டு நீ 1000 சுலபவழிகள் கண்டறிந்தாலும்..
அவையாவும், உன்னை அழைத்துச்செல்வது ஏனோ! உன் அழிவுக்குத்தானே..
ஈராயிரத்து இருபத்து நான்கோ இல்லை.. இரு கோடியே இருபத்து நான்கோ..
காலம்! எதுவாக இருப்பினும், அதன் முடிவை... அதுவே சொல்லும்.
எத்தனை கோடிகளை, இவுலகின் உருபொருள்கள் கடந்து போனாலும்..
இறுதியில்! அதன் உருவமாற்றம் என்னவோ ஐந்தில் ஒன்று தானே. ..
அதனால்,
என்றுமே! நாம் நம் வாழும் காலம் மட்டும், இயற்கை எனும் ஆடைகள் அணிந்து,
இந்த பூமி தாயின் மடியில்.. குழந்தைகளாய் மகிழுந்து தவழுவோம்..