Author Topic: வேதாகம வரலாறு  (Read 6505 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வேதாகம வரலாறு
« on: January 18, 2012, 01:18:15 AM »

சிறு குறிப்புகள்

பழைய ஏற்பாடு எபிரேயு பாஷையிலும், புதிய ஏற்பாடு கிரேக்க பாஷையிலும் எழுதப்பட்டது. சில புஸ்தகங்கள் அரமிக் மொழியிலும் எழுதப்பட்டது. பழையேற்பாடு எழுதப்பட்ட காலம் கிட்டத்தட்ட கி.மு 1450 - கி.மு 400 இடைப்பட்ட 1050 வருட காலத்தில் எழுதப்பட்டது. பழையேற்பட்டின் சரித்திரக்காலம் கி.மு 4000- கி.மு 400 வரை. பழையேற்பாட்டின் முதல் 5 புஸ்தகங்கள் பஞ்ச ஆகமம் என்று அழைக்கப்படுகின்றது. இப்புஸ்தகங்கள் மோசேயினால் எழுதப்பட்டவையாகும். நாற்பது ஆண்டு வனாந்தர ஜாத்திரையில் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது. எழுதப்பட்ட காலம் 1446- 1406 வரை ஆகும். பஞ்ச ஆகமங்களை தோரா என்று எபிரேய மொழியில் அழைப்பார்கள். வேதாகமம் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு 40 ஆசிரியர்களினால் ( ஏறக்குறைய ) எழுதப்பட்டது. இவர்களில் இடையர்கள், இராஜாக்கள், மீனவர்கள், நீதிபதிகள், பிரதம மந்திரி, தீர்க்கதரிசிகள், அரசியல் தலைவர்கள், வரி வசூலித்தவர்கள், மருத்துவர்கள் போன்ற பலநிலைப்பட்டவர்களும் இருந்தனர்,

அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு

உலகிலேயே அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டுள்ள புஸ்தகம் வேதாகமம். இதன் முதல் மொழி பெயர்ப்பு கி.மு 250ல் ஆரம்பமானாது. இன்று நூற்றக்கணக்கான மொழிகளில் வேதாகமும், அதன் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்கள் இன்றும் தொடர்ந்து மொழி பெயர்த்து வருகின்றனர். உலகில் இதுபோல் இன்னொரு புஸ்தகம் இல்ல

வேதாகமத்தை அழிக்க முயன்றவர்கள்


1. வால்டர் எனும் பிரெஞ்சு நாஸ்திகன்: இன்னும் 100 வருடத்தில் வேதாகமம் இருக்காது, எல்லாரும் கல்வி கற்று அறிவடைந்துவிடுவார்கள். வேதாகமத்தை ஒருவரும் வாசிக்க மாட்டார்கள். வேதாகமத்தை பார்க்க வேண்டுமானால் பண்டைக்கால மியூசியத்திற்கு தான் சென்று பார்க்க வேண்டும், கிறிஸ்தவ மார்க்கமே இருக்காது என்றான். இவன் இப்படி கூறிய ஆண்டு கி.பி 1750ல். கி.பி 1778ல் வால்டர் மரித்தாhன். அவன் இறந்து சுமார் 50 ஆண்டுகளுக்குள் ஜெனிவா வோதாகம சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

வால்டரின் நாஸ்திக புஸ்தகங்கள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் வேதாகமங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டன. வால்டர் வசித்த வீட்டிலேயே இந்த வேதாகமங்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டன. வால்டர் போய் சேர்ந்துவிட்டான். ஆனால் இன்றும் உலகில் மிகச்சிறந்த புஸ்தகமாக விற்பனையாவது வேதாகமமே.

2. வேதாகம நூல்கள் யாவையும் சேகரித்து அழித்துவிடவும், கிறிஸ்தவ ஆராதனைகளை உடனே நிறுத்திவிடவும், ரோமப்பேரரசனான டயக்ளீசியன் கி.பி 303ல் ஒரு கட்டளை பிறப்பித்தான். கிறிஸ்தவ ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வேதாகம நகல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிறிஸ்தவ அதிகாரிகளாக இருந்தவர்களின் உயர் பதவிகள் பறிக்கப்பட்டன. சாதாரண குடிமகனுக்கிருந்த உரிமைகளையும் இழந்தார்கள். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 25 ஆண்டுகளுக்குப்பின் கொன்ஸ்டான்டைன் ரோமப்பேரரசன் ஆனான். இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனானான். வேதாகமத்தின் 50 நகல்களை அரசாங்க செலவில் உடனே ஆயத்தப்படுத்தும்படி கட்டளை பிறப்பித்தான் என்பது குறிப்பிடத்தக்கது

தீர்க்கதரிசனங்கள்

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டுள்ளபடியே நிறைவேறிவருகின்றது என்பது வேதாகமத்தின் தனிச்சிறப்பு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, ஊழியம், மரணம், உயிர்த்தெழுதல் போன்றவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே மிக துல்லியமாக முன்னுரைக்கப்பட்டன. அதன்படியே ஒவ்வொன்றும் நிறைவேறின. பல்வேறு நாடுகளின் அரசர்களைக்குறித்தும் ஆட்சியைக்குறித்தும் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டவைகள் எல்லாம் நிறைவேறின. இன்றும் நிறைவேறி வருகின்றன. இதற்கு இணையான எந்தப்புஸ்தகமும் உலகில் இல்லை.

சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புஸ்தகம்

இந்த உலக்திற்கு வெளியே வானவெளியில் சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புஸ்தகம் வேதாகமமே. மைக்ரோபிலிம் என்ற முறையில் முழுவேதாகமமும் சிறிய அளவில் அச்சிடப்பட்டு சந்திரனில் வைக்கபட்டுள்ளது. சந்திரனில் ஆராய்சிபண்ண சென்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியை ஆரம்பிக்குமுன் பூமி உருவாக்கப்பட்ட விதத்தை வேதத்திலிருந்து வாசித்தார்கள். அதாவது ஆதி1:1 " ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். என்ற பகுதியை வாசித்த பின்பே சந்திரனில் தங்கள் ஆராய்ச்சியை துவங்கினர்.

வேதாகமம் எழுத உபயோகிக்கப்பட்ட பொருட்கள்

ஆதாம் முதல் மோசேயினுடைய காலம் வரை வேதாகமம் எழுதபட்டிருக்கவில்லை. தேவனுடைய வார்த்தைகள் ஒருவர் வழியாக மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதி நாட்களில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை மனிதர்கள் வாழ்ந்ததினால் ஏராளமான தகவல்களை அறிந்திருந்தார்கள். தங்கள் பின் வரும் சந்ததியினருக்கும் அறிவித்தார்கள். உதாரணமாக ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்திருந்தான். அவனுடைய நாட்களில் ஏராளமான சந்ததிகளை கண்டிருப்பான். ஏராளமான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்திருப்பாhன். நோவா 950 வருடங்கள் வாழ்ந்தான். ஜலப்பிரளயத்திற்கு பின்பு மனிதனுடைய வாழ்நாள் மிகவும் குறைந்து விட்டது. இந்த நாட்களில் தான் பரிசுத்த ஆவியானவர் மோசே போன்ற தலைவர்களை பரிசுத்த எழுத்துக்களை எழுதும்படி ஏவினார். வேதாகமத்தின் ஆக்கியோன் பரிசுத்த ஆவியானவரே. அவர் அந்தந்தக்காலத்தில் பல்வேறு மனிதர்களை கருவியாகப்பாவித்தார். எனவே தான் வேதாகமம் சுமார் 1600 வருட இடைவெளியில் பல்வேறு மனிதர்களால் எழுதப்பட்டாலும் அதின் கருப்பொருள் ஒன்றாகவே இருக்கிறது. கருத்தொற்றுமையும் ஆச்சரியமானது.


வேதாகமம் எழுதப்பட பல பொருட்கள் உபயோகிக்கப்பட்டன. 

பப்பைரஸ்:

ஆதி நாட்களில் எழுத அதிகமாய் உபயோகிக்கப்பட்டது பப்பைரஸ். இது ஏரிகள், ஆறுகள் அருகே வளரும் ஒரு வித நாணற்செடி. எகிப்திலும், சீரியாவிலும் இது அதிகமாய் காணப்படுகின்றது. இந்த நாணற்செடியை வெட்டி, தோலுரித்து, பதப்படுத்தி, காயவைத்து எழுத பயன்படுத்தினார்கள். இது எழிதில் கெடாது. கி.மு 2400 - கி.பி 300 வரை இது அதிகமாக புழக்கத்தில் இருந்தது. சிரியாவிலிருந்து பைப்லோஸ் என்ற துறைமுகம் வழியாக இந்த பப்பைரஸ் பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. புத்தகம் என்பதற்கு கிரேக்க வார்த்தை பிப்லோஸ். எனவே இந்த ஊருக்கு புத்தகம் என்ற பொருளுள்ள பைப்லோஸ் என்ற பெயர் வந்தது. பேப்பர் என்ற ஆங்கில வார்த்தை இதன் அடிப்படையிலே உருவாக்கப்பட்டது.

பார்ச்மென்ட்:

ஆடு, மாடு மற்றும் மிருகங்களின் தோல்களை பதப்படுத்தி பக்குவப்படுத்தி பயன்படுத்த ஆரம்பித்தனர். இதற்கு பார்ச்மென்ட் (தோற்சுருள்) என்று பெயர். பார்ச்மென்ட் என்ற வார்த்தை பெர்கமஸ் (பெர்கமு) என்ற வார்த்தையிலிருந்து வந்தது. வெளிப்படுத்தலில் சொல்லப்பட்டுள்ள பெர்கமு என்ற ஊரில் இந்த தோல் பதனிடும் தொழில் மிக பிரசித்தி பெற்றதாக இருந்தது.

வெலம்:

இது கன்றுக்குட்டியின் தோலில் இருந்து தயாரிக்கப்பட்ட மெல்லிய தோல்சுருள். இது பதப்படுத்தப்பட்டபின் கருஞ்சிவப்பு சாயம் பூசப்பட்டு இதில் பொன், வெள்ளி, ஆகிய உலோகங்களை உருக்கி எழுதினார்கள்.

  எழுத உபயோகிக்கப்பட்ட மற்ற பொருட்கள்:

மண் தகடுகள், கல், களிமண் தகடுகள், மெழுகால் மூடப்பட்ட மரத்தகடுகள் போன்றவைகளும் எழுத பயன்படுத்தப்பட்டன.

 
எழுதுகோல்கள்:
சிறிய உளி, முப்பட்டை உருவிலான உலோகப்பேனா, கூர்மையான நாணற்குச்சி, ஆகியவை எழுதுகோலாக பயன்படுத்தப்பட்டன. அடுப்புக்கரி, பசை, தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்பட்ட மை எழுதுவதற்கு பயன்படுத்தினார்கள்.


வேதாகமம்

 பிப்லோஸ் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் புத்தகம். இதிலிருந்து தான் பைபிள் என்ற ஆங்கில வார்த்தை உருவாகிற்று. அதாவது இது ஒன்று தான் உண்மையான புத்தகம் என்று பொருள். இது எவ்வளவு ஆச்சரியமானது. கி.மு 132ல் இந்த வார்த்தை முதன் முதலாக பழைய ஏற்பாட்டை குறிக்க பயன்பட்டது.

சார் வால்டர் ஸ்காட் என்ற பெரியவர் தன் மரணப்படுக்கையில் புத்தகத்தை கொண்டு வாருங்கள் என்று கேட்டார். என்ன புத்தகம் என்று கேட்ட பொளுது, இருப்பது ஒரு புத்தகம் தானே என்று கூறினார்.
[/b][/b][/color]
 
« Last Edit: January 18, 2012, 01:20:55 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வேதாகம வரலாறு
« Reply #1 on: January 18, 2012, 01:34:45 AM »
தமிழ் வேதாகம சரித்திரம்


இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ் மொழியின் இரண்டாவது தனிச்சிறப்பு.
 
தமிழ் மொழியில் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்கு முக்கிய கார ணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக். இவருக்கு இந்தியாவின் மேல் இருந்த மிஷனெரி ஊழிய பாராத்தால், எப்படி யாவது இந்தியாவுக்கு மிஷனெரிகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தன் அரண்மனை பிரசங்கியாராகிய லுட்கென்ஸிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் இந்தியாவிற்கு மிஷ னெரியாக செல்வதற்கு டென்மார்க்கு தேசத்தில் ஒருவரும் முன் வராததால், லுட்கென்ஸ் தன் சொந்த தேசமாகிய ஜெர்மனியின் பக்கம் திரும்பினார். அதன் விளைவாக 23 வயது சீகன் பால்க்கும், அவரது நண்பர் 29 வயது ப்ளுட்சும் இந்தியாவிற்கு மிஷனெ ரியாக செல்வதற்கு முன் வந்தார்கள்.  சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம் இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீரசுகவீனம் இவைகள் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு மிசினெரியாக போக தன்னை ஆயத்தப்படுத்தினார்.  வீரமும், விடாமுயற்ச்சியும் நிறைந்ததொரு வாழ்க்கைதான் சீகன் பால்க்கின் சரித்திரம். அவர் இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்வதற்கு தீர்மானித்த அந்த நாட்களிலே, ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனை த்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளிநாட்டிற்கு மிஷனெரியை அனுப்புவது வீண் என்றும், விருதா ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு காலமாக இருந்தது. ஐரோப்பாவில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுகிற வேலையே செய்யாமல் கிடக்கும் பொழுது, ஏன் வெளிநாட்டிற்கு சென்று செடியை நடுகின்ற வேலை யைத் தொடங்கவேண்டும்?. என்று விவாதித்து தர்க்கம் செய்யும் காலம் அது. சீகன் பால்க் இந்தியாவிற்குப் போவதை அநேக கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை
 
இதன் காரணத்தால் சீகன் பால்க், ப்ளுட்சு இருவருமே மிசனெரி தகுதித் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தது.  அவர்கள் இருவரையும் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்வதற்குக் கூட அங்கிருந்த பிஷப் மறுத்துவிட்டார். இறு தியில் டென்மார்க் அரசன் 4 வது பிரடெரிக் இந்த இரண்டு விஷயத்திலும் நேரடியாக குறுக்கிட வேண்டியதாயிற்று. இறுதியில் அவர்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற்றார்கள். பின்பு ஒரு லுத்திரன் ஆலயத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள். அதன்பின்பு 1705ம் ஆண்டு நவம்பர் 30ம் நாள் இருவரும், இந்தியாவிற்கு, பிராட்டெஸ்டெண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனெரிகளாக தங்கள் பய ணத்தை தொடங்கினார்கள்.
 
அந்த இரு இந்திய மிஷனெரிகளின் பயணத்திற்கு தடைகள் சொந்த நிலத்தில் மாத்திரமல்ல, நீரிலும் நீடித்தது. அவர்களோடு கப்பலிலே பிராயணம் செய்த மாலுமிகளும், கப்பல் தலை வனும் அவர்களுடைய பயணத்தின் நோக்கத்தைக் கேட்டபொழுது கேலியும், பரிகாசமும் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. தடைகள் பல தடவை சந்தித்த அவர்களுக்கு பயணத்தின் முடிவில் ஒரு மாபெரும் தடை காத்திருந்தது.
 
ஏறக்குறைய 90 ஆண்டுகளாக டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியானது தரங்கம்பாடியில் வியாபாரத்தொடர்பு வைத்திருந்தது. மிஷனெரி தாகமுள்ள டென்மார்க் அரசன் அந்த இரண்டு இந்திய மிஷனெரிகளைத் தரங்கம்பாடி யிலுள்ள டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைசெய்கிறவர்கள் என்ற பெயரில் அனுப்பினார். ஆனால் கம்பெனிக்கு மிஷினெரிகளை டென்மார்க் அரசன் அனுப்பும் விஷயத்தில் இந்த டென்மார்க் கிழக்கிந்திய கம்பனி எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த மிஷனெ ரிகளை எப்படியாவது இந்தியாவில் இறங்கவிடாமல் இடைய+று செய்ய கங்கணம் கட்டியது. எனவே இந்தக் கம்பெனி தரங்கம்பாடியில் வேலைசெய்யும் தன்னுடைய தொழிற்சாலை அதிகாரிகளுக்கு, அந்த இந்திய மிஷ னெரிகளின் வேலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனை கூறியிருந்தது. இதன் விளைவாக சீகன் பால்க்கும், ப்ளுட்சும் 7 மாத கடல் பிராயணத்தின் முடிவில் தரங்கம்பாடிக்கு வந்து சோர்ந்தபோது, கப்பலிலிருந்து கடற்கரைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆள் ஒருவரும் இல்லை. எனவே கடற்கரை யில் இறங்கமுடியாமல் அநேகநாட்களாய் கப்பலிலேயே காத்திருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இறுதியாக அந்தக் கப்பல்இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த படகில் ஏறி கரை நோக்கிப்போனார்கள். அந்தக் கப்பலிலிருந்து தப்பிப்போவதை கண்ட அந்த கப்பலின் தலைவன்தன் கையிலிருந்த தடியை உயர்த்தி அவர்களை அச்சுறுத்தினான். ஆனால் அவர்களோ அதைக் கண்டு அஞ்சாமல் கரை போய் சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தி யாவின் சுவிசேஷ சரித்திரத்திலே பொன் னினால் பொறிக்கப்பட வேண்டியயெதொரு நாள். 1706 ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை 10 மணி க்கு தரங்கம்பாடியில் அவர்கள் இறங்கினார்கள்.
 
அந்த இரு இந்திய மிஷனெரிகளின் உபத்திரவம் உச்சக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் தரங்கம்பாடிக்கு வெளியிலேயே காலை 10 மணியிலி ருந்து மாலை 4மணி வih காத்திருந்தார்கள். அந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாத அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அந்த இடத்தின் அதிகாரியாகிய ( commander ) J.C. ஹேசியஸ் என்பவன் அவர்களை வந்து சந்தித்தான். உடனே அவன் யார் நீங்கள்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்? என்று சீரிய போது, சீகன் பால்க் தன்னுடைய கையிலிருந்த டென்மார்க் அரசனின் முத்திரையிட்ட கடிதத்தைக் காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் அந்த அதிகாரியின் ஆத்திரமும், கோபமும் குறைந்தன. இறுதியில் அந்த இரு மிஷனெரிகளும் அந்த அதிகாரிக்குப் பின்னால் போக அனுமதியளிக்கப்பட்டது.
 
அவர்கள் எல்லோரும் தரங்கம்பாடி மார்க்கெட்போய் சேர்ந்த பொழுது, அந்த அதிகாரி அவர்களை தன்னந்தனியாக விட்டுவிட்டு சட்டென்று மறை ந்து விட்டான். மொழி தெரியாத ஒரு அந்நிய தேசத்தில், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாததொரு சூழ்நிலையில், அந்த வாலிபர்கள் இருவரும் அனாதையைப் போல, எங்குபோவதென்று தெரியாமல் தெருவிலே நின்றார்கள். ஆயினும் இருள் நிறைந்த இந்தியாவில் தேவ வார்த்தையின் தீப ஒளியேற்றும் தரி சனத்தை தந்த தேவன் அவர்களோ டிருந்தார். அவர்களுடைய பரிதாப நிலையைக் கண்ட ஒருவர் அவர்களுக்கு இரங்கி தன் இல்லத்தில் தங்குவத ற்கு இடமளித்தார்.
 
தரங்கம்பாடி டேனியத் தொழிற்சாலை அலுவலர்கள் சீகன் பால்க்கையும் அவரது தோழர் ப்ளுட்சுசாவையும் நடத்திய முறையானது அடிப்படை மனித தன்மைக்கும் அபிமானத்திற்கும் அப்பாற்பட்டதாயிருந்தது. அவர்களது மிஷனெரி ஆர்வத்தை தணியச் செய்து, மிஷனெரி பணியை கைவிட்டு பின்னிடைச் செய்யும் நோக்கத்தோடு அவ்விடத்து அதிகாரி (commander)அவர்களை இலச்சைய+ட்டும ; பலவித இழி நடத்தைகட்கு ஆளாக்கினான். எந்தக் காரணமுமின்றி மிக அற்பமான காரியங்களைச் சாக்குக் காண்பித்து அவர்களை பகிரங்கமாக கைது செய்தான். அவர்களை அடித்து "நாய்களே" என்றும் அழைத்தான். இதோடு திருப்தியடையாமல், வாரினால் அடிக்கப்போவதாக அவர்களை அச்சுறுத்தி வசைமொழியனைத்தையும் அவர்கள் மீது வாரிக்கொட்டினான். இறுதியில் சீகன் பால்க் நான்கு மாதங்களாய் சிறையிலடைக்கப்பட்டார். எவரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. போனாவும் மையுங் கூட மறுக்கப்பட்டது. நாட்டுத் துரோகிகளெனக் கருதப்பட்ட இம் மிஷனெரிகளுடன் யாரும் தொடர்பு கொள்ளல் ஆகாது என இராணுவத்தினரும் பிற அலுவலர்களும் ஆணை பெற்றிருந்தனர். இவ்வித பாதகமான சூழ்நிலையில் எவரும் மிஷனெரி களத்தினின்று பணியைக் கைவிட்டு விட்டு ஓடியிருப்பர். ஆனால் சீகன் பால்க்கோ அப்படிப்பட்ட மனிதரல்ல. திடமனமும், மிஷனெரித் தரிசனமும் உடைய அவர் சூழ்நிலையைக் கண்டு சோர்ந்து போகவில்லை. அதற்கு மாறாக, தன்னைக் கொடுமைக்குள்ளாக்கிய அந்த அதிகாரிக்கும், மற்றவர்களுக்கும் சீகன் பால்க் கிறிஸ்துவின் உன்னத அன்பை வெளிப்படுத்தி தேவன் அளித்த மாவலிய போர்க் கருவியான அந்த "அன்பு" என்னும் ஆயுதத்தால் அவர்களனைவரையும் கீழ்ப்படித்தினார்.
 
ஆரம்ப காலத்தில் இவ்விதக் கொடூரமான பாடுகளைச் சகித்தனு பவித்த இவ்விரு வாலிப மிஷனெரி களும் தங்கள் மிஷனெரிப் பணியைத் தொடங்கினர். அவர்களது சொந்த மொழி ஜெர்மன்(German)ஆகும். தொழிற்சாலையின் அலுவல் மொழி யான டேனிய மொழிகூட அவர்களுக்கு அந்நிய மொழியே. டேனிய அலுவ ர்களுக்கும், அவர்களது மத குருமார்களுக்கும் தமிழ் ஓர் அறிமுகமில்லாத மொழியாக இருந்தது. சுதேசத் தமிழர் எவருக்கும் டேனிய மொழி தெரியாது. அவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்க உதவி புரியும்படி தகுதி வாய்ந்த மொழியாசிரியர் ஒருவருமில்லை. எனவே, முன்னோடிப் பணிக்கும் தீரத்துக்கும் மனோதிடத்துக்கும் அடையா ளமாய் விளங்கும் சீகன் பால்க் தரங்கம்பாடியின் கடற்கரை மணல் மீது பள்ளிப் பிள்ளைகளோடு அமர்ந்து பைபிளதை; தமிழ் மொழியில் மொழி பெயர்க்கும் பிரம்மாண்டப் பணிக்கான ஆரம்ப முயற்சியாகத் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை மணலின் மீது எழுதிப் பழகினார்.
 
ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகட்கு முன்னர் தரை மணல் மீது தமிழ் எழுத்துக்களை வரைந்து கொண்டிருந்த போது உண்மையில் அவர் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றின் முன்னுரையை எழுதினார் என்றே சொல்ல வேண்டும். மணல் மீது வரைந்த அவரது குழந்தைத் தனமான எழுத்துககளை வெகு விரைவில் தரங்கம்பாடிக் கடலலைகள் அழித்துச் சென்ற போதிலும் அவரது உறுதியான முயற்சிகளெல்லாம் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றில் அழியாததொரு முத்திரையைப் பதித்துவிட்டது என்பதனை அச்சமயத்தில் அவர் உணராதிருந்தார். அதற்கு பிறகு 87 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த வில்லியம் கேரி "தற்கால மிஷனெரி தூது பணியின் தந்தை" எனப்படுவாரானால், சீகன் பால்க்கைத் "தற்கால மிஷனெரி தூதுப் பணியின் முற்பிதா அல்லது முன்னோடி அல்லது வழி வகுத்தவர்" என அழைப்பது சாலப் பொருத்தமாகும்.
 
தன்னுடைய சொந்தத் திறமையினாலும், விடாமுயற்சியினாலும் சீகன் பால்க் வெகு சீக்கிரமாக தமிழ் மொழி யைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இரவு பகலாக தமிழ் மொழி யில் உள்ள இலக்கியங்களைப் படித்தார். வேதாகமத்திற்கு முன்னோடியாக, ஒரு சில கைப்பிரதிகளையும், பள்ளி பாட புத்தகங்களையும், பிரசங்கங்களையும் வெளியிட்டார். இந்தப் புத்தகங்களை முதலில் கையினாலும் பின்பு 1713 ம் ஆண்டு ஜெர்மனிய தேசத்து நண்பர்கள் பரிசாக அனுப்பிய அச்சு இயந்திரத்திலும் அச்சிடப்பட்டது.
 
தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார். தமிழ் மொழியில் முழு வேதாகமத்தையும் ஆர்வத்தோடு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சீகன் பால்க்கை எதிர்பாராத வண்ணம் மரணம் சந்திக்க நேர்ந்தது. 1719 ஆண்டில் தன்னுடைய 36 வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு தன்னுடைய ப+லோக பயணத்தை முடித்தார்.
 
அவருடைய மரணத்திற்கு முன்னதாக பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம் வரைக்கும் மொழி பெயர்த்திருந்தார். சீகன் பால்க் தன்னுடைய மரணத்தைச் சந்தித்த விதத்தை ஆர்னோ லேமன் பின்வருமாறு விவரிக்கிறார். " தன்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதை உணர்ந்த சீகன்பால்க் தன் வசமுள்ள எல்லாவற்றையும் 1719 பிப்ரவரி 10ம் தேதி ஒழுங்குசெய்ய முற்பட்டார். தன் கைவசமுள்ள ஊழியத்தின் பத்திரங்கள், பணம், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் தன் நண்பர் க்ரண்ட்லர் வசம் ஒப்படைத்தார். தன் குடும்பக் காரியங்களையும் ஒழுங்கு செய்தார். பின்பு இந்திய கிறிஸ்தவ நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திரு க்கும் படியாய் ஆலோசனை கூறினார். அவர் இராப்போஜனம் எடுத்தபோது அவருடைய சரீரம் சுகமடையும் தற்காலிக வாய்ப்பு இருந்தது. அவருடைய மரண நாளான 1719 பிப்ரவரி 23ம் தேதியன்று, அதிகாலையில் எழுந்து தன் மனைவியோடும், குழந்தைக ளோடும் குடும்ப ஜெபம் செய்தார். ஆனால் காலை 9 மணிக்கு தன்னுடைய மரண வேளை மிகவும் நெரு ங்கிவிட்டதை அவர் உணர்ந்தார் நண்பர் க்ரண்ட்லர் ஜெபித்தார். ஆனால் அவரோ தேவனுடைய இராஜ்யம் செல்வதற்கு அதிக வாஞ்சையாயிருந்தார். "தேவன் தாமே என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய இரத்தத்தினாலே சுத்திக்கரித்து, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினாலே என்னை அலங்கரித்து அவருடைய இராஜ்யத்திற்குள் சேர்த்துக் கொள்வாராக" என் சொல்லிவிட்டு தனக்கு மிகவும் பிரிய மான "இயேசு என் நம்பிக்கை" என்ற ஜெர்மனிய கீர்த்தனையைப் பாடும்படி யாக சைகையினால் விருப்பம் தெரி வித்தார். பின்பு தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்து தன் ஜீவனை விட்டார்"
 
ஸ்கள்ட்ஸ்:
 
சீகன் பால்க் மொழிபெயர்க்காத பழைய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளை இன்னொரு ஜெர்மானிய மிஷனெரியாகிய பென்யமின் ஸ்கள்ட்ஸ் மொழி பெயர்த்து 1728ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
 
பிப்ரேஷியஸ்:
 
சீகன் பால்க்கும், ஸ்கள்ட்ஸீம் மொழி பெயர்த்த தமிழ் வேதாகமம் ஒரு மிகப் பெரிய சாதனையாக இருப்பினும், அதிலுள்ள பல குறைகள் நிமித்தம் அதை மறு ஆய்வு செய்தல் அவசி யமாயிற்று. சீகன் பால்க்கிற்கு அடுத்து, தமிழ் வேதாகமத்தை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானவர் ஜெர்மானிய மிஷனெரியாகிய பிலிப் பிப்ரோஷியஸ்,
 
இவர் 1742 ம் ஆண்டு சென்னையில் வந்து இறங்கினார். அச்சமயத்தில் தான் சென்னையில் சரித்திரம் காணாத ஒரு அமளியும், கொந்தளிப்புமான சூழ்நிலைக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. பிரெஞ்சுப் படையும், ஆங்கிலேயர் படையும் தங்களுடைய படை பலத்தை பரீட்சைப் பார்த்ததின் விளைவாக சென்னை நகரம் முற்றுகைக்கும், கொள்ளைக்கும் இலக்காயிற்று, இதன் நிமித்தம் பிப்ரேஷியஸ் சென்னைக்கு வெளியே உள்ள புலிக்கோட்டை என்ற இடத்தில் அடைக்கலம் புக நேர்ந்தது. கொஞ்ச நாள் கழித்து ஹைதர் அலியும், அவரது கொள்ளைப்படையும் சென்னை நகரத்தின் மீது படையெடுத்து வந்தபோது பிர்ரேஷியஸ் ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார்.இவ்வளவு கொந்தளிப்பான சூழ்நிலை யையும் பொருட்படுத்தாமல், பிபரேஷியஸ் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்க்கும் பணியை தீவிரமாகசெய்யத் தொடங்கினார். தமிழ் வேதாகமத்திற்கு முன்னோடியாக தமிழ் இலக்கணத்தையும், அகராதியை யும் வெளியிட்டார். ஏறக்குறைய 20 ஆண்டு கடின உழைப்பிற்குப் பின் புதிய ஏற்பாடு முழுவதையும் மொழி பெயர்த்து, 1773 ம் ஆண்டு வெளியிட்டார். நான்கு ஆண்டுகள் சென்றபின் பழைய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்க், ஸ்கள்ட்ஸ் ஆகியோரின் மொழி பெயர்ப்பு அநேகரின்  கண்டனத்திற்குள்ளாயிற்று. அதற்கு மாறாக, பிப்ரேஷியஸின் மொழி பெயர்ப்பு, வேதாகம மொழி பெயர்ப்புத் துறை யில் ஒரு போற்றத் தகுந்த சாதனை யாகக் கருதப்பட்டது. அதற்கு காரணம் " அவர் தன்னுடைய முழங்காலில் நின்று மூல பாஷையிலுள்ள பகுதியை வாசித்து, ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து சீர்தூக்கி பார்த்த பின்புதான் மொழி பெயர்ப்பார்;" இவருடைய மொழி பெயர்ப்பு, இவருக்கு பின்னால் தோன்றிய எல்லா மொழி பெயர்ப்புக்கும் ஒரு ஆதாரமாக விளங்கியது என்பதும் இவருடைய மொழி பெயர்ப்பை இன்றும் லுத்தரன் சபையினர் தங்க வசனம் ( புழடனநn ஏநசளழைn ) என்ற பெயரில் உபயோகித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இங்கிலாந்தில் 19ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளி நாடுகளில் உள்ள கிறிஸ்தவ ஊழியங்களின் வளர்ச்சியைக் குறித்து அதிக ஆர்வமி ருந்தது. இதன் விளைவாக வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியம் அதிக அவசியமாக இருந்தது, இதுவே ஆங்கில வெளிநாட்டு வேதாகமச் சங்கம் ஏற்பட அடிகோலியது. 1806 ஆம் ஆண்டில் தமிழ் தேசத்தைச் சுற்றி பார்த்த டாக்டர். புச்சண்ணன் என்பவர் இத்தேசத்திலே வேதாகமத்திற்கு அதிக வேட்கை இருந்ததாகக் குறிப்பிட்டார்.
 
தமிழ்தேசமக்களும் "நாங்கள் உண வையோ பணத்தையோ உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை: எங்களுக்கு தேவனுடைய வார்த்தையே தேவை" என்று அவரிடம் கூக்குரலிட்டனர்.
 
திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 10,000 பிராட்டஸ்டண்டு கிறிஸ்தவமக்களிடையே முழு வேதா கமத்தை உடையவர்கள் ஒருவரும் இல்லை, நூற்றுக்கு ஒருவர் கூட ஒரு புதிய ஏற்பாட்டை உடையவராக இல்லாதிருந்தார்கள்.
 
ரீனியஸ்:
 
இந்த சமயத்தில் திருச்சபை மிஷனெரி சங்கம் சார்பாக ஊ.வு ரீனீயஸ் என்ற ஜெர்மன் தேச தேவ ஊழியாஇந்தியாவுக்கு வந்தார். இவர் வேதாகமச்சங்கத்தின் பொறுப்பிலுள்ள வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியத்தை மேற்கொண்டார். 1840 ம் ஆண்டு தமிழ் வேதாகமத்தின் முழு முதல் பதிப்பு இந்திய வேதாகமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டது. இவ்வேதாகமம் பிப்ரேஷியஸ் என்பவர் மொழி பெயர்த்த பழைய ஏற்பாட்டையும், ரீனியஸ் என்பவர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டையும் கொண்டிருந்தது. இவ்வாறு இணைத்ததற்குக் காரணம் பிப்ரேஷியஸ் என்பவரும், ரீனியஸ் என்பவரும் தங்களுக்குரிய தனித் திற மையை தத்தம் மொழி பெயர்ப்பில் வெளிப்படுத்தியிருந்தார்கள். மொழி பெயர்ப்பாளர்கள் என்ற விதத்தில் இருவரும் சரிநிகர் சமமாக இருந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட மொழிபெயர்ப்புகளை ஒன்று சேர்க்கும் முயற்சியானது அவரவர்களுடைய தனித்திறமை விளங்கும் மொழி பெயர்ப்பின் பாகங்கனை ஒன்றாக இணைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டது. பிப்ரேஷியஸின் பழைய ஏற்பாடு, மூல வேதாகமத்தோடு மிக அதிகமாக ஒத்திருந்தது. அதைப்போலவே ரீனியஸின் புதிய ஏற்பாடும் அமைந்தது.
 
(இலங்கை) யாழ்ப்பாண திருப்புதல்:
 
(Jaffna Version)
 
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் வட இலங்கைத் தமிழரிடையே ஊழிய ஞ் செய்துவரும் தேவ ஊழியர்கள் அப்போதிருந்த வேதாகமப் பதிப்புக்களிலிருந்த தவறுகளை நிவிர்த்திச் செய்வதற்காக வேறொரு தமிழ் வேதாகமத்தை அச்சிட முடிவு செய்தார்கள். இதற்காக ஒரு குழு தற்காலத்திலும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆங்கிலம் - தமிழ் அகராதியை எழுதினவரான பீட்டர் பெர்ஸில் என்பவரைத் தலைவராகவும், நவீன கால உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படும் இந்துமத வித்துவான் ஆறுமுக நாவலர் என்பவரை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கப்பட்டது. பின்பு 1850 ஆம் ஆண்டு யாழ்ப்பாண திருப்புதல் வெளியிடப்பட்டது. இந்த யாழ்ப்பாண திருப்புதல் பல வல்லுநர்களால் வரவேற்கப்பட்ட போதி லும், இதனுடைய இலக்கிய நடை சாதாரண வேதாகம மொழிபெயர்ப்பு நடைக்கு மாறுப்பட்டு இருந்ததினால் சாதாரண மனிதனின் ஆர்வத்தைத் தூண்டத் தவறிவிட்டது.
 
ஐக்கிய திருப்புதல்: (Union Version)
 
யாழ்ப்பாண திருப்புதலின் தோல்விக்குப் பிறகு மற்றொரு திருப்புதல் வெளியிடுவது தேவையாயிருந்தது, யாழ்ப்பாண திருப்புதல் ஒரு தோல்வியாக இருந்தபோதிலும் அது தொடர்ந்து வந்த எல்லா வேதாகமப் மொழி பெயர்ப்பு ஊழியங்களுக்கும், குழு (Committee) அமைக்கும் வழக்கம் ஏற்பட அடிகோலியது. இதன் காரணமாக தென்னிந்தியாவில் இயங்கும் பல மிஷன்களின் சார்பாக, டாக்டர் எச். போவார் என்பவரை தலைமை மொழி பெயர்ப்பாளராகக் கொண்டு ஒரு மறு பரிசீலனைக் குழு (Revision Committee) ஏற்படுத்தப்பட்டது. இவ்வ+ழியக் குழுவில் குறிப்பிடத் தக்கவரான டாக்டர் கால்டுவெல் உட்பட பல வல்லுநர்கள் ஒருமித்து பங்கு கொண்டார்கள். வட இலங்கையில் வசித்த கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களைக் கலந்து ஆலோசிக்காததால் " போவார் குழு" அமைப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. இதன் காரணமாக உடனடியாக இருதரப்பிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்து ஒரு மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டிலே தென்னிந்தியாவிலும், வட இலங்கையிலும் வசிக்கும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக பொது பதிப்பு (Common Version) எனப்பட்ட ஐக்கிய திருப்புதல் (Union Version)கொண்டுவரப்பட்டு, 1971ம் ஆண்டு வெளியிடப்பட்டது. லுத்தரன் சபையைச் சார்ந்தவர்கள் பிப்ரேஷியஸின் பதிப்பைத்தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியாவிலும், இலங்கையிலும் வசிக்கின்ற தமிழ் மக்களிடத்தில் இப்போதுள்ள எல்லா பிரபலமான திருப்புதல்களிலும் இந்த ஐக்கிய திருப்புதல் தான் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது.
 
லார்சன் திருப்புதல்: (Larsen Version)
 
ஐக்கிய திருப்புதலின் வெளியீட்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை தமிழ்மொழி அடைந்த இலக்கிய வளர்ச்சி காரணமாக 1923ஆம் ஆண்டு, பல்மொழி அறிஞரும், தமிழ் வல்லுநருமான டாக்டர் எல்.பி. லார்சன் என்பவரைத் தலைவராகவும், வித்வான் ஜி. எஸ். துரைசாமி என்பவரைத் துணை வராகவும் கொண்டு, மற்றொரு திருப்புதல் குழு அமைக்கப்பட்டது. லுத்தரன் மக்கள் முதல் தடவையாக இக்குழுவுடன் இணைந்து செயல்பட்டார்கள். பிப்ரேஷியஸ் திருப்புதல்- கடவுள் என்ற சொல்லுக்கு பரா பரன் என்ற பதத்தையும், ஜக்கிய திரு ப்புதல் - தேவன் என்ற பதத்தையும் உபயோகித்திருந்தது. இதனால் கடவுள் என்ற சொல்லுக்கு எந்த பதத்தை உபயோகப்படுத்துவது என்ற பிரச்சனை எழுந்தது. நீண்ட ஆலோ சனைக்கு பின்பு, இரு தரப்பினரும் கட வுள் என் பொது பதத்தை இறுதியாக ஒப்புக்கொண்டார்கள். அதன் பிறகு லார்சன் திருப்புதல் வேதாகமம் 1936 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.



                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வேதாகம வரலாறு
« Reply #2 on: January 18, 2012, 01:37:32 AM »
தள்ளுபடி ஆகமங்கள் ( THE APOCRYPHAL BOOKS)
 

அப்போக்ரைபா என்றால் மறைக்கப்பட்டது அல்லது மூடப்பட்டது என்பதாகும். கனோனின் விதிகளை சில புத்தகங்கள் நிறைவேற்றவில்லை. அவைகள்:
1 எஸ்ரா, 2 எஸ்ரா, தோபித், யூடித், எஸ்தரின் ஓய்வு, சலோமின் ஞானங்கள், பிரசங்கிகள், பாரூக், மூன்று எபிரேய குழந்தைகளின் பாடல்கள், சூசன்னாவின் வரலாறு, பாகாலும் வலுசர்ப்பமும், மனாசாவின் ஜெபம், 1 மேக்காபீயர்கள், 2 மேக்காபீயர்கள் மற்றும் எரேமியாவின் கடிதம்.
 
1546ல் டிரென்ட் ஆலோசனைக்கூட்டத்தில், ரோமன் கத்தோலிக்க சபை இப்புத்தகங்களை ஏற்றுகொண்டாலும் புரட்டஸ்தாந்து சபைகள் பரிசுத்தாவியின் ஏவுதலால் எழுதப்பட்ட புத்தகங்கள் அல்லவென்று நிராகரித்து விட்டன. ஒருவேளை இப்புத்தகங்களில் வரலாற்று உண்மைகளும், திறமைகளும் இருந்தாலும் இவைகள் கீழ்காணும் காரங்களால் தள்ளப்படுகின்றன
.
 
 
 ■தள்ளுபடி ஆகமங்களை எழுதிய ஆசிரியர்கள் எவரும் தெய்வீக ஏவுதலை தெரிவிக்கவில்லை, சிலர் இதனை மறுக்கின்றனர். (உதாரணமாக: 1 மக் 4 :46 , 11 மக் 2 :23, 15 , 38 )

 ■அநேக கிரேக்க மொழிபெயர்ப்பில் இவைகள் இடம்பெற்றிருந்தாலும் எபிரேயு பதிப்பில் இவைகள் இடம்பெறவில்லை.
 
■ஜெமினியாவில் 90 கி.பி யில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் யூதர்கள் இவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
■இந்த புத்தகங்களில் பொய்யான வரலாறும், இடங்களும், தவறான வருடங்களும், உண்மையற்ற கட்டுகதைகளும் காணப்படுகின்றன.
 
■வேதத்தில் சொல்லப்பட்ட தரமான உபதேசங்களுக்கு மாறாக சில பொய்யான உபதேசங்களை உபதேசிக்கின்றது ( தற்கொலை, தாக்குதல், மரித்தோருக்கான ஜெபம் போன்ற காரியங்களை நியாயப்படுத்துகின்றது).
 
■ஏசுவும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் இந்த புத்தகங்களிலிருந்து ஒரு குறிப்பும் எடுத்து சொன்னதில்லை. அனால் மற்ற புத்தகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குறிப்புகளை எடுத்துரைத்திருக்கிறார்கள்.

■ஆதிகால சபை பிதாக்களான ஒரிஜன், ஜெரோம், டட்டுலியன், ஜெருசலேம் சிறில், தேர்ட்டுலியன் மற்றும் ஆத்ரசியஸ் போன்றவர்கள் இவைகளுக்கு எதிராக பேசினார்கள்.

■முதல் நான்கு நூற்றாண்டுகளில் வேத சம்பந்தபட்ட ஆலோசனைக்கூட்டங்களில் இவைகள் அங்கீகரிக்கபடவில்லை.

■லுத்தரும், சீர்திருத்தவாதிகளும் இந்த புத்தங்களை நிராகரித்தனர்.

■சீர்திருத்த காலங்களில் இருந்த ரோமன் கத்தோலிக்க அறிஞர்களும் தள்ளுபடி ஆகமங்களை நிராகரித்தனர்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வேதாகம வரலாறு
« Reply #3 on: January 18, 2012, 01:42:24 AM »
வேதாகம கால அட்டவணை

 
கி.பி 670 வரை லத்தீன் மொழிபெயர்ப்பான வல்கேட் 4 நூற்றாண்டில் ஜெரோமினால் எழுதபட்டு நடைமுறையில் இருந்து வந்தது. கி.பி 670 வரை லத்தீன் மொழிபெயர்ப்பான வல்கேட் 4 நூற்றாண்டில் ஜெரோமினால் எழுதபட்டு நடைமுறையில் இருந்து வந்தது.
 
■விக்கிளிப் வேதம் (கி.பி 1320 -1384 ) John Wycliff
 
முதன் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த விக்கிளிப் என்பவர் வல்கேட்டிலிருந்து வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இது வல்கேட்டிளிருந்த சில தவறுகளை ஆங்கிலத்திலும் கொண்டு வந்தது.80 புத்தகங்களும் மொழி பெயர்க்கபட்டது.
 

 
 ■குடென்பெர்க் (கி.பி 1455) குடென்பெர்க்
 
குடென்பெர்க் அச்சகத்தை கண்டு பிடித்தார். வேதாகமம் கையினால் எழுதப்படாமல் மாறாக அச்சிடப்படும் காலம் வந்தது. குடென்பெர்க் மூலம் அச்சிடப்பட்ட முதல் வேதாகமம் லத்தீன் மொழியில் அமைந்தது.
 
 
 ■1516 கிபி: எராஸ்மஸ் என்பவர் ஒரு லத்தீன் / கிரேக்கம் மொழிகளில் புதிய ஏற்பாடை தயாரித்தார்.
 
 
 ■1522 கிபி: மார்ட்டின் லூதர் புதிய ஏற்பாடை மொழி பெயர்த்தார்.

 
 ■1526 கிபி: வில்லியம் டின்டேல் புதிய ஏற்பாடு ஒன்றினை தயாரித்தார்; ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட முதல் புதிய ஏற்பாடு.
 
 
 ■1535 கிபி: Myles கவர்டேல் பைபிள்; அச்சிடப்பட்ட முதல் முழுமையான பைபிள். ஆங்கில மொழி (80 புத்தகங்கள்: புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு மற்றும் உறுதிப்படாதவை)

 
 ■1537 கிபி: டின்டேல் மத்தேயு  பைபிள்; எட்டாம் ஹென்றி ராஜா ஜான் ரோஜருக்கு புதிய வெளியீட்டான மத்தேயு வேதாகமத்தை வெளியிட அனுமதி கொடுத்தார். இவர் டிண்டேளின் நண்பர் ஆவர்.
 
 
 ■1539 கிபி: "கிரேட் பைபிள்" அச்சிடப்பட்டது; முதல் ஆங்கில மொழி வேதாகமம் (80 புத்தகங்கள்). மக்களின் பொது பாவனைக்காக அங்கீகரிக்கப்பட்ட வேதாகமம். இந்த வேதம் மத்தேயு பைபிள் டின்டேல் பைபிள் மற்றும் எபிரேயு பைபளையும் ஒப்பிட்டு மொழி பெயர்க்கபட்டது.
 
 
 ■1560 கிபி: ஜெனீவா பைபிள் அச்சிடப்பட்டது (80 புத்தகங்கள்). இளவரசி மேரியினால் உண்டான உபத்திரவத்தில் அநேக அறிஞர்கள் ஜெனிவாவுக்கு சென்றனர். அங்கே மொழி பெயர்ப்பு செய்து எலிசபெத் இளவரசி ஆனா பின்பு தங்கள் நாடு திரும்பி அந்த வேதாகமத்தை பரிசாக இளவரசிக்கு அளித்தனர்.

 
 ■1568 கி.பி: ஆயர்கள் பைபிள் அச்சிடப்பட்டது (The Bishops Bible).ஒன்பது பிஷப்புகள் கேண்டர்பரி மத்தேயு பார்க்கருடன் இணைந்து வெளியிட்ட பதிப்பு.
 
 
 ■1609 கிபி: Douay version  ரோமன் கத்தோலிக்கர்களுக்காக ஆங்கில முதல் முழுமையான  கத்தோலிக்க பைபிள். லத்தீன் வல்கேட் (80 புத்தகங்கள்) இருந்து மொழிபெயர்த்தது.
 
 
■1611 கிபி: கிங் ஜேம்ஸ் பைபிள்
சிறந்த வேதம் எது என்கின்ற பிரச்சனையை கிறிஸ்தவர்கள் மத்தியிலிருந்து அகற்ற முதலாம் James  மன்னர் கி.பி 1604 இல் புதிய வெளியீட்டிற்கு அனுமதி வழங்கினார். இதையே king james பதிப்பு என்று அழைக்கின்றோம்.
ஐம்பத்தி நான்கு அறிஞர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பகுதியை மொழி பெயர்த்தது. பின்னர் முழு குழுவும் தங்கள் பணியை ஆராய்ந்து ஒவ்வொரு பகுதியையும் திருத்தி சிறப்பாக அமைத்தனர். இறுதியாக தீர்மானிக்கின்ற குழு திருத்தம் செய்து முடித்தது.
மற்ற ஆங்கில வேதத்தை மொழிபெயர்க்கும் பொழுது இருந்த ஆதாரங்களை காட்டிலும் இவர்களுக்கு அதிக ஆதாரங்கள் இருந்தது. பழைய ஏற்பாட்டை மொழி பெயர்க்க நான்கு மசசொறேடிக் (Massoretic text ) பிரதிகளும், புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்க பாசவினால் (இவர் கால்வின் குழுவில் இருந்தவர்) திருத்தியமைக்கப்பட கிரேக்க text  ம் பயன்படுத்தபட்டன.

அயராத ஆறு வருட கடின உழைப்பிற்கு பின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவான பதத்தை கண்டு பிடித்து மொழிபெயர்த்து கடைசியாக 1611 ல் இந்த பதிப்பை வெளியிட்டார்கள். 1629 ,1638 ,1672 ,1769  இந்த வருடங்களில் அநேக திருத்தங்கள் செய்யப்பட்டு முன்னேற்றப்பட்டிருந்தும் மூன்று நூற்றாண்டுக்கு பிறகும்கூட வாசிக்ககூடியதாகவும் விநோயிகிக்ககூடியதாகவும் இருக்கின்றது.

 
■திருத்திய பதிப்பு (the revised version )
கிங் ஜேம்ஸ் பதிப்பிற்கு பிறகு மொளிபெயர்ப்பிட்கு பயங்கரமான எதிர்ப்பு வந்தது. இருந்தாலும் திருத்திய பதிப்பு அமெரிக்க ஆங்கில அறிஞர்களின் திறமையால் வெளிவந்தது.

 
■அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பதிப்பு: கி.பி 1901 (The American standard version)
ரிவைஸ்ட் பதிப்பின்  திருத்தும் ஆலோசனை குழு தங்களுடைய வேலையையும் ஆராய்ச்சியையும் 1885 ல் தொடர்ந்தனர். மீண்டுமாக மொழிபெயர்த்தனர். அதனிமித்தம் மூலபாஷயோடு அதிக ஒத்திருக்கிறது. டாக்டர் வில்லியம் கிரீன் இதற்கு தலைவராக இருந்தார்.

 
 ■தி ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் பதிப்பு. கி.பி 1952 ( The Rivised standard version)
திருத்தப்பட்ட ரிவைஸ்ட் பதிப்பு தான் "தி ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் பதிப்பு". தேசிய கிறிஸ்தவ சபையின் ஆலோசனை சங்கம் 32  அறிஞர்கள் அடங்கிய குழுவிற்கு அதிகாரம் வழங்கி இதை செய்தது. இப்படி 1937 ல் தொடங்கி 1952 ல் முடிக்கப்பட்டது. நேர்முறை பேச்சுக்கள் மேற்கோளிட்டு எழுதப்பட்டிருக்கிறது. இன்று இந்த குழு தொடர்ந்து அகில உலக ஐக்கிய குழுவாக செயல்பட்டு வருகிறது. 1973 ல் முதல் பதிப்பு வெளிவந்தது.

 
 ■Amplified பதிப்பு கி.பி 1958 (Amplified Version)
கலிபோனியா வை சேர்ந்த 12 ஆசிரியர்கள் பொருத்தமான வேறுசில விளக்கங்களை கொடுத்து விரிவான பதிப்பாக வெளியிட்டனர்.

 
 ■பெர்க்லி பதிப்பு  கி.பி 1959 (Berkely Version)
டாக்டர் பெர்க்லி தனது குழுவான 20  அறிஞர்களுடன் இந்த பதிப்பை கடினமான பகுதிகளுக்கு அடிக்குரிப்புகளோடு விளக்கம் எழுதி வெளியிட்டார்.

 
 ■எருசலேம் வேதம்  கி.பி 1966 (the Jerusalem Bible)
எருசலேமிலுள்ள ரோமன் கத்தோலிக்க வேதாகம பள்ளியின் பாடங்களை சார்ந்து வெளியிடபட்ட பதிப்பாகும். இது அதிக தெளிவாகவும் சரியாகவும், அறிஞர்களை கொண்டு வெளியிடபட்டதாக காணப்படுகிறது.

 
 ■புதிய ஆங்கில வேதம். கி.பி 1970 ( The New English Bible)
 oxford மற்றும் cambridge அச்சகங்களின் 22  வருட முயற்சியினால் வந்த பதிப்பாகும்

 
 ■புதிய அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பைபிள்  கி.பி 1971 (The New American standard bible)
லோக்மன் என்பவரின் ஆதரவோடு சுவிசேஷ அறிஞர்கள் 10  வருட பனியின் முடிவே இந்த பதிப்பு.
 
 
 ■லிவிங் பைபிள்  கி.பி 1971 ( The Living Bible)
அமெரிக்காவை சேர்ந்த கென்னத் டெய்லர் சாதாரண மனிதனும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் நடைமுறை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

 
 ■குட் நியூஸ் பைபிள்  கி.பி 1976 ( The good News Bible)
இன்றைய நடைமுறை ஆங்கில பதிப்பு. இறையியல் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு சாதாரண பதங்கள் பயன்படுத்தபட்டிருக்கிறது.
 
 
 ■நியூ இன்டர்நேஷனல் பதிப்பு  கி.பி 1978 (The New International Version)
அகில உலக சுவிசேஷ அறிஞர்களின் கூட்டு முயற்சியால் வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு மிக சிறந்ததாகவும் ஏனைய பதிப்பை காட்டிலும் மேன்மை உள்ளதாகவும் காணப்படுகின்றது.
 
 
 ■நியூ கிங் ஜேம்ஸ் பதிப்பு  கி.பி 1982
அகில உலக வேதாகம கல்வி சங்கமும் தாமஸ் நெல்சன் வெளியீட்டாரும் இணைந்து 119  வேத சாஸ்திர வல்லுனர்களை வைத்து இந்த மொழிபெயர்ப்பை செய்தனர். இதன் முக்கிய நோக்கம் கிங் ஜேம்ஸ் பதிப்பின் இலக்கிய அழகை காத்து இன்றைய பழக்கத்தில் உள்ள பதங்களை பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்ட ஒரு முன்னேற்ற பதிப்பாகும்.

இவ்விதமாக இன்று பழக்கத்தில் உள்ள பல வித வேதாகம பதிப்புகள் உருவாகின
« Last Edit: January 18, 2012, 01:44:33 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வேதாகம வரலாறு
« Reply #4 on: January 18, 2012, 01:45:20 AM »
சவக்கடல் சுருள்கள்
 

 
 
1947 இல் சவக்கடல் அருகில் உள்ள குகைகளில் ஒரு ஆட்டு இடையனால் கண்டு பிடிக்க பட்ட சுருள்கள்
 பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் காலங்களையும் பிழையற்ற தன்மையையும் உறுதி செய்வதாக காணப்படுகின்றது.

இந்த தோல் சுருள்கள் கி.மு 200 முதல் கி.பி 68 க்கு இடைப்பட்ட காலங்களை சார்ந்ததாக காணப்படுகின்றன. ஒரு தொல்சுருள் ஏசாயா புத்தகத்தின் முழு பிரதியாக காணப்படுகின்றது.
ஆயிர வருஷங்களுக்கு முந்திய காலத்தை சார்ந்த இப்பிரதிகள், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டை சார்ந்த மசொறேடிக் (masoretic copies ) பிரதிகளுடன் ஒத்துபோவதாக இருக்கின்றது.

யூதர்களுடைய இந்த பழைய புனித சவக்கடல் சுருள்கள் வேதாகமத்தை இன்னும் அதிகமாக நம்பும்படியான தைரியத்தை அளிக்கின்றது.