துயரை சமாளிக்க வழியில்லை
துவண்டு போன நிலையில் நான்...
தேவதையாய் வந்தாள் தோழி !
தோள் கொடுத்து சென்றாள்
வெற்றி என் பக்கம்
தோழி...நீ யார் பக்கம்?
உனை தேடி அலைந்தேன்
நீ வருவாய் என...
காத்துக் கிடந்தேன்...
உன் வருகையே
எங்கள் வீட்டில் வானவில்...
தேடி வந்த தெய்வமே...
உன்னை தேடி அலையும்
சாபத்தை விட்டு சென்றாயோ !!...