Author Topic: குள்ள நரி  (Read 843 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
குள்ள நரி
« on: December 06, 2011, 02:36:21 AM »
குள்ள நரி


காட்டு மிருகங்களில் குள்ள நரி தந்திரம் மிகுந்தது என்று கதை கூடசொல்லுவார்கள் ஆனால் உண்மை என்ன என்பது நரியை சந்தித்தால் தான் தெரியும், காடெல்லாம் நீரின்றியும் மனிதனால் வெட்டப்பட்டும் அழிந்து வரும் நிலையில் காட்டில் எங்கே மிருகங்களை காண முடியப்போகிறது, அப்படியே இருந்தாலும் அவையெல்லாம் தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் மக்கள் வாழும் ஊரினுள் வருவதாக செய்திகளில் பார்க்கிறோம்.

மனிதரில் நரி புலி நாய் ஓணான் ஒட்டகம் யானை என்று அத்தனையும் இருக்கிறது. இதனால் தானோ என்னவோ காட்டில் மிருகங்களெல்லாம் அழிந்து அல்லது அழிக்கப்பட்டு வருகிறது. உலகத்தில் மண்ணிற்கும் பெண்ணிற்கும் தான் போராட்டம் என்பது அந்த காலம், இந்த காலத்தில் பெண் எளிதில் கிடைத்துவிடும் பொருளாகிவிட்டதால் மண்ணிற்கும் பொன்னிற்க்கும் மற்றும் ஏனையபொருள்களுக்கும் தான் நரியாகவும் புலியாகவும் நாயாகவும் மாறி வருகிறான் மனிதன்.

எப்படி மாறி போராடினாலும் கொள்ளையடித்தாலும் கொலைசெய்து திருடினாலும், கிம்பளம் வாங்கி சேர்த்தாலும் இறுதியில் அனுபவிக்க முடியாமல் போய்ச்சேருகிறான். இதை ஒருவரும் சிந்திக்க தயாரில்லை, அழிவை நோக்கி போகிறோம் என்ற உணர்வுள்ளவன் ஒருவன் உண்டோ என்றால் இல்லையென்றே சொல்லுகிறது தினச்செய்திகள்.

"அன்றன்றைய நாளுக்கு அதினதின் பாடு போதும் " என்கிறது வேதம்.

வெள்ளம், தீ, பூகம்பம், வியாதி, சூறாவளிக்காற்று, விபத்து, எதிர் பாராத வியாதி இவை எதனாலும் சேதம் வரும்போது நாம் சேர்த்து வைத்திருக்கும் பணத்தாலும் கொள்ளையாடின பொருள்களினாலும் நமக்கு விடிவு கிடைக்கும் என்றால் நாம் நாயாக பேயாக மாறி சம்பாதித்து சேர்த்து வைப்பதில் நிச்சயம் பிரயோஜனம்உண்டு. பணத்தினால் போகும் உயிரை நிறுத்தி வைக்க முடியும் என்றால் நிச்சயம் பணம் தேவை. அளவிற்கு மீறி சேர்த்து குவிப்பதில் மனதிற்கு நிம்மதி கிடைக்குமென்றால் பணம் தேவை.

பணத்தின் மீது ஆசைப்படும் போது அதை அடைவதில் வெறி ஏற்ப்படுகிறது, வெறி ஏற்ப்படுவதால் அழிவிற்கு இலக்காகி விட நேருகிறது