காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
’’
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
’’
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
’’
‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
’’
‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
’’
‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
’’
‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
’’
‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’
பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண் (Balan, 1-7 years).
மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண் (Meeli, 8 - 10 years).
மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண் (Maravon, 11 to 14 years)
திறவோன், 15 வயது (Thiravon, 15 years)
விடலை, 16 வயது (Vidalai, 16 years).
காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண் (Kalai, 17 to 30 years )
முதுமகன், 30 வயதுக்கு மேல் (Mudhumagan, after 30 years)