ஒரு சில நொடி தோன்றிய
மின்னல் போல் தோன்றினாள்
அவள்
கதையில்லை , எழுத வரிகளும்
தோன்றவில்லை இருந்தும் ஓராயிரம்
காவியம் சொன்னது உன் புன்னகை
மென்மையான ஓவியம் நீ
மணலில் வரைந்த ஓவியம் அல்ல !
என் மனதில் பதிந்த இனிமையான காவியம் !
ரோமியோ ஜூலியட் , அம்பிகாபதி அமராவதி
காவியமான காதல் எல்லாம் மரணத்தில் தான்
முடியுமென்றால் எனக்கு காவிய காதல் வேண்டாம்
உன்னோடு நான் வாழ வேண்டும் பல ஆண்டுகள்
சின்ன சின்ன செல்ல சண்டைகள் இட வேண்டும்
கொஞ்சி பேசி வளர்த்திட ஓர் குழந்தை
கொலுசு அணிந்து ஓடி விளையாட ஒரு வீடு
அம்மா செல்லமா அப்பா செல்லமா என்று கேட்க
இருவரையும் கட்டி அணைத்து முத்தமிடும் குழந்தை
நம் பிள்ளை படித்து வளர்ந்து அவனும் மணமுடித்து
பேர பிள்ளைகள் பெற்று அதனையும் கொஞ்சி
துன்பங்கள் வந்தாலும் தேற்றி தோள் கொடுத்து
வாழ்வின் இறுதியிலும் என் விரல் இடுக்கில்
உன் விரல் கோர்த்து அந்திமாலை பொழுதில்
வீதியில் நடக்க வேண்டும்
ஈரேழு ஜென்மம் வேண்டாம்
இனி ஒரு பிறவியும் வேண்டாம்
நிறைவாய் உன்னுடன் ஓர் வாழ்க்கை
காவியமாய் இல்லையெனினும்
காதலுடன் வாழ வேண்டும் ...
****ஜோக்கர் ********