திரைப்படம் கொடிபறக்குது
கதாநாயகன் ரஜினிகாந்த் கதாநாயகி அமலா
பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகிகள் சித்ரா
இசையமைப்பாளர் ஹம்சலேகா
பெண் : ஓஹொஹோ.. ஓஹொஹொஹோ..ஓஹொஹோ.. ஓஹொஹோ..
{ஆண்குழு &
பெண்குழு : ம்...ம்..ம்..ம்..ம்.ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண் : ஓஹொஹோ.. ஓஹொஹொஹோ..
ஓஹொஹோ.. ஓஹொஹோ.. } (Over lap) (இசை)
ஆண்குழு &
பெண்குழு : ம்..ஹும்..ம்..ஹும்.. ம்..ஹும்..
பல்லவி
பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
பெண் : வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
{பெண் : இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
ஆண் : இவளின் குணமோ மணமோ, மலருக்குள் இல்லை..
பெண்குழு : ம்..ஹும்..ம்..ஹும்.. ம்..ஹும்..ம்..ஹும்...} (Over lap)
பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா (இசை)
ஆண்குழு &
பெண்குழு : ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்..
(இசை) சரணம் - 1
{ஆண் : ஓ..கூந்தலுகுள்ளே ஒரு வீடு கட்டுங்கள்..
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்..
ஆண் : ஆ..ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்..
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்..
பெண்குழு: ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. } (Over lap)
பெண் : ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
{ஆண் : இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
பெண் : இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..
பெண்குழு : ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. } (Over lap)
ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் (இசை)
ஆண்குழு : ம்..ஹும்.. பெண்குழு: ஆ..ஆ..ஆ..
ஆண்குழு : ம்..ஹும்.. பெண்குழு: ஆ..ஆ..ஆ...
சரணம் - 2
{ஆண் : ஓ..காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெண் : ஓ..மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ
பெண்குழு: ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. } (Over lap)
ஆண் : மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது..
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது..
{பெண் : இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..
ஆண் : இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..
பெண்குழு : ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. } (Over lap)
பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் ஹ..கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
பெண் : வானத்து இந்திரரே, வாருங்கள் வாருங்கள்
ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
{பெண் : இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..
ஆண் : இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..
பெண்குழு : ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. }