விரித்த சிறைப்பறவை
மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பெருமை பேசுபவர்களுக்கிடையில், குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு குடும்பத்தைப்-பற்றிக் கவலைப்படாமல் குடும்பப் பாசத்தை, நாட்டு மக்களின் நலனுக்காகத் தியாகம் செய்திருப்பவரே 65 வயதாகும் ஆங் சான் சூகி.
1947 இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மியான்மருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த பெருமைக்குரியவர் இவரது தந்தை ஆங் சான். அதே ஆண்டிலேயே ராணுவ அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். மியான்மரின் தேசத் தந்தை என்று மக்களால் அன்புடன் அழைக்கப்-படுகிறார்.
பள்ளிப் படிப்பை யாங்கூனில் முடித்த சூகி, 1960 இல் இந்தியாவுக்கான மியான்மர் தூதராகச் செயல்பட்டார். அப்போது, டில்லியிலுள்ள லேடி சிறீராம் கல்லூரியில் அரசியலில் பி.ஏ.-பட்டம் பெற்றார். 1969 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்-கழகத்தில் தத்துவம், அரசியல் பொருளா-தாரத்தில் பட்டம் பெற்று அமெரிக்கா-வின் நியூயார்க் நகரில் குடியேறி, 3 ஆண்டுகள் அய்.நா.சபையில் பணியாற்றினார்.
1972 இல் பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஆரிஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, லண்டனில் வசித்த இவர், இரு குழந்தைகளுக்குத் தாயாகி, லண்டன் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றார். இந்தியா வந்த சூகி, சிம்லாவில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சிப் பேராசிரியையாகப் பணியாற்றினார்.
1988 இல் உடல் நலம் பாதித்த தன் தாயைப் பார்க்க மியான்மர் வந்தபோது, அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அரசியல் ஈடுபாடு அமைந்தது.
ராணுவ ஆட்சியின் கொடுமையைப் பார்த்த சூகி உள்ளங் கொதித்தார். மக்களைக் காப்பாற்ற நினைத்தார். விளைவு, 1988 செப் 27 இல் தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் தொடங்கி அகிம்சை வழியில் போராடினார்.
சூகியின் அரசியல் ஆர்வத்தையும் வளர்ச்-சியையும் கவனித்த ராணுவம் 1989 ஜூலை 20இல் வீட்டுக்காவலில் சிறைவைத்தது. சிறையிலிருந்த-போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் (1990) சூகியின் கட்சி 59 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது. ராணுவம் தேர்தலை ரத்து செய்த--தோடு, சூகியைத் தொடர்ந்து வீட்டுக்-காவலில் வைத்தது.
சூகி மக்களுக்குச் செய்யும் தொண்டிற்காக, 1990 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அதிலிருந்து கிடைத்த பணத்தில் மியான்மர் மக்களின் சுகாதாரத்திற்கான அறக்கட்டளையை ஆரம்பித்தார். 1996 இல் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்-காவலில் வைக்கப்பட்டார்.
1999 இல் லண்டனில் சூகியின் கணவர் உயிருக்குப் போராடியபோது, சூகியைப் பார்க்க விரும்பினார். இரக்கமற்ற ராணுவம், அவரது கணவர் மியான்மர் வர விசா கொடுக்க மறுத்த-தோடு, சூகி லண்டன் சென்றால் திரும்ப மியான்-மருக்கு வரக்கூடாது என்ற நிபந்தனை விதித்தது. கணவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளக்-கூட அனுமதி கிடைக்கவில்லை. 10 ஆண்டு-களுக்குப் பிறகு, தற்போதுதான் தனது இளய மகனைப் பார்த்துள்ளார். பேரக் குழந்தைகளைப் பார்த்ததே இல்லையாம்.
அய்.நா. சபையின் முயற்சியால் 2002 இல் விடுவிக்கப்பட்டு, மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். விடுதலை பெற்றாலும், வீட்டுக் காவல் இவரை விரட்டிப் பின்தொடர, மக்களுக்-காகத் தன்னை அர்ப்பணித்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலை அனுபவித்-துள்ளார். சென்ற ஆண்டு விடுதலை பெற-வேண்டிய நேரத்தில், சட்டத்திற்குப் புறம்பாக நுழைந்த அமெரிக்கர் ஒருவரைத் தனது வீட்டுக்குள் அனுமதித்தமைக்காகத் தொடரப்-பட்ட வழக்கில் 18 மாதங்கள் வீட்டுக்காவல் அதிகமாக்கப்பட்டது. சூகியை விடுதலை செய்ய அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்தியும் செவிமடுக்காத ராணுவ அரசு 13.11.2010இல் இவரது வீட்டுக்காவல் முடிவடைந்தநிலையில், விடுதலை செய்வதற்கான உத்தரவில் ராணுவ ஜெனரல்கள் 12.11.2010 இல் கையெழுத்திட்டனர்.
ராணுவ ஆட்சியின்கீழ் சமீபத்தில் நடந்த தேர்தல் குறித்து எந்த வழக்கும் தொடரக் கூடாது என ராணுவ ஆட்சியாளர்கள் கெடுபிடி விதித்துள்ளனர். வழக்குத் தொடர்பவர்களுக்குத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும்வகையில் தேர்தல் கமிசன் விதிகளில் திருத்தம் செய்துள்ளனர்.
எனினும், வீட்டுக்காவலிலிருந்து வெளியில் வந்த சூகி, தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த வாருங்கள் என்று ராணுவ ஆட்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், வீட்டுச் சிறையி-லிருந்தாலும் தான் தினமும் 6 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்ததால் மக்களின் தேவை என்ன என்பதைப் புரிந்துள்ளதாகவும், மியான்மரில் ஜனநாயகம் செழித்தோங்க நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய ஆதரவாளர்கள் விடுதலை பெறாத நிலையில் தான் விடுதலை பெற்றதாகக் கருத-முடியாது என்றும் கூறியுள்ளார்.
பர்மா மக்கள் விதியை நம்பிச் செயல்-படுகின்றனர். மக்கள் ஒன்றுபட்டுச் செயல்-படவேண்டும். நம்பிக்கையைத் தளரவிடக் கூடாது என்கிறார் இந்தத் தன்னம்பிக்கைச் சுடரொளி. உலக வரலாற்றில் நெல்சன் மண்டேலாவுக்குப் பின்பு அதிக ஆண்டுகள் ஜனநாயகத்துக்காக _ அரசியலுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்த ஒரே தலைவர் சூகிதான்.
தன்னலம் கருதாத இந்தச் சிறைப்பறவை இன்னுமுள்ள தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திரப் பறவையாகப் பறந்து மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே மியான்மர் மக்களின் _ உலக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
சூகியின் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் மியான்மர் மக்கள் மட்டுமல்ல, இந்த உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!
தனிமைப்படுத்தி _ கொடுமைப்படுத்திச் சித்தர-வதை செய்த ராணுவ அரசால், சூகி மீது மக்கள் வைத்திருந்த அன்பை _ மதிப்பை _ செல்-வாக்கைச் சிறிதளவுகூட அசைத்துப் பார்க்க முடியவில்லை.
காற்றைப் பூட்டி அடைக்க முடியுமோ?