Author Topic: வா ...... சுகி !!  (Read 3549 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வா ...... சுகி !!
« on: November 27, 2011, 04:09:39 AM »
வா ...... சுகி !!


கருத்து தெரிந்த நாள் முதலாய் சுகம் என்பதற்கு பொருள் சாப்பிட்டு விட்டு பின்னர் நன்றாக உறங்குவது, ஆனால் அதற்கான சந்தர்பங்கள் கிடைப்பது அரிதான விஷயமாக இருந்தது, வாசுகி இளம் வயது படிப்பில் ஆர்வம் இல்லாமல் போனதற்கு காரணம் அவள் தாய்க்கு இளம் வயது முதலே சயரோகம், கவனிப்பாரற்ற நிலையில் வளரவேண்டிய நிர்பந்தகளுக்கு உள்ளானவள். அழகு இருந்த அளவிற்கு திறமைகள் வாசுகியிடம் இல்லாமல் போனது துரதிஷ்டவசமானது. சமையலறை வேலை வீட்டு வேலை என எல்லா வேலைகளையும் பனிரெண்டு வயது முதல் செய்வதற்கு பழக ஆரம்பித்து வயதிற்கு வந்து ஓரிரு வருடங்களில் படிப்பை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட்டு வீட்டு வேலைகளில் ஐக்கியமானவள், பதினாறு வயதில் அத்தை மகன் சாமாவிற்கு திருமணமும் முடித்து வைத்தனர்,

சாமாவிற்க்கும் வாசுகிக்கும் சரியாக நான்கு வயது வித்தியாசம், கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் சாமாவை அமாஞ்சி என்று கூப்பிடுவது வழக்கம், சிறு வயது முதலே இருவரும் நன்கு பழகி வளர்ந்ததால் கணவன் மனைவி என்ற எண்ணமின்றி திருமணத்தையும் ஒருவித சம்பிரதாயமாகவே நினைத்தனர், குழந்தையின்றி பல வருடங்களாகியும் அதைப் பற்றிய நினைவே இல்லாமல் அல்லது அறியாதவர்களாக வாழ்ந்து வந்தனர், சாமாவின் தாய்க்கு சந்தேகம் ஏற்படத் துவங்கியது, சாடைமாடையாக வாசுகியிடம் இதைப் பற்றி விசாரித்தாலும் வாசுகியிடமிருந்து கிடைத்த பதில்கள் திருப்தியளிக்கவில்லை.

வாசுகி அவளது தாயை கவனித்துக் கொள்வதற்கு அவளது தாய் வீட்டிற்க்குச் சென்று பல மாதங்கள் தங்கி விடுவதும் வழக்கமாகவே இருந்து வந்தது, வாசுகியின் வீட்டிலிருந்த கறவை பசுக்கள் இரண்டை கவனித்துகொள்வதற்க்கு கிராமத்திலிருக்கும் கால்நடை மருத்துவர் அவர்கள் வீட்டிற்கு வந்து போவது வழக்கம், வாசுகியின் இளம் வயதும் அழகும் கால்நடை மருத்துவர் கோபியை கவர்ந்திருந்தது, ஏதாவது காரணங்கள் கற்ப்பித்து வாசுகியை அடிக்கடி அவள் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் சந்திப்பதை வழக்கமாக்கினான் கோபி,

வாசுகியின் தாய்க்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் அருகிலிருந்த பட்டினத்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர், வாசுகி வீட்டிலிருந்த வேலைகளை கவனித்துகொண்டு தனியே இருக்கும் சூழல் அதிகரித்தது, கோபியின் வருகைக்காக வாசுகி காத்திருக்கத் துவங்கினாள், தனது மாற்றத்தின் அர்த்தம் விளங்காமலேயே கோபியிடம் நெருங்கி பழக ஆரம்பித்தாள், இருவரும் உடலுறவுகொள்ளும் அளவிற்கு அவர்களது நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது, வாசுகி கருவுற்றிருப்பதையறிந்த அவளது அத்தைக்கு மிகவும் சந்தோசம், தன் மகன் சாமாவிடம் சொல்லி அடிக்கடி வாசுகியை சென்று பார்த்துவர சொன்னதன் விளைவு தான் வாசுகி கருவுற்றிருக்க காரணம் என்று எண்ணி சந்தோஷமடைந்தாள்.

வாசுகியின் தாய் சிறிது நாட்களில் இறந்துவிட வாசுகி நிரந்தரமாக அவளது வீட்டில் தங்கி விட்டாள், சாமாவும் வாசுகியுடனே அவளது வீட்டில் தங்கிவிட்டான். கோபி வந்து போவதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் வந்து போனான், பிரசவத்திற்கு உதவுவதற்கு சாமாவின் தாய் வாசுகியுடன் வந்து தங்கினாள். அங்கு அடிக்கடி வந்து போகும் கோபியையும் அவனுடன் வாசுகியின் நெருக்கமான நடவடிக்கைகளும் சாமாவின் தாய்க்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது. சாமாவிடமும் வாசுகியிடமும் இதைப்பற்றி பேசுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள்.

ஒருநாள் கோபி வீட்டிற்கு வந்தபோது சாமாவும் வாசுகியும் மருத்துவரிடம் சென்றிருந்தனர், அப்போது சாமாவின் தாய் கோபியிடம் வாசுகியுடன் அவனது நெருக்கம் தவறானது என்று சொல்லி இனி அவன் அந்த நெருக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றும் கோபத்துடன் எச்சரிக்கை செய்தாள். ஆனால் கோபி அங்கு வருவதும் வாசுகியும் கோபியும் நெருங்கி பழகுவதிலும் எந்தவித மாற்றமும் காண முடியாமல் சாமாவிடம் இதைப்பற்றி சொல்லி கோபமடைந்தாள், அதை கேட்ட சாமாவிற்கு ஆச்சரியம் ஏற்ப்படவில்லை மாறாக அவன் அதைப் பற்றி தனக்கு முன்பே தெரியும் என்பதை தன் தாயிடம் தெரிவிக்கும் சூழல் ஏற்ப்பட்டது, தனக்கும் வாசுகிக்கும் காம உணர்வுகள் ஏற்படாமல் போனதற்கு காரணம் இருவரும் சிறுவயதிலிருந்து அண்ணன் தங்கையைப்போல பழகியதுதான் காரணம் என்று சொன்னவுடன் அவன் தாய்க்கு இனம் புரியாத துக்கம், அழுதுகொண்டே தனது துணிகளை எடுத்துக்கொண்டு வாசுகியிடம் கூட சொல்லாமல் வீட்டைவிட்டு கிளம்பி தன் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள்.

வாசுகிக்கு வேறு துணையின்றி தனியே இருந்ததால் சாமா அவளுக்கு உதவியாக இருந்து வந்தான், ஆனால் குழந்தைப் பிறந்த சில மாதங்களில் சாமாவும் தன் வீட்டிற்குத் திரும்பியவன் மறுபடியும் வாசுகியை பார்க்க அவளது வீட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டான், வாசுகி தன் குழந்தை, கால்நடை மருத்துவர் கோபியுடன் பட்டினத்தில் வாழ்ந்து வந்தாள். சாமாவிற்கு வேறு திருமணம் செய்வித்து தாம்பத்ய நிறைவுடன் வாழ்கிறான்.