உடலை அழிக்கலாம்,சிதைக்கலாம்,கொன்று தின்று
வெற்றிக்களிப்பைக் கூட கொண்டாடலாம்,
எல்லாவற்றையும் அழித்துவிட்டோம், இனி துளியியும்
நினைக்க மாட்டார்கள், கால மாற்றத்தில் மறந்து இருந்து
வெளியூர், வெளிநாடு என சிதறிவிடுவார்கள் எனக்கூட கணக்குப்போடலாம்.
ஆனால், காவல் தெய்வங்கள் காணாமல் போய்,
கரிகாலன் குரல் கூட ஓய்ந்து பதினான்காண்டுகள் கழித்தும்
அதே உணர்வு, நேற்று பிறந்தவர்களுக்கு எப்படித்தெரியும் இதுவெல்லாம்..
யாரும் சொல்லித்தர தேவையில்லை உணர்வுகளைத்தாண்டி
செல்களின் வழியே கடத்தப்படுவது இது,
பத்து அல்ல நூறு, ஆயிரம் ஆண்டுகள் கழித்தாலும், இது தொடரும்.
தீர்க்கதரிசனம் மிக்க அவரது ஆளுமையும், துரோகதரிசனத்தால்
வீழ்ந்த எமது வரலாறும் எப்போதும் அவரை பற்றி பேசிக்கொண்டு இருக்கட்டும்