26
« Last post by Kavii on April 27, 2024, 11:06:31 AM »
இசையின் தாளத்தில் துள்ளும் இதயங்கள்,
வின்மீன் கூட்டம்போல் ஒளிரும் முகங்கள்,
ஒளிரும் விளக்குகள் போல் மின்னும் கண்கள்,
இசையின் தாளம் கால்களை தாண்டி, உள்ளங்கைகளில் உயிர் பெறுகிறது.
ஒளியின் மயக்கம் மனதை வருட, உணர்வுகள் உச்சம் தொடும் வேளையில்
ஒன்றுபட்ட இதய கலாச்சாரம் கொண்டாடும் வேளை இது.
இசையின் மொழியில் பல இதயங்கள் மௌன மொழி பேசும்.
அவ்விதயங்களின் துடிப்புக்கள் இசைக்கு ஒரு இசை சேர்க்கும் அழகான தருணம்.
நிகழ்வின் துளியில் காலம் நிற்கும் மாயம்.
நட்பின் ஒற்றுமையில் வண்ணங்கள் ஒளிரும் இன்னிகழ்வில் "கலைகள் எல்லைகளை கடந்து பேசும்," "மயக்கும் ஒளி விளக்குகள், சிலிர்க்க வைக்கும் ஒலித்தட்டு இசைகள். ஆனந்த நாடன் இவைகளின் ஒன்றினைவு வாழ்க்கை வாழ்க்கை என்பது வண்ணக் கூட்டம் என்பதை சொல்லும்.
சுதந்திரப் பறவைகளாகச் சுத்தித் திரியும்
இளமை கொண்டாட்டமாய் தெரிகிறது இது.
ஒளிரும் வண்ண விளக்குகளில் நடனமாடும் நிழல்கள்ன் ஓவியம் உயிராகிறது மயக்கும் இசையில்!
நட்பு கூட்டம் ஒன்றினைந்து காவியம் படைக்கும் ஏதோ ஒரு இன்னிகழ்வு வாழ்வின் ஒரு பக்கம் மட்டுமே,!
எல்லை மீரா நட்பும் ஒரு காவியமே நம்மி பொறுத்த வரையில்! எதிர்மரை சிந்தனைகளை விளக்கு சிநேகமாய் பார்த்தால் அழகாய் தேரியும் நட்பின் மகிழ்ச்சி கொண்டாட்டம். காதலில் கூட தொட்டு பேசுவதில் கூச்சமும் பயமும் இருக்கும். ஆனால் நட்பில் தான் எவ்வித தயக்கமும் பயமும் இருக்காது. ஏனெனில் நட்பு புனிதமானது.