தமிழ் தாய்க்கு வணக்கம்..
வறண்ட பூமி காத்திருப்பதோ மழைக்கு,
உழவனின் வியர்வைப் போவதோ விலைக்கு,
மானிடனின் வாழ்க்கையோ அணையக் காத்திருக்கும் விளக்கு,
அதிலோ மானிட உனக்கு ஏனடா இவ்வளவு செருக்கு,
தயங்காமல் தர்மங்கள் செய்திடு நீ பலருக்கு,
மாமனிதனாய் திகழ்வாய் நீ பிறருக்கு,
மானிடா..
வறண்டு கிடப்பது மண் மட்டும் அல்ல, மனிதனின் மனமும் !!
விழித்தெழு தமிழா !!
வீழ்வது நாமகினும் எழுவது தமிழ் இனமாகட்டும்..
வாழ்க தமிழ், வளர்க தமிழ் பண்பாடு !!
இது ஒரு தமிழச்சியின் கதறல்... ( மைனா தமிழ் பிரியை )