[highlight-text]படம் காட்ட யாரும் இல்ல
படம் பார்க்க யாரும் மில்ல ..
அரங்கத்தின் வாசலும்
அடைப்பட்டு போயிடுச்சா..
காணொளி கண்டு கண்டு
கண்ணும் மங்கிதான் போயிடுச்சா..
நேரான நிகழ்ச்சி பார்க்க அரங்கத்தின்
முன் வரிசை முதல் வகுப்பு தானங்க..
நிழலாக பார்க்க போனால் அரங்கத்தின்
பின் வரிசை முதல் வகுப்பு ஆகுமுங்க ..
ரசிகனுக்கும் ரசிகைக்கும்
பிடிச்ச படத்த போடுங்க...
இருக்கை மொத்தம் நிறைச்சு நிறைச்சு
காச அள்ளி கொள்ளுங்கோ ..
அரங்கத்தில் யாரும் வந்து அமரும் வரை
வெள்ளை திரை தானங்க .,,
என் மனதில் யாரும் வந்து அமரும் வரை
வெள்ளை மனம் தானங்க ..
சினிமா வின் காட்சி ஒளி வெண்திரையை
வண்ணமயம் ஆக்குதுங்க...
கள்ளி இவள் கண்ணின் ஒளி
என் மனத்திரையை
வண்ணமயம் ஆக்குதுங்க..