நண்பன் காதலிக்கும் பெண். ஆனால் அந்தப் பெண்ணுக்கோ கன்னிகாஸ்த்ரீ ஆகவேண்டும் என்பதே லட்சியம். தனது வாழ்வில் காதல், சந்தோஷம் ஆகிய உணர்வுகளுக்கே இடமில்லை என்று நினைக்கும் பெண். ஆனால் நம்முடன் பழக ஆரம்பித்ததிலிருந்து மெதுவாக அவளுக்கு வாழ்வின் இனிய தருணங்களில் ஒரு பிடிப்பு உண்டாகிறது. வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. நமக்குமே அந்தப் பெண்ணை மிகவும் பிடிக்கிறது. ஆனால் நண்பனின் காதல் என்ற வட்டம், நம்மை அந்தப் பெண்ணிடமிருந்து பிரிக்கிறது. அப்படியொரு சூழலில், நண்பனுக்காக காதல் பேச வந்த ஒரு தருணத்தில், இருவருக்கும் இடையே ஒளிந்துகிடக்கும் காதல், வெடித்துச் சிதறுகிறது. அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது?
மின்சார கனவு – வெண்ணிலவே வெண்ணிலவே