இவ்வுலகில் அனைத்துமே அழகானதுதான்
நீர், நிலம், காற்று ஆகாயம்..!
இவையனைத்துமே பஞ்ச பூதங்கள் , அழகுதான்
அடுத்த நிமிடம் யாருக்கும் நிரந்தரம் மில்லை
உழைத்து உழைத்து சேர்க்கும் பணமும்,
சாகும் வரை ஏந்தாத கையும் சிறப்பு
பணத்தை மட்டும் நம்பி ஓடும்- நீ
சேர்த்து வச்ச சொத்தும்
ஓடி ஓடி உழைத்த பணமும்
நீ போன பின்பு உன்னோடு வரப்போவதில்லை
உன்னை புதைக்கும் அந்த ஏழு அடி கூட சொந்தமில்லை
கிடைப்பதை பங்கிட்டு அன்பின் மழையில் நனைவோம்
நான் என்பதை மறந்து
நாம் என்று நினைத்தால்
இல்லை என்ற சொல்
மனிதர்கள் நம்மில் இல்லாது போகும்
தேவைக்கு அதிகமானதை
தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பதால்
நம் மகத்துவம் மாண்புபெறும்