பள பளவென பல பதிப்புக்கள்
படைத்து பதித்து முடித்துவிட்டேன்
நான் பார்த்து பார்த்து
பதித்த பதிப்புக்களில்
தனிநபர் விருப்பத்திற்கிணங்க சில பதிப்பு
என் தனிப்பட்ட விருப்பத்திற்கிணங்க சில பதிப்பு .
என் பதிப்புக்களில் பெரும்பாலும் பாராட்டப்படுவதும்
பாராட்டு மழையில் எனை தெப்பமாய் நனையவைத்து
பூரித்திட வைப்பதும்
பொன் மனம் படைத்த பூமகள் அவளுக்காக
என் மனம், தன் மனம் மயங்கி
வகைவகையாய், வசமாய்,வாசமாய்
விருந்தாய்,வர்ணனையாய்,வசீகர
வரிகளில் வடித்து வைக்கப்பட்ட
விஷேஷ வரிகளின் தொகுப்பே !
தன் மென் நினைவால், பொன் நினைவால்
கற்பனை அருவியை, நயாகரா அருவியாய்
ஊற்ற செய்த என் காதல் சிட்டு குருவி நீ ...
என் பதிப்ப்புக்களை பலரும் போற்ற செய்திருக்கின்றேன்.
தடை போடவே முடியாத சீற்றத்தில் சிலரால்
தூற்றவும் செய்திருக்கின்றேன் .
தமிழை மூலமாய் கொண்டு வெறும்
சில வரிகளின் துணை கொண்டு
வார்த்தைகளை தோரணமாய் கட்டி
வழிமுழுதும் வர்ணனையால் வாசல் தெளித்து
வீண் விழா நடத்தும் வீணன் நீ ?
என ஏளனமாய் எனை நினைக்கலாம் ?
காய்ந்த மரம் என்றால் கல்லடி படுவது சகஜம் .
ஆனால்
காய்ந்து ,கனிந்து கனிவான என் மனம் சொல்லடி
படுவது தான் தீராத சோகம்
எது எப்படியோ ,யார் என்னை தடுத்தாலும்
நான் ஜுரம் வந்தே படுத்தாலும்
உயிரினைமூலமாய் கொண்டு ,அவள்
நினைவின் துணையோடு , நரம்புகளை
தோரணமாய் கட்டி ,என் மொத்த ரத்தத்தால்
வாசல் தெளித்து ,விசேஷமாய் ,
விமரிசையாய்,விமர்சனமாய் விழா நடத்தவும்
நான் தயாராய் இருப்பவன் என அவள் அரிவாள் !
அது போதும் ( இப்போதைக்கு ) எனக்கு !