காதல் உலகம் என்று ஒன்று இருக்க வேண்டும்,அதில் நீயும், நானும் மட்டும் வாழ வேண்டும் பல ஆண்டுகள்...
அன்பே,உன் கால் கொலுசின் சல் சல் என்ற ஓசையை A.R. ரஹ்மான் இசை ஆல்பமாக தினம் தினம் கேட்டு மகிழபோவது எப்போது?
மெரினா கட்கரையிலே நாம் சுண்டல் சாப்பிட்டு,கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய அஸ்தமனம் பார்ப்பது எப்போது?...
நீ சமயல் செய்யும் போது,உன்னை சமயல் செய்ய விடாமல் தடுத்து,Swiggy- இல் food order செய்வது எப்போது😀🤩...
அரபிக் கடலோரம் உலவும்
அழகின் வங்கி நீ..!
அந்த அரபிக் கடலுக்கும் கவிதை எழுத
கற்றுக் கொடுத்தவள் நீ..!
உன்னை அலையாக கரை வந்து உன் பாதம் தொடுவது எப்போது...😍
நிலா உழவன் விளைச்சல் செய்து
பரப்பி போட்ட நட்சத்திர நெல்மணிகளை
கிளியை போல் பறந்து சென்று கண்மணியே கொத்தி தின்ன என்னோடு நீ வேண்டும்...
நரை வயதில் முதுகு வளையும் போது
கைத்தடியாக...
விழி திரையில் பார்வை குறையும் போது
கண்ணாக இருந்து என்னை காக்க
என்னோடு நீ வேண்டும்.