குழந்தையும் கடவுளும் ஒன்றென்பர்
அந்த கடவுள், எனது உனது எனது என
சண்டையிட்டு கடவுளுக்கு ஒப்பான
குழந்தைகளையும் கொன்றிடும் ஈனர்களே
கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும்
உங்கள் மனங்கள் கற்பாரையை விட
இருகிவிட்டதா என்ன
தொட்டால் கசங்கிடும் மலருக்கு ஒப்பான
மென்மையான குழந்தைகளை
தோட்டா கொண்டு சிதைத்திடும்
கொடூர மனம் கொண்ட கொலைகாரர்களே
மாக்கள் கூட செய்யத்தயங்கும்
செயலை செய்யும் மனிதர்கள் உங்களுக்கு
ஆறாம் அறிவு எதற்கு
அன்றோ குழந்தைகள்
வயிற்றில் இருக்கும் போது கேட்பதோ
தாயின் வளையல் ஒலிகள்
பிறந்ததும் கேட்பதோ
தாயின் தாலாட்டு
இன்றோ குழந்தைகள்
வயிற்றில் இருக்கும் போது கேட்பதோ
வெடிச் சத்தங்கள்
பிறந்ததும் கேட்பதோ
மரண ஓலங்களும் அழுகை ஒலிகளுமே
இதை கேட்டுக் கேட்டு வளரும்
குழந்தைகளின் மனதில்
மென்மை மறைந்து
மெல்ல மெல்ல வன்மமும் வெறுப்பும் குடிகொள்கிறது
குழந்தைகளை துப்பாக்கிகளையும்
ஏந்திட வைக்கிறது
மதம் இனம் நாடு இயற்கைவளம்
இவற்றுக்காக சண்டையிடும் மனித
நீ அழிப்பது உனது மனித குலத்தையும் இயற்கை வளங்களையும்
என்பதை சிந்திக்க மறப்பதும் ஏன்
உலகம் அழியும் அழியும் என
ஒப்பாரி வைத்திடும் மூளை கெட்ட மானிடா
அதை அழிப்பதே நீ தானே
அன்று இலங்கையிலும்
ஏதும் அறியாத ஒரு அப்பாவிப் பாலகன்
இன்று சிரியாவிலும்
பலப்பல பிஞ்சி குழந்தைகள்
கேட்பதற்கு தான் நாதியில்லை
கேட்கக் கூடிய வல்லரசுகளோ
தூண்டிவிடும் சக்திகளாக