உண்மையை உறங்க வைக்க.,
வலிமை பாடும் தாலாட்டு - கையூட்டு!
பதவியின் பலத்தை குறைக்க.,
பணம் செய்யும் வஞ்சம் - லஞ்சம்!
ஞாலம் தோன்றி நாமும் தோன்ற..
நம்மில் பலரும் ஆனார் ஆன்றோர்!
அவர் நம் வாழ்வை கட்டிலமைக்க..
ஆளுமை என்றொரு நிலையை கண்டார்!!
ஆளுமை கொண்டு அனைத்தையும் சீராய்.,
ஆக்கிடத்தானே எத்தனித்திருந்தார்.,
ஆளுமையின் கீழ் சீராய் நாடும் .,
நாளும் நலமாய் நகர்ந்தே செல்ல.,
நலம்தனை கெடுத்திட.,
நமக்கொரு எதிரியாய் .,
வந்த வினையின் பெயரே லஞ்சம்.
பொய்யையும் களவையும் பொதுவாய் நீக்கி.,
வாழ்ந்திட சொன்னதே அன்றொரு காலம்.
பொய்யும் ஒர்வகை வாய்மை என்றே.,
போர்க்கொடி தூக்குதே இக் கலிகாலம்.
பொய்யையும் களவையும் போன்றதே லஞ்சம்!!
என்றால் அதுவும் மிகையே இல்லை!
லஞ்சம் என்னும் அரக்கனை ஒழிப்போம்!
நெஞ்சம் நிமிர்த்தி பிறர்க்கென வாழ்வோம்!!
பொதுநலன் கருதி... உங்கள் பீன்.
[/b]