என் தாயின் பாசம் தெரியாமல்
பிறக்கையில் அழுதேன்.
நான்
உதைத்ததை நினைத்திருப்பாளோ என்னமோ
அழுதுகொண்டே முத்தமிட்டாள்
புன்சிரிப்புடன்
அன்பு என்னும் அர்த்தத்தை
சிரிப்பின் முத்தத்தோடு
உணர்த்தியவள் என் தாய்
அழுதேன் ,
தவழ்ந்தேன் ,
நடந்தேன் ,
பாசம் குறையவில்லை
என் மீது என் தாயிக்கு
பொய்யான உலகத்தில்
கடவுளும் பொய் என்றேன்
என் தாயின்
மெய் உருவத்தை கண்ட பின்பு
அன்பின் உருவம்
அணைக்கும் போது
அகமும் முகமும்
அல்லியாய் மலர்கிறதே..!
எத்தனை யுகங்கள்
தவமிருந்தாலும்
இந்த சுகம்
இனி கிடைக்காதே..!
உலகில் அதிசயங்கள் எத்தனை
வேண்டும் என்றாலும் - தோன்றலாம்
என் முதல் அதிசயம் நீதான் அம்மா..
குழந்தை பருவம் முதல் குமரி பருவம் வரை -சற்றும்
மணம் கோணாமல் என்னை பார்த்ததால் -தான்
எனக்கு தெரியும் நான் -உனக்கு
இன்னும் செல்ல பிள்ளை என்று ..
எனக்கு உங்களின் மகளாய் இருப்பதை விட
உங்களின் மறு தாயாக மாற ஆசை அம்மா .