நிழல் படம் எண் : 044
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Sree அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://imageshack.us/a/img401/1299/58369961.jpg)
ஒரு முறை பார்த்தாலே மயக்கம் தரும் விழி
அவள் விழி தான் மறு மொழி
பேசாமல் தரலாம் மனதை
அவளிடம் தான் நட்சத்திர ஒழி போலே
கண்களை பார்த்ததும் கண் கூசும்
விசித்திர பார்வைகளில் மனம் கவரும் விழிகள்
அது தானே அவள் அவள் விழிகள்
அவள் விழியோரம் தேன் துளிகள்
கசிந்திட நான் கண்டேன் இதழோரம் இதழோரம்
வின்மினிகள் முத்தமிட நான் கண்டேன் ....
சுவாசம் தருகின்ற காற்றாய் அவளும் உருவெடுக்க
தேகம் குளிர்ந்துவிடும் அவளை சுவாசம் செய்த
உடன் போர்வைகள் கொண்டு வா
தேகத்தை போர்த்திட குளிர் தரும் காற்றில்
இருந்து காத்திட ....
இவள் விழி போல் உலகத்திலே
விழிகளை எங்கும் பார்த்ததில்லை
விழி திறந்து பார்த்துடன்
பாறைகளில் கூட நீர் ஊரும் .....
பேசும் வார்த்தை எல்லாம்
இசையை கேட்கும் காதுகளில்
சிரிக்கும் பொழுதினிலே
இருளும் அகன்றே ஒழி பிறக்கும் ......
வர்ணங்கள் இல்லா வானவில்லும் அவளே
அந்த வானில் தெரிகின்ற நச்சத்திரம் அவளே
ஒரு முறை பார்த்தாலே
மயக்கம் தரும் விழி அவள் விழி தான் .