FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on October 14, 2012, 12:02:53 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 044
Post by: Global Angel on October 14, 2012, 12:02:53 AM
நிழல் படம் எண் : 044

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Sree அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://imageshack.us/a/img401/1299/58369961.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Gotham on October 18, 2012, 10:49:57 PM

மருண்ட விழிகளில்
ஓராயிரம் கதைகள்
இருண்ட வாழ்வின்
முடிந்திடா பக்கங்களில்


சித்திரம் என்பர்
இந்த விசித்திர மனிதர்
பத்திரமாய் என்றும்
வீட்டுக்குள்ளே
பூட்டிவைத்தார்


ஆயிரமாயிரம் பிறவி தான்
முண்டாசுக்கவிஞன் எடுத்தாலும்
அவன் கண்ட கனவு
கனவாகவே முடியக்கூடும்


ஏச்சுக்கும் பேச்சுக்குமே
படைப்பட்ட பெண்டிர்
என இறுமாந்து கூறு
போடும் கூட்டங்கள்


ஏட்டுக் கல்வியையும்
வீட்டுப் பிள்ளைகள் படித்தால்
எட்டா உயரம் செல்வர்
என்று
அடுப்புள்ளே பூட்டி வைத்த
கதைசொல்லுதோ கண்கள்?


முகம் கூட காட்ட முடியா
வேதனையும் விசும்பல்களும்
தீரும் நாளும் வந்தே தீரும்


மானுட கூட்டம் மனிதம்
கற்கும் அந்நாளில்!!


(பெண் கல்விக்காக குரல் கொடுத்து தற்போது தாலிபான்களின் அரக்கத்தனமான துப்பாக்கிச்சூட்டில் தலையிலும் கழுத்திலும் குண்டடிபட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் உயிருக்குப் போராடி வரும் பதினாலே வயதான பாகிஸ்தானின் மலாலா யூசுப்ஸாய் என்ற சின்னப் பூந்தளிர் வீரத் திருமகள் நலம் பெற இவ்வரிகள் அவளுக்கு சமர்ப்பணம்)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Dong லீ on October 19, 2012, 09:59:42 AM
அழகு
இவளின் அழகு
பூக்கள் பூக்க துடிக்கும்
கூந்தலிலா

நிலவு பார்த்து பொறாமை  கொள்ளும்
நெற்றியிலா

குறும்புகளை முதலில் வெளிக்காட்டும்
கருப்பு வான வில்லை போன்ற
புருவத்திலா

நட்சத்திரங்களாய் மின்னும்
நவரசங்களை பூட்டி வைத்திருக்கும்
முட்டை முட்டை
கண்களிலா

கோபத்தை சிவந்து காட்டும்
கண்களுக்கு வேலி போடும்
மூக்கிலா

பனி கட்டிகளின் புதையலாய் தோன்றும்
குளு குளு கன்னங்களிலா

பணியில் நனைந்த ரோஜா
இதழ்களிலா

மின்னலுக்கும் கண் கூச வைக்கும்
நிறத்திலா

இல்லை

பார்க்கும் என்
பார்வையில் தான் அழகு
வர்ணிக்கும் என்
கவிதையில் தான் அழகு

என் பார்வையில்
அன்பால் பல உயிர்களின்
 அன்னையாய் மாறிய
தெரேசா மிக அழகு

மக்களின் விடுதலைக்காக
போராடும் சூ கீ மிக அழகு

மூன்று உயிர்களுக்காக
தன் உயிரை விட்ட செங்கொடி அழகு

அன்பை சுமக்கும் அனைத்து
நல்ல உள்ளங்களும் அழகு

புற அழகு சில நாட்கள் மட்டும்
அன்பால் வரும் அழகு உலகம் இருக்கும் மட்டும்

(http://acelebrationofwomen.org/wp-content/uploads/2011/10/mother_teresa_love_o7lLjqV1zdzx.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Thavi on October 19, 2012, 11:57:42 AM
ஒரு முறை பார்த்தாலே மயக்கம் தரும் விழி
 அவள் விழி தான் மறு மொழி
பேசாமல் தரலாம் மனதை
அவளிடம் தான் நட்சத்திர ஒழி போலே
கண்களை பார்த்ததும் கண் கூசும்

விசித்திர பார்வைகளில் மனம் கவரும் விழிகள்
அது தானே அவள் அவள் விழிகள்
அவள்  விழியோரம் தேன் துளிகள்
கசிந்திட நான் கண்டேன் இதழோரம் இதழோரம்
வின்மினிகள் முத்தமிட நான் கண்டேன் ....

சுவாசம் தருகின்ற காற்றாய் அவளும் உருவெடுக்க
தேகம் குளிர்ந்துவிடும் அவளை சுவாசம் செய்த
 உடன் போர்வைகள் கொண்டு வா
தேகத்தை போர்த்திட குளிர் தரும் காற்றில்
இருந்து காத்திட ....

இவள் விழி போல் உலகத்திலே
விழிகளை எங்கும் பார்த்ததில்லை
விழி திறந்து பார்த்துடன்
பாறைகளில் கூட நீர் ஊரும் .....

பேசும் வார்த்தை எல்லாம்
இசையை கேட்கும் காதுகளில்
சிரிக்கும் பொழுதினிலே
இருளும் அகன்றே ஒழி பிறக்கும் ......

வர்ணங்கள் இல்லா வானவில்லும் அவளே
அந்த வானில் தெரிகின்ற நச்சத்திரம் அவளே
ஒரு முறை பார்த்தாலே
மயக்கம் தரும் விழி அவள் விழி தான் .
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on October 19, 2012, 01:40:25 PM
மதியன்ன வதனம்
அதிலிரு கதிரென கண்கள்
வானவில்லில் தெரியாத இருளை
தீட்டி வைத்தது போல் புருவம்
குடை மிளகாயை
கொஞ்சம் வெட்டி தலை
கவிழ்த்து  வைத்தது போல் மூக்கு ..
கொவ்வை கனியதனை
வாள் கொண்டு பிளந்தது போல்
வளவலப்பாய் உதடு ...
பால் நிலவு
இந்த பார் நிலவின் ஒளியில்
பதுங்கிவிட நினைக்கும்
ஒளிபோருந்தும் அழகு நிறம்
வெள்ளை வெண்டைகள்தாம்
பத்து பதிந்து நீள்கிறதோ
உன் கைகளில் ....

அழகு பதுமையே
உன் அழகு திருமுகத்தில்
ஒரு முகமாய்
உன் நீள் விழிகளில்
ஏன் இந்த கலக்கம் ...
எதற்கு இந்த நிராசை ...
கார் குழல் போர்த்தி
கதிர் வதனமதை
பார் பார்க்க
நீ அருளாததேனோ ...?

உன் அழகால்
உந்தபட்டு
உன்னை -உல்லாசத்துக்கு
உடனழைத்து உரு குலைப்பார்
உத்தமர்கள் என்றெண்ணியா ..?
இல்லை
உதிர்ந்து போன
உன் உதிரத்து
உறவு எதையும் எண்ணியா ..?

அன்றில்
காலம் காலமாய்
கன்னியரை வதைக்கும்
கொல் காதல் விரக்தியா ...?
எதற்கிந்த சோகம் ...
உன்னை சூழ தீ எரிந்தாலும்
உள்ளிருந்து வெளி வா
அதர்மம் அளிக்கும் அருவாளாக..
உன்னை மீறி உயிர் பிரிந்தாலும்
உலகை காக்கும்
அருவமாய் உடன் வா ..

பெண்மைகள்
மென்மைகளுக்கு மட்டுமல்ல ..
பல மேன்மைகளுக்கும்
சொந்தமடி ...
உன் கண்வழி உறையும்
உன் கசப்பான அனுபவங்களை
கண்ணீரோடு கழுவி விடு
விழிகள் விடியலை சந்திக்கும் .