பிரதாப்கட் போர்
பிஜாப்பூரை விட்டு நகர்ந்த அப்ஜல்கான், துல்ஜாபூர் மற்றும் பண்டர்பூரில் உள்ள இந்து கோயில்களை நாசப்படுத்தினார். சிவாஜி மகாராஜை உணர்வுப்பூர்வமான கொந்தளிப்பிற்கு உள்ளாக்கி, எண்ணிக்கையில் உயர்ந்த, சிறந்த ஆயுதமேந்திய மற்றும் மிக துல்லியமான பிஜாப்பூர் இராணுவத்தால் அவரின் சிறிய இராணுவ வளங்களைப் பழிக்குப்பழி வாங்கவும், அவ்வாறு அவரை வெற்றி கொள்ளவும் மற்றும் அவரிடம் அரும்பி வந்த இராணுவ அதிகாரத்தை எளிதாக அழிக்கவும் அவர் திட்டமிட்டார். எவ்வாறிருப்பினும், சிவாஜி மகாராஜ் வேறொரு யோசனைகளைக் கொண்டிருந்தார். தாம் அப்ஜல்கானை முகங்கொடுக்க விரும்பவில்லை என்றும், ஏதாவதொரு வகை புரிந்துணர்வுக்கு வர விரும்புவதாகவும் அவர் ஒரு கடிதம் அனுப்பினார். மிக கவனமாக தமது கருத்துக்களை முன்னிறுத்திய சிவாஜி மகாராஜ், இராஜாங்க பேச்சுவார்த்தைகள் என்ற புனைவில் அப்ஜல்கானை ஆச்சரியப்படுத்தவும், எதிர்கொள்ளவும் தந்திரமாக முடிவெடுத்தார். பிரதாப்கட் கோட்டையின் அடிவாரத்தில் சிவாஜி மகாராஜிற்கும், அப்ஜல்கானிற்கும் இடையிலான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.[6] அந்த கூட்டத்தின் போது, அப்ஜல்கான் சிவாஜி மகாராஜைக் கொல்ல திட்டமிட்டிருந்தான் என்ற தகவல் அவருக்கு கிடைத்தது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பிச்சுவா (குத்துவாள்), வாஹ் நாக் (புலிநகம்) மற்றும் சில்காட் (சங்கிலி கவசம்) போன்ற ஆயுதங்களால் சிவாஜி மகாராஜ் தம்மைத்தாமே ஆயுதபாணியாக்கி கொண்டார். அந்த பேச்சுவார்த்தையின் போது என்ன சம்பவித்தது என்பது படியெழுதுபவர்களால் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெகு விரைவில், உயரமான அப்ஜல்கான் - வழக்கமாக கட்டித்தழுவலின் போது - அவரின் இடது கையால் சிவாஜி மகாராஜின் கழுத்தைப் பிடித்து இறுக்கி கொண்டு, அவரின் வலது கையால் ஒரு குத்துவாளினால் சிவாஜி மகாராஜை குத்தினார். எவ்வாறிருப்பினும், சிவாஜி மகாராஜின் கவசம் அவரை காப்பாற்றியது. பழிவாங்கும் நடவடிக்கையில், அவர் அப்ஜல்கானை ஒரு வாஹ்நாக் மற்றும் பிச்சுவாவினால் தாக்கினார், அவர் இரத்தமும், குடலும் தரையில் வந்து விழுந்தன. உடனே அப்ஜல்கானின் காவலாளி சையத் பாண்டா வாட்களுடன் சிவாஜி மகாராஜை தாக்கினான், ஆனால் சிவாஜி மகாராஜின் பிரத்யேக பாதுகாவலன் ஜீவா மஹாலா அவனை அடித்து கீழே தள்ளியதுடன், சையத் பாண்டாவின் ஒரு கரத்தை தண்டாபட்டாவினால் (படா - கோடாளி போன்ற ஆயுதம்) வெட்டி எறிந்தான். கூடாரத்தி்ல் இருந்து உதவியைப் பெற தட்டுத்தடுமாறி வெளியே வந்த அப்ஜல்கான், நிறுத்தி இருந்த சிவிகையில் ஏற முற்பட்டான், ஆனால் தப்பிப்பதற்கு, எச்சரிக்கை ஒலியை எழுப்புவதற்கும் முன்னால் சிவாஜி மகாராஜின் கூட்டாளி சம்பாஜி காவ்ஜி கொண்டல்கரால் தாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டான்.[6]
1659 நவம்பர் 30ல் அடர்ந்த ஜாவ்லி காட்டில் தொடர்ந்து கொண்டிருந்த பிரதாப்கர் யுத்தத்தில், சிவாஜி மகாராஜின் இராணுவங்கள் பிஜாப்பூரின் (அப்ஜல் கானின்) படைகளை தாக்கின, அவர்களை திடீர் தாக்குதல் உத்திகளில் சிக்க வைத்திருந்தனர். அப்ஜல்கானை கொன்ற உடனேயே, சிவாஜி மகாராஜ் அவரின் தளபதிகளுடன் கோட்டையை நோக்கி இருந்த சரிவை நோக்கி விரைந்து சென்றார், அத்துடன் பீரங்கிகள் மூலம் குண்டு வீசவும் உத்தரவிட்டார். இது, உடனடியாக அப்ஜல்கானின் படைகளைத் தாக்க, அடர்த்தியாக இருந்த பள்ளத்தாக்கில் தந்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர் காலாட்படைகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு சமிக்ஞையாக ஆகும்.[6] 1,500 முஸ்கீதர்களைத் தாக்கிய கன்ஹோஜி ஜீதேவின் கீழ் இருந்த மராட்டிய துருப்புகள், அவர்களை கோட்டையின் அடிவாரத்திற்கு திருப்பி விட்டது. பின்னர் ஒரு விரைவான அணிவகுப்புடன், முஷீகான் தலைமையிலான அடில்ஷாஹி படைகளின் ஒரு பிரிவு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் காயப்பட்ட முஷீகான், அவரின் வீரர்கள் தங்களுக்குதாங்களே தற்சார்பாக நிற்க விட்டுவிட்டு களத்தை விட்டு வெளியேறினார். தளபதி மோரோபாண்ட் பின்கலே, அடில்ஷாஹி துருப்புகளின் கைவிடப்பட்ட பகுதியின் அந்த காலாட்படைகளுக்கு தலைமை ஏற்று நடத்தினார். படைத்தங்கும் இடத்திற்கு நெருக்கத்தில் வந்து அவர் அளித்த திடீர் தாக்குதலால், அடில்ஷாவின் இராணுவம் நிலைகுலைந்து போனது. குதிரைப்படைகள் யுத்தத்திற்கு தயாராவதற்கு முன்னதாகவே தளபதி ரகோ ஆட்ரி விரைவாக குதிரைப்படையைத் தாக்கினார், அதில் பெரும்பாலும் ஒட்டுமொத்தமும் அழிக்கப்பட்டது. வேயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடில்ஷாஹி படைகளுன் இணைய முயற்சித்த அடில்ஷாஹி படைகளைப் பின்வாங்கச் செய்யும் ஓர் உச்சக்கட்ட முயற்சியில் நேதாஜி பால்கர் தலைமையிலான குதிரைப்படை வேய் நோக்கி விரைந்து சென்றது. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அப்ஜல்கானின் பின்வாங்கிய படைகள் திருப்பி விடப்பட்டன.[6]
இந்த வெற்றி சிவாஜி மகாராஜை மராட்டிய நாட்டுபுறத்தில் ஒரு கதாநாயகனாகவும், அவர் மக்கள் மத்தியில் ஒரு சரித்திர பிரபலமாகவும் மாற்றியது. பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், குதிரைகள், கவசங்கள் மற்றும் பிற பொருட்கள் ஆரம்பகட்டத்தில் வளர்ந்து கொண்டிருந்த மராட்டிய இராணுவத்தை வலிமைப்படுத்த உதவியாக இருந்தது. மொகலாய சாம்ராஜ்ஜிய அவுரங்காசீப், சிவாஜி மகாராஜை அவரின் வலிமை வாய்ந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கண்டார். அதன்பின்னர் விரைவிலேயே, சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும்உ நேதாஜி பால்கர் (மராட்டிய குதிரைப்படையின் தலைவர்) ஆகியோரால் பிஜாப்பூரின் அடில்ஷாஹி பேரரசைத் தாக்கி தோற்கடிக்க வேண்டுமென்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், சஹாஜியின் உடல்நிலை மோசமடைந்ததால் திட்டமிட்டப்படி செயல்கள் நடைபெறவில்லை, ஆகவே அவர்கள் தங்களின் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். எவ்வாறிருப்பினும், நேதாஜி பால்கர், அடில்ஷா பேரரசிற்கு தொல்லை அளிக்கும் சிறியளவிலான தாக்குதல்களுடனும் இந்த திட்டத்தை கையில் எடுத்தார்.
அதே வேளையில், சிவாஜி மகாராஜ் அவரின் இராணுவத்தை கணிசமாக விஸ்தரிப்பதற்கு முன்னதாக அவரை தோற்கடிக்கவும், பின்னிருத்தவும் ஆப்கானிய சிப்பாய்களை முதன்மையாக கொண்ட ஒரு மேற்தட்டு புஷ்தான் இராணுவத்தை பிஜாப்பூர் சுல்தான் அனுப்பினார். அதன் விளைவாக ஏற்பட்ட யுத்தத்தில், பிஜாப்பூர் புஷ்தானின் இராணுவம் மராட்டிய துருப்புகளால் நசுக்கப்பட்டது. இந்த தீவிர, இரத்தந்தோய்ந்த யுத்தம், பிஜாப்பூர் படைகள் சிவாஜி மகாராஜிற்கு நிபந்தனையற்ற முறையில் சரணடைந்தவுடன் முடிவுக்கு வந்தது