சுந்தர் அவள் கண்களை பார்த்துக்கொண்டே ,"உனக்கு என்ன ஆச்சு கயல் மா? உன் மனச எதுவோ பாதிச்சு இருக்கு என்னனு சொல்லுமா " என ஆழமாக கேட்டான்.கயல் விழிக்கு மறுபடியும் மூச்சு இழுத்து பிடித்தாள்.மலங்க மலங்க விழித்து," என்னங்க , நான்உங்களுக்கு துரோகம் பண்ணிடனோ னு நெனைக்கிறேன் ..அது ரொம்ப guiltya இருக்கு " என்று ஒருவாறு போட்டு உடைத்தாள் .அவள் விழிகள் அதற்குள் மழை பொழிய ஆரம்பித்து விட்டன .
சுந்தர் அவளை தான் பக்கம் திருப்பி ," அவள் முகத்தை கைகளில் ஏந்தி " நீயா ? என்னக்கா ? துரோகமா ? நெவெர் கயல் ...நீ நினைச்சாலும் உண்ணல் முடியாது ...முதல்ல என்ன நடந்துச்சுனு சொல்லு டியர் " என்று கட்டிலில் அமர வைத்தான் .
குவளையில் இருந்து நீர் எடுத்து குடிக்க கொடுத்தான்.." நீ first குடி ...நிதானமா சொல்லு என்ன நடந்துச்சுனு " என்று அவள் நீர் குடிக்க காத்து இருந்தான் .கயல் நீரையே கண்டிராதவள் போல மடக் மடக் என்று வேகமாக குடித்தாள்.அவளுக்கு அப்போது அது தேவை பட்டது போல.சுந்தர் " மெதுவா மா ..போதுமா ? என்று கேட்டான் .அவள் போதும் என தலை ஆட்டினாள் .
அவன் கைகளை பிடித்து கொண்டு " என்னை தப்பா நெனைக்கமாட்டேங்கதான ? " என்று பயத்துடன் கேட்டாள். அவன் அவள் தலையை கோதி," இல்லமா...எனக்கு என் கயல் பத்தி தெரியும் ..நீ சொல்லு " என்று உற்சாக படுத்தினான் .
கயல் சற்று தைரியம் வந்து அன்று காலை தோன்றிய கனவையும் அது தொடர்பாய் நிகழ்ந்த பிளாஷ் back சொல்லி விட்டு தொடர்ந்தாள்.," ஏங்க...சத்தியமா அவனை அன்னிக்கு பார்த்ததுதான் ..மறந்து கூட விட்டேன் ..பட் இப்போ எதுக்கு அவன் கனவிலே வந்தான் ? எதுக்கு அது நியாபகம் வந்துச்சு ? னு கூட புரியல ...எனக்கு சங்கடமா இருக்குங்க " என்று அவன் முகத்தை பார்த்தாள் பரிதாபமாக .
சுந்தர் மென்மையாக சிரித்தான் .." இவ்ளோதானா டியர் ..நானே என்னமோ எதோ னு நெனைச்சுட்டேன் '...என்று அவள் கைகளை வருடி விட்டு ரிலாக்ஸ் கயல்மா " என்றான் .
கயல் குழப்பத்துடன் அவனை நோக்கினாள். சுந்தர் கையை அமர்த்தி ," வெயிட் வெயிட் நான் clear பண்றேன் ...அப்போ உனக்கு என்ன வயசு கயல் என்று கேட்டான் .
" ஒரு 18 வயது இருக்கும் " என்றாள் கயல் .
அதுவரை ஒரு வயசு வாலிபனுடன் நீ பேசினதே இல்லதான? என வினவினான்.
அவள் தலை ஆட்டினாள் ." .பேசி இருக்கேன் ..பட் அவ்ளோ closea யார்கிட்டயும் நின்னு பார்த்ததும் இல்ல பேசினது இல்லா.." என்றாள் தயக்கத்துடன் .
" சுந்தர் பட பட வென கைகள் தட்டினான் " அதேதா கயல் மா ...அதுவரை உன் மனசில குழந்தை தனம்தந் இருந்து இருக்கு ..அவன்தான் உன் மனசில முதல காதல் உணர்வை தூண்டி இருக்கான்.." என்று கூறவும் ..அவளுக்கு பக் என்று ஆனது .. அய்யோயோ ...அப்படி எல்லாம் இல்லைங்க ..என்று எதோ கூற வந்தாள்.. சுந்தர் ..கல கல வென சிரித்தவாறே ...கூல் கயல்மா ..இதில தப்பு ஒன்னும் இல்ல...அப்போ ஏதும் தோணல உனக்கு...ofcourse இப்போ கல்யாணம் ஆகி என்கூட இருக்கப்போதான் அவன் நம்மை காதலிச்சானோ னு தோணி இருக்கு ...அதாவது எது ஒரு feel ..நாம நேசிக்க பட்டு இருக்கோம்ங்கிற ஒரு பெருமிதம் ...இதுல உன் தப்பு எதுமே இல்லையே கயல் ...இட் இஸ் Nature ! " என்று தோள் குலுக்கினான் ..
கயல் அவனை நன்றியுடன் பார்த்தாள்..இப்படி ஒரு .கணவனை பெற அவள் என ஒரு பாக்கியம் செய்து இருக்க வேண்டுமாம்..கல்யாணம் ஆகியும் அடுத்தவனை நெனைக்கிறாயா ? வீட்டை விட்டு வெளிய போ என்று கத்தாமல் அவளை அவளுக்கே புரிய வாய்த்த சுந்தரை பெருமையாக நினைத்தாள் ..கயல் கண்கள் ஆனந்த கண்ணீரை பொழிய அவனின் மார்பில் சாய்ந்தாள் .
(முற்றும் )