Author Topic: காதல் உளறல்கள்  (Read 547 times)

Offline thamilan

காதல் உளறல்கள்
« on: September 05, 2022, 09:39:27 AM »
என்னை அடிக்காமல்
அழவைப்பதும் - நீதான்
என்னை காயப்படுத்தாமல்
வலிகள் தருவதும் - நீதான்
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவதும் - நீதான்
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வதும் - நீதான்
நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
எனக்குள் இருப்பது - நீதான்


உன்னை படைத்தவனுக்கு கூட
புரியாது
உன் பார்வையின் அர்த்தங்கள்
உன் விழிகளை பார்த்த
எனக்கும் புரியவில்லை - ஆனால்
என்னமோ செய்கிறது என்னை

சுனாமியாவது
வந்தால் தான் சேதம் - ஆனால்
நீ பார்த்தாலே பலத்த சேதம்
என் மனதினிலே

உன்னை பார்த்த பிறகு தான்
தெரிகிறது
ஒரு வேலை ........
சொர்கம் கூட இவளவு அழகாய்
இருக்குமோ என்னவோ

ஒரு முறையாவது
உன்னுடன் பேசத்தான் நினைக்கிறது
என் மனம் - ஆனால்
நான் நினைக்கும்
ஒவ்வொரு முறையும்
உன் கருவிழிகள் பேசும்
பேச்சை பார்த்து
மூச்சையே சேய் நின்றுவிடுகிறதே
இது என்ன மாயாஜாலம்
பெண்ணே