Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 7031 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 602
  • Total likes: 1535
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 121
« Reply #120 on: August 15, 2022, 12:12:42 AM »

அதிகாரம் - 13 அடக்கமுடைமை


குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.


மு.வரதராசன் விளக்கம்:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 602
  • Total likes: 1535
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு திருக்குறள் - 122
« Reply #121 on: August 16, 2022, 12:30:56 AM »

குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.


மு.வரதராசன் விளக்கம்:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline KS Saravanan

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #122 on: December 21, 2022, 03:37:53 PM »
குறள் 123:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்

மு.வ உரை:
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

கலைஞர் உரை:
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்

Offline KS Saravanan

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #123 on: September 17, 2023, 02:17:47 PM »
குறள் 184:

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

மு.வ விளக்க உரை:
எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.


சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.


கலைஞர் விளக்க உரை:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு

Offline mandakasayam

  • Jr. Member
  • *
  • Posts: 54
  • Total likes: 180
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #124 on: September 19, 2023, 12:19:41 PM »
அதிகாரம் :அடக்கமுடைமை குறள்  : 124

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது




விளக்கம்:
தன் நேர்மையான வழியில் விட்டு விலகாத அடக்கத்துடன் வாழ்பவன்  பிறர் மனதை காட்டிலும்
மலையை விட பெரியது


« Last Edit: September 22, 2023, 02:15:23 PM by mandakasayam »

Offline mandakasayam

  • Jr. Member
  • *
  • Posts: 54
  • Total likes: 180
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #125 on: September 20, 2023, 11:53:41 AM »
குறள் :125
  எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. 


விளக்கம்:

  மு.வரதராசனார்..

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.


« Last Edit: September 20, 2023, 11:58:51 AM by mandakasayam »

Offline mandakasayam

  • Jr. Member
  • *
  • Posts: 54
  • Total likes: 180
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #126 on: September 21, 2023, 07:44:09 AM »
அடக்கமடைமை
குறள் :126]

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து


விளக்கம்:

சாலமன் பாப்பையா:
ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.   


« Last Edit: September 21, 2023, 07:57:21 AM by mandakasayam »

Offline mandakasayam

  • Jr. Member
  • *
  • Posts: 54
  • Total likes: 180
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #127 on: September 22, 2023, 07:18:21 AM »
குறள் :127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு 


விளக்கம் :

[கலைஞர் விளக்கம்:
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.     





« Last Edit: September 22, 2023, 04:20:14 PM by mandakasayam »

Offline mandakasayam

  • Jr. Member
  • *
  • Posts: 54
  • Total likes: 180
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #128 on: September 23, 2023, 07:05:23 AM »
குறள்:128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.   


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும். 


« Last Edit: September 23, 2023, 07:14:22 AM by mandakasayam »

Offline mandakasayam

  • Jr. Member
  • *
  • Posts: 54
  • Total likes: 180
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #129 on: September 24, 2023, 04:18:25 AM »
குறள் : 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு 


விளக்கம்

    சாலமன் பாப்பையா விளக்கம்:
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.   
« Last Edit: September 24, 2023, 04:23:20 AM by mandakasayam »