FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on March 11, 2024, 02:07:20 PM
-
அவருக்காக
பின்னஞ்சடை அழகி என்றான் 🌹
சொல் பேச்சு கேட்கா என் கூந்தலை
வாரி கொண்டையிட்டேன்
அருகே அன்னை
என்ன புத்தி வந்ததோ என்றார்
இல்லை ஆசை வந்தது என்றேன் 🤭
_____________________________________________
விழியே 😍
இன்று
இரண்டு நிமிடம் அதிகமாய் உற்று நோக்கி
என் விழியிடம் கூறினேன்
நீ அதிஷ்டசாலி என்று
அவர் உன்னை ரசித்ததால் 🤭