Author Topic: RICE (பல வகை சாதம்)  (Read 13904 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
RICE (பல வகை சாதம்)
« on: July 13, 2011, 04:12:33 AM »
                             பாலக் ரைஸ்

அரிசி - ஒரு கப்
கீரை - ஒரு கப் [ஸ்பினாச் / அரைக்கீரை / சிறுகீரை]
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்கறி கலவை [உருளை, கேரட், காலிஃப்ளவர்]
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி [விரும்பினால்]
கறிவேப்பிலை
 

காய்கறிகளை நறுக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் நீக்கவும். கீரையை சுத்தம் செய்து வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்னெய் விட்டு சோம்பு தாளித்து பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி அதில் கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். இதை மிக்ஸியில் அரைக்கவும்.

மீண்டும் மீதம் உள்ள எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதில் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.

காய்கள் வதங்கியதும் அரைத்த கீரை விழுதை சேர்த்து கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

கீரை நன்றாக வதங்கி, மசால் வாசம் போனதும் 2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நீர் கொதித்ததும் அதில் எலுமிச்சை சாறு விட்டு அரிசியை சேர்த்து கொதி வந்ததும் சிறுதீயில் மூடி சாதம் வெந்ததும் எடுக்கவும். சுவையான பாலக் ரைஸ் தயார்.
 
இதில் பாசுமதி அரிசி, சீரக சம்பா அரிசி, புழுங்கல் அரிசி என எதை விரும்பினாலும் சேர்க்கலாம். ஆனால் அரிசிக்கு ஏற்றபடி நீர் அளவு பார்த்து சேர்க்கவும். குழந்தைகளுக்கு என்றால் நெய்யில் வறுத்த முந்திரி, பச்சை பட்டாணி கூட சேர்த்து புலாவ் போல் செய்யலாம்.
« Last Edit: July 13, 2011, 05:45:37 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #1 on: July 13, 2011, 04:14:09 AM »
                                   சிக்கன் பிரியாணி
 

பாஸ்மதி அரிசி - 4 கப்
சிக்கன் - 3/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
காஷ்மீர் மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - அரை கட்டு
புதினா - அரை கட்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரிபருப்பு - 10
தேங்காய் பால் - 2 கப்
எலுமிச்சம் பழம் - ஒன்று
சோம்பு - சிறிதளவு
பிரிஞ்சி இலை - 3
ஏலக்காய் - 6
கிராம்பு - 6
பட்டை - 2 துண்டு
நெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கேசரி பவுடர் - சிறிதளவு

ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெய், தயிர், 2 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள், சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு, கேசரி பவுடர் சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த சிக்கனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ( டீப் ப்ரை பண்ண வேண்டாம்)

ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை மிக்ஸியில் பொடித்து வைத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிவைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் பாதி நெய் சேர்த்து சோம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை பொடி, முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு கொத்தமல்லி இலை, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து கொள்ளவும். இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளவும். தக்காளி வதங்கியவுடன் சிக்கனை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.

இந்த நேரத்தில் ஊற வைத்த அரிசியை தண்ணீர் நீக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்.(அரிசி ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்ற வேண்டாம். பிரியாணிக்கு இந்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளவும்)

வறுத்த அரிசியை சிக்கன் கலவையுடன் சேர்த்து கிளறி எலுமிச்சம் பழம் சாறை ஊற்றி தேங்காய் பால் மற்றும் 4 கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு நெய் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.(ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர்)

5 நிமிடம் கழித்து கிளறி விட்டு பார்க்கவும். தண்ணீர் மேலே இல்லாமல் இருந்தால் அலுமினிய ஃபாயில் பேப்பரை போட்டு நன்கு மூடி சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து கிளறி பாருங்கள் தண்ணீர் இல்லாமல் இருந்தால் இறக்கி விடவும்.

சுவையான சிக்கன் பிரியாணி ரெடி
« Last Edit: July 13, 2011, 05:45:56 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #2 on: July 13, 2011, 04:15:27 AM »
                                        காளான் பிரியாணி

காளான் - 15
பாஸ்மதி அரிசி - 2 கப்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
முந்திரி - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 2
புதினா - 15 இதழ்
மல்லித் தழை - கைப்பிடி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தாளிக்க
நெய் - ஒரு தேக்கரண்டி
 
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.

பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கவும்.

பின் தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கி புதினா மற்றும் மல்லித் தழையை சேர்க்கவும்.

நறுக்கிய காளானை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்

5 நிமிடம் கழித்து தூள் வகைகளை சேர்த்து தேவையான உப்பை போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

பின் குக்கர் பாத்திரத்தில் இந்த கலவையையும், அரிசியையும் சேர்த்து, அரை தேக்கரண்டி நெய், ஒரு பட்டை, சிறிதளவு புதினா, மல்லித் தழை போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

பிரியாணி ஆனதும் அரை தேக்கரண்டி நெய் விட்டு கிளறி எடுக்கவும். சுவையான, ஈஸியாக செய்யக் கூடிய காளான் பிரியாணி தயார்.

 
« Last Edit: July 13, 2011, 05:46:12 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #3 on: July 13, 2011, 04:16:29 AM »
                                      தேங்காய் சாதம்
 


தேங்காய் துருவல் - கால் கப்
வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
வேர்கடலை - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு (நறுக்கவும்)
கொத்தமல்லி - சிறிது
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய், நெய் - தாளிக்க
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப
 
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தை தாளித்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து விடவும்.

சுவையான தேங்காய் சாதம் தயார்.
 
தேங்காய் எண்ணெய் சுவை பிடிப்பவர்கள் தேங்காய் எண்ணெயிலே செய்யலாம். தேங்காயை சேர்த்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும் மிதமான தீயில் செய்தால் தான் கருகாமல் வரும்.



 
« Last Edit: July 13, 2011, 05:46:28 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #4 on: July 13, 2011, 04:18:45 AM »
                                      வெஜ் ஃப்ரைட் ரைஸ்

சாதம் - 2 கோப்பையளவு
வெங்காயம் - 1
கேரட் - 2
பீன்ஸ் - 15
முட்டை - 2
சோயா சாஸ் - சிறிது
சிக்கன் க்யூப் - 1
மல்லி இலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
பச்சை பட்டாணி - 1/2 கோப்பை
எண்ணெய் - 3ஸ்பூன்
உப்பு - தே.அளவு
 

வெங்காயம்,கேரட்,பீன்ஸை நீளவாக்கில் வெட்டவும்.மல்லியை கழுவி வைக்கவும்.மிளகாயை கீறி வைக்கவும்.
முட்டையை ஒரு கோப்பையில் கலக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மிளகாயை போட்டு லேசாக வதக்கவும்.
அதனுடன் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் அளவு வதக்கவும்.
காய்கள் வதங்கியபின் அதை ஒரு ஓரமாக சட்டியில் ஒதுக்கிவிட்டு முட்டையை ஊற்றவும்.
முட்டை வெந்தபின் அதை கொத்திவிட்டு அதில் பட்டாணி,மல்லி,சிக்கன் க்யூப் சேர்த்து சோயா சாஸ் ஊற்றவும்.
இதில் உதிரியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு பிரட்டி எடுக்கவும்.
இதனுடன் இறால் ஃப்ரை நல்லா இருக்கும்.
Note:
இதில் முட்டை கோசும் சேர்க்கலாம்,எல்லா காய்கறிகளும் அரை வேக்காட்டில்தான் இருக்கனும்,சாதம் உப்பு போட்டு வேக வைக்கவும்.சிக்கன் க்யூப் மற்றும் சோயா சாஸ் சேர்ப்பதால் காய்கறிகளுக்கு உப்பு போட வேண்டாம்.

« Last Edit: July 13, 2011, 05:46:43 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #5 on: July 13, 2011, 04:20:09 AM »
                                     மட்டன் பிரியாணி


 

ஆட்டுகறி - 1 1/4 கிலோ
பாசுமதி அரிசி - ஒரு கிலோ
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - கால் கிலோ
தயிர் - 100 கிராம்
எலுமிச்சை - ஒன்று
பச்சைமிளகாய் - 8
மல்லி இலை, புதினா - கால் கட்டு
கறிவேப்பிலை - சிறிது
ஏலக்காய், கிராம்பு - தலா 3
பட்டை - ஒரு சிறுத்துண்டு
கல்பாசி இலை - சிறிது (அல்லது அன்னாசிபூ 3)
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 100 கிராம்
அரைக்க:
இஞ்சி - 75 கிராம்
பூண்டு - 75கிராம்
ஏலக்காய் - 15 எண்ணிக்கை
கிராம்பு - 15 எண்ணிக்கை
பட்டை - 2 (விரல் அளவு)
 
 

 

அரிசியை அரைமணி நேரம் ஊற விடவும். கறியை கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். அரைக்க கொடுத்தவைகளை அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டாக நறுக்கவும். மிளகாயை கீறிக் கொள்ளவும்

குக்கரில் கறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், நெய் பாதியளவு, கறிக்கு தேவையான உப்பு, தயிர், அரைத்த இஞ்சி பூண்டு விழுது பாதி போட்டு நன்கு கிளறி குக்கரை அடுப்பில் வைத்து கறியை 5 நிமிடம் வேக வைக்கவும்

அடுப்பில் பெரிய குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி இலை, பிரியாணி இலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும். பின் தக்காளி, மிளகாய் போட்டு வதக்கி மீதி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

அதில் தேவையான அளவு தண்ணீர் சாதத்துக்கு தேவையான உப்பு வேக வைத்த கறி தண்ணீரையும் சேர்த்து கொதி வரவும் கழுவிய அரிசியை சேர்க்கவும்.

தண்ணீர் வற்றி அரிசி வெந்து வரவும் வேக வைத்த கறி, லெமன் சாறு, மல்லி இலை, புதினா, நெய் சேர்த்து ஒரு சேர கிளறி விட்டு மூடி வெயிட் போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து ஆவி அடங்கியவுடன் மூடியை திறந்து ஒரு சேர கிளறி விட்டு பரிமாறவும்.

சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
 
« Last Edit: July 13, 2011, 05:47:00 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #6 on: July 13, 2011, 04:21:25 AM »
                                     ஃப்ரைட் ரைஸ்

பாஸ்மதி அரிசி - கால் கிலோ
பீன்ஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
முட்டைகோஸ் - 50 கிராம்
குடைமிளகாய் - ஒன்று
உப்பு - தேவைக்கு
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
கிரீன் சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
வெள்ளைமிளகு தூள் - காரத்திற்கேற்ப
எண்ணெய் - தேவைக்கு
 


முதலில் காய் வகைகளை ஒரே அளவில் நீள நீளமாக நறுக்கவும்.

பாஸ்மதி அரிசியை உதிர் உதிராக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பீன்ஸ், கேரட், காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

அதோடு முட்டைகோஸ், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து லேசாக வதக்கவும்.

அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய காய் கலவையில் சாதம், மிளகுதூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். பின் மீண்டும் அடுப்பில் 2 நிமிடம் வைத்து கிளறி இறக்கவும்.

சுவையான சைனீஷ் ஃப்ரைட் ரைஸ் ரெடி. இதனுடன் கோழி குருமா, வெஜ் குருமா, ஆனியன் ரைத்தா வைத்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.
 
சில்லி சாஸ்க்கு பதில் பச்சைமிளகாயை அரைத்தும் சேர்க்கலாம்.

« Last Edit: July 13, 2011, 05:47:16 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #7 on: July 13, 2011, 04:22:34 AM »
                                       புளியோதரை

வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
புளி - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 15 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
கடலை பருப்பு - ஒரு பிடி
உளுந்து - ஒரு பிடி
வேர்க்கடலை - ஒரு பிடி
கடுகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
மிளகு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
தனியா, எள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏற்ப
 
முதலில் மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புளியை அதிக நீர் விடாமல் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு, வேர்கடலை, உளுந்து சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும்.

ஒரு தேக்கரண்டி கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும்.

பாதியளவு காய்ந்த மிளகாய், எள் சேர்த்து நிறம் மாறாமல் வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும். ஆறிய பொருட்களை கொரகொரப்பாக அரைத்து பொடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அடுப்பை குறைத்து உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

சற்று கெட்டியானதும் பொடித்த பொடியை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

சுவையான புளியோதரை செய்ய புளிக்காய்ச்சல் ரெடி.

தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தில் ஆறிய கலவையை சேர்த்து கலந்து விடவும். சுவையான புளியோதரை தயார்
 


« Last Edit: July 13, 2011, 05:47:35 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #8 on: July 13, 2011, 04:24:06 AM »
                                           க்ரீன் புலாவ்
 
பட்டாணி - முக்கால் கப்
அரிசி - 2 1/2 கப்
வெங்காயம் - 250 கிராம்
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
பூண்டு - 5 பல்
கொத்தமல்லி தழை - 6 கொத்து
புதினா - 4 கொத்து
பச்சை மிளகாய் - 9
தேங்காய் பால் - 5 கப்
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை, புதினா இலைகளை ஆய்ந்து அலசி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அதிலேயே வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் அரைத்த வெங்காயத்தை போட்டு பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி, பச்சை மிளகாய் விழுதை போட்டு கிளறி விடவும்.

நன்கு வதங்கியதும் அதில் பட்டாணியை போட்டு உப்பு சேர்த்து 3 நிமிடம் கிளறி விடவும்.

அதனுடன் 5 கப் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும். கொதித்து நுரைத்து வரும் பொழுது அரிசியை போட்டு கிளறி விட்டு குக்கரை மூடி விசில் போடவும்.

4 விசில் வந்ததும் இறக்கி வைத்து ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை உடையாமல் கிளறி விட்டு பரிமாறவும்
« Last Edit: July 13, 2011, 05:47:50 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #9 on: July 13, 2011, 04:25:12 AM »
                                        எலுமிச்சை சாதம்

எலுமிச்சை பழம் - 1 (பெரியது)
வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4(காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு (நறுக்கவும்)
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
ஆல் பர்பஸ் பொடி - 2 தேக்கரண்டி
உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப
 

முதலில் எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், முந்திரி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

அதில் எலுமிச்சை கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

சற்று கெட்டியானதும் ஆல் பர்பஸ் பொடியை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

தட்டில் சாதத்தை பரத்தி உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தில் ஆறிய கலவையை சேர்த்து கலந்து விடவும். சுவையான எலுமிச்சை சாதம் தயார்
 
இந்த எலுமிச்சை கரைசலை தண்ணீர் படாமல் மூன்று வாரம் வரை குளிர் சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம். மிதமான தீயில் செய்தால் தான் கருகாமல் வரும்
.
« Last Edit: July 13, 2011, 05:48:04 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #10 on: July 13, 2011, 04:26:21 AM »
                                     கார்ன் ரைஸ்

காரன் - 1.2 கப்
பாஸ்மதி அரிசி - 1/4 கப்
வெண்ணை - 3 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
 

முதலில் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து கழுவி உப்பு சேர்த்து வடிகட்டி கொதிக்க வைத்து சாதமாக வடித்துக் கொள்ளுங்கள்.
சூடான சாதத்துடன் வெண்ணை,மிளகு தூள் மற்றும் கார்ன் சேர்த்து கிளறி விடுங்கள்.
சுவையான கார்ன் ரைஸ் ரெடி

« Last Edit: July 13, 2011, 05:48:18 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #11 on: July 13, 2011, 04:27:27 AM »
                               தனியா ரைஸ்

கொத்தமல்லி - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 10
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3
தயிர் - அரை கப்
பாஸ்மதி - 2 டம்ளர்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
முந்திரி - 15
பச்சை மிளகாய் - 3
பூண்டு - ஒன்று
இஞ்சி - 2 துண்டு
நெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - ஒன்று
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
அன்னாசி பூ - ஒன்று
 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லியை சுத்தம் செய்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும். அதனுடன் தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்

பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து வறுக்கவும்.

அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்னர் அரைத்த கொத்தமல்லி கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், தயிர் சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் களைந்த அரிசியை கொட்டி கிளறவும்.

நீர் வற்றும் நேரத்தில் தம்மில் 15 நிமிடம் வைக்கவும்.

தனியா ரைஸ் தயார். வெங்காய ரைத்தாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
 
« Last Edit: July 13, 2011, 05:48:39 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #12 on: July 13, 2011, 04:28:32 AM »
                                     பனீர் பிரியாணி

பாசுமதி அரிசி - 2 டம்ளர்
பனீர் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி (குவியலாக)
பட்டை கிராம்பு ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
பிரியாணி இலை - ஒன்று
கல்பாசி இலை - சிறிது
ஏலக்காய் கிராம்பு தலா - 3
பட்டை - சிறு துண்டு
எலுமிச்சை - பாதி பழம்
புளிக்காத தயிர் - ஒரு குழிக்கரண்டி
பச்சை பட்டாணி - சிறிது (ஒரு கைப்பிடி அளவு)
மல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
நெய் - 4 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
 
தக்காளி, வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பனீரை சிறுத் துண்டுகளாக நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி இலை, பிரியாணி இலை போட்டு தாளித்து பின் வெங்காயம், தக்காளி, மிளகாய், பச்சை பட்டாணி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் தயிர் சேர்த்து கிளறி விட்டு 3 1/2 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அரிசியை போட்டு தண்ணீர் வற்றி வரும் பொழுது சிம்மில் வைத்து புதினா, மல்லி இலை, லெமன் சாறு, நெய், பனீர் சேர்த்து மூடியை போட்டு மூடவும். பின்னர் வெய்ட் போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்

ஆவி போனதும் மூடியை திறந்து ஒரு முறை அடி வரை கிளறி வைக்கவும்.

சுவையான பனீர் பிரியாணி ரெடி
« Last Edit: July 13, 2011, 05:48:59 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #13 on: July 13, 2011, 04:29:43 AM »
                               நெய் சோறு

நெய் - விருப்பமான அளவு (கொஞ்சம் அதிகமாவே தேவை )
பாஸ்மதி ரைஸ் - ஒரு டம்ளர் (15 நிமிடம் ஊற வைக்கவும்.)
பால் - 2 டம்ளர் (ஆவின் பால்)
பச்சை பட்டாணி - 100 கிராம்
மீல்மேக்கர் -100 கிராம்
பொடியாக நறுக்கிய பூண்டு -3 பல்
பொடியாக நறுக்கிய இஞ்சி - கொஞ்சம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பச்சை கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - 2
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 1
ஏலக்காய் -

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

குக்கரில் நெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் 2 டம்ளர் பாலை சேர்க்கவும்.

பின் பட்டாணி, மீல் மேக்கர் மற்றும் உப்பு சேர்க்கவும்.

அடுத்து பாஸ்மதி அரிசி சேர்த்து நன்றாக கிளறவும். நெய் கொஞ்சம் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் நிறுத்தவும்.

சூடான சுவையான நெய் சோறு தயார்
« Last Edit: July 13, 2011, 05:49:17 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: RICE (பல வகை சாதம்)
« Reply #14 on: July 13, 2011, 04:30:32 AM »
                               கேரட் ரைஸ்

துருவிய கேரட் -- ஒரு கப்
கீறிய பச்சை மிளகாய் --3
பொடிசாக நறுக்கிய வெங்காயம் -- அரை கப்
முந்திரி பருப்பு - 8
கறி வேப்பிலை - சிறிதளவு
உப்பு -- தேவையான அளவு
நெய் - ஒரு கரண்டி
உதிராக வடித்தசாதம் -- 3 கப்


கடாயில் நெய் ஊற்றி முந்திரியை சிவக்க வறுக்கவும்.
அதனுடன், துருவிய கேரட், பொடிசாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து சுருள வதக்கவும்.
நன்குசுருண்டு வந்ததும் சாதத்தை அத்துடன் சேர்த்து உப்பு, கொத்தமல்லி தூவி நன்கு கிளறவும்.
« Last Edit: July 13, 2011, 05:49:33 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்