புதிய வரவுகள் புதிய உறவுகள்
புதிய சகாப்தங்கள்
எத்தனை புதுமைகள் வாழ்வில்
மனிதனோடு மனிதன் பேசாது
யந்திரங்களோடு மட்டும் பேசுகின்ற
புது யுகம் இது
அதிலும் ஒரு இனிமைதான்
யார் துணையும் தேவையில்லை
நம்மை நாமே வழி நடத்தும் காலம்
புதிய ஆண்டே!! பொங்கல் வைத்து
உன்னை வழிபட்டு வரவேற்கிறோம்
பொங்கலோ பொங்கல் !!! பொங்கட்டும் இன்பம்
மக்கள் அனைவர் வாழ்விலும் !!