தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327

(1/3) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 327

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Sagi2023:
             இராவணா..!
                    இராவணா...!!
                          பத்து தலை பராக்கிரமசாலி
                   என் பாதம் படிகிறான்..
        பணிய வைக்க பார்க்கிறான்...
      இந்த பாவையை பார்வையோடு...!!

உன் பத்து கைகளும் இறுக பற்ற துடிக்கிறது..!!
                        என் பற்றா  தேகத்தை ..
பார்த்து பத்திரம்..  நீயோ...?
          ஆயுள்கைதி ஆகிவிட போகிறாய்
                      என் ஆடைகளுக்குள்...

       தோற்று விடுவாய் என்றாலும்..
                  போரிடவே முனைகிறாய்...
பெற்றுவிடுவேன் அவளை என்றே விளைகிறாய்....!!
               உன் தலைமுதல் கால் வரை..
                     என் விரல் பதிக்கும் காலம் எப்போது என
பேசுவதை நிறுத்திவிட்டு.....   இன்று..!!
      என் உடலை ஆராய தொடங்குவிட்டது அவன் இதழ்கள்..

பேச தயங்கி மருண்ட பொழுதுகள் ஏராளம்..
              நூறு முறை சண்டையிட்டு
ஆயிரம் முறை அனணத்து கோள்கிறாய் இறுக்கமாக ....
             இன்று இடைவெளிகளே இல்லை..
                    இல்லை இல்லை என சொல்ல மனமில்லை...
தெரிந்தும் தெரியாமலும் திருடுவான் என்னை...
               மாயக்காரன்...!!  மாயக்காரன்...!!

ஒரு மாத ஏக்கத்தை ...என்னிடம் ஒரே வினாடிக்குள் ......
          சிறை வைக்க பார்க்கிறான் அவன்....!!
உயரங்களை அவன் கணகிடவில்லை..
        உடலோடு உடல் பேசும் ஒரு இஞ்ச்ச் இடைவேளியில்...
               உயிரோடு உறவாட பார்க்கிறான்...கள்வன்....!!!

பார்வையால் என்னை விழுங்குவதை நிறுத்திவிட்டு இன்று
                       .................................ஒரு படி மேலே சென்று ....!!!
அவன் விரல்கள் என் நாணநரம்புகளை மீட்டுகிறது வீணையை போல்..
         அவன் பசிக்கு இறையாக்கி விடுவான் போல என்னை...

                          முன்னிரவில் தயங்கிய அவன்..
               பின்னிரவில் மயக்கிவிட்டான் அவளை...

விட்டுவிடு என்று அவள் உதடுகள் கூத்தாடினாலும்...
        விலகி விடாதே என்று கதறுகிறது அவன் உள்ளம்...!!!
இரவுகளின் ஆழியிலே மீனாக துடிக்க வைக்கிறான்.. !!!
       துடிக்கிறேன்.... என்றாலும் அதை செவி வழியே ருசிக்கிறான்....!!

திருடா ....  என் உயிரை உரசி ....
      தீ மூட்டி அதில் ஏன் குளிர்காய துடிக்கிறாய்...
                 கை தொட்டு ........
                   கண் கெட்டு........
                      இதழ் சுட்டு..........
                         இதயம் விட்டு.......
              இடறிய கண்ணத்தில்
                            பதித்துவிட்டான்
                                        முதல் முத்தத்தை...!!!

மச்சங்களுக்குள் மிச்சத்தை தேடுகிற உதடுகள் ..
இடையிடையே... இடையை பிழிகிறது அவன் விரல்கள்..
உடையின்றி உடலாகியது அவன் அரவணைப்பு ...

காதல் கொள்ளாமல் கலவு கண்டுவிட்டேனா
என நானும் ...
காமம் அல்லாமல் களவு கொண்டு விட்டானோ
என அவனும்...

                  உன்னோடு இல்லா இரவுகள்.....
      என்னோடு கொல்லை கனவுகள்...
நேற்று நான் நின்று சிரித்த இடம் ..?
    இன்று என்னை பார்த்து சிரிக்கிறது ..!
கொள்ளைகாரனிடம் கொள்ளை போனதா உன் மனம் என்று....

இன்று இரவு எனக்கானவளாய் இரு ....
          என்னவளாய் மட்டும் இரு .......
                    என்னோடு இரு......
என பிதற்ற வைத்துவிட்டேன் அவனை....

வினாக்கு விடையளிக்காமல் ......
       காத்திருப்பகளோடு அவன் காத்திருக்கையில்...
                   அவன் தழுவும் முன்..
உறக்கம் என்னை தழுவி விட்டது ..
இன்று...    விருந்து கிடைக்கும் என எண்ணியவனுக்கு..
                             மருந்து கூட கிடைக்கவில்லை ... !!!

பதறிய மனதும் பிதறுகிறது அவனிடம்...!!
           கள்வன் ஆகிறான் அவன்..!!
                     என்னிடத்தில்
         கள்வனின் காதலி ஆவேனா
                  உன்னிடத்தில்...!!!

                                       இப்படிக்கு ...
                                              (உன் இதயம் கவர்ந்த நான்)
                                                               சகி தயாநீ.
                                                     




Vijis:
உன் கண்களை பார்த்து பேசா முடியாத என் அன்பை கடிதத்தில் எழுதிகிறேன் உன்னையும் உன் அன்பையும் சுமக்கும் என் இதயத்துக்கு இன்று தான் வெளிச்சம் ஒரு நாள் உன்னை காணவில்லை என்றாலும் அன்றய நாள் கனவாகவே முடிகிறது முன்புயெல்லாம் ஏதோ ஏதோ நினைக்கும் என் மனது இன்று உன்னையும் உன் நினைவுகளையும் மட்டுமே நினைக்கிறது உன் மேல் நான் வைத்த அன்பு நீ இருக்கும் வரை இல்லை என் உயிர் பிரியும் வரை கடவுள்கிட்ட வேண்டுவது ஒன்று மட்டும் தான் உன் மூச்சு காற்று உள்ளயே வாழவேண்டும் அந்த வாழ்க்கை நீண்ட நேரம் பயணிக்க வேண்டும் உனக்கு நேரம் இருந்தால் நினைத்து பார் என்னையும் என் அன்பையும் உன்னை என் வாழ்க்கையில் பொக்கிஷமாக தந்த கடவுளுக்கு நன்றி

Minaaz:
யார் அவள்....??
 
அரண்மனை வாயிலில் மேளங்கள் முழங்கிட......
 பல்லக்கில் ஒய்யாரமாய் வந்திறங்கிட்ட  ராணி போல் .....
என் மனதில் மலர்ந்தவள் அவளோ,,......
வானத்து நிலவென
 இம் மண்ணில் களம்  இறங்கிட்டதேவதை அவளோ....

யாரையும் தேடாத என் விழிகள் ,..
அவளிடம் சரணடைந்திட்ட சந்தர்ப்பமதில்,...
யாரும் புரியாத இலக்கணக் கவியை சுமந்த புத்தகம் அவளோ....
தெரியாத உலகை ஓவியமாய் வரைந்திட  வந்த ஓவியம்  அவளோ
தாயென   என்னை அரவணைத்திட,....
தாரமாய் உருமாறிய தெய்வம்தான் அவளோ....


கானகத்திலும் கண்டனம் தெரிவித்த சந்தண மரம்தான் அவளோ....
அவளை மெச்சிட மொழிகள் தேடிக் கொண்டிருக்க, ......
அவள் மீது மலர்ந்த காதல்..,வளர் பிறையென வளர்ந்தோடிட.......
வார்த்தைகள் இன்றி திக்குமுக்காடி நின்றிருக்கையில்,
 அப்போதுதான் மலர்ந்திட்ட மலரென..,
 கன்னங்கள் சிவந்திட, தரையோடு விரல்கள் உரசிட,...
 தன் காதலையும் வெளிப்படுத்தி நின்றாள் என்னவள்....

என்னவளிடம் பேசிட தயங்கிட்ட மனது
கைகளால் வரைந்திட்ட மடலை நீட்டி நின்றிற்று....
நம் இருவரையும் எண்ணித்தான் எழுதப்பட்டன
காதல் காவியம் என்ற
கிண்டலும் சினுங்க;லுமாய்
பதிவிடப்பட்ட என் மடலில்
மங்கையவள், என்னவளாய் பதிவாகிற்று.

VenMaThI:


என் அய்த்த மவனே
என் ஆசை காதலனே

மரத்த சுத்தி ஆடயில
மனசுல ஏதும் தோணலையே...
மங்கைப்பருவம் வந்தப்ப
மன்மதனாத்தான் தெரிஞ்சயே...

பச்சமட்ட கட்டயில
வெச்ச கண்ணு வாங்கலையே..
அன்று முதல் இன்று வரை
இந்தப்பாவி உன்ன மறக்கலயே...

தயங்கி தயங்கி பார்த்த காலமெல்லாம்
ஆத்துத்தண்ணி போல் ஓடிப்போச்சு..
மறஞ்சு மறஞ்சு பார்த்த காலமெல்லாம்
மாயமா மாலையேறித்தான் போச்சு..

மாமனே உன்ன பாத்து
மாசமும் பல ஆச்சு..
மாப்பிள்ளையா உன்ன பாக்கும்
காலமும் கை கூடியாச்சு...

மணவரையில மாலை மாத்தி
மஞ்ச தாலி தான் கட்டி..
பொஞ்சாதியா என்ன நீயும்
கூட்டிப்போ கையோடு கை கோர்த்தி....

அப்பன் ஆத்தாள கூட்டி வந்து
மொறப்பொண்ண பரிசம் போடு...
அப்படியே இந்த கடுதாசிய
படிச்சு பாத்து பதில் போடு...

இது வெறும் கடுதாசி இல்ல மாமா
என் காதலை உனக்கு சொல்லும் இதயம்..
இது
துடிப்பதும்
துண்டாய் சிதரிப்போவதும்..
உன் கையில தான் இருக்கு..

இப்படிக்கு
உன்னவள் ❤️❤️❤️❤️❤️❤️


Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version