தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 330

(1/3) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 330

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Ishaa:
இன்று அல்ல
நேற்று அல்ல
பல வருடமாய்
நடக்குறது இந்த அநியாயம்!

நிலைத்தை இழந்தோம்
சொத்தை இழந்தோம்
படிப்பை இழந்தோம்
வேலையை இழந்தோம்
உறவுகளை இழந்தோம்
வீரர்களை இழந்தோம்
இழப்பதற்கு நம் உயிர் மட்டுமே  மிச்சம்
அதுவும் கூட விட்டு வைக்கப்படவில்லை..

குழந்தைகள் ஒளிந்து விளையாடும் வயதில்
அணுகுண்டுக்கு பயந்து ஒளியும் நிலை .
சிரித்து குடும்பத்தோடு வாழும் வயதில்
தனியாய் நின்று தவிக்கிறார்கள்.

கைகளில் மையின் கறை ஆக வேண்டிய நேரத்தில்
இப்போது இரத்த கரையோடு நிற்கிறார்கள் மாணவர்கள் .

பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் பெற்றோர்
தம் கரங்களால் இன்று கொள்ளி வைக்கும் பரிதாபம்....

தொலைந்த வாழ்க்கை போர் முடிந்தபின் கிடைக்க போவது இல்லை .
வாழும் வாழ்க்கை நரகம் ஆகுது
வாழ்ந்த நினைவுகள் என்றும்
தீராத வடுவாகுது....

இது எல்லாம் எதற்காக?
மண்ணுக்கு!
மண்ணை எடுத்துக்கொள்.
எங்களை வாழ விடு

இன்னும் பல மதங்கள் உருவானாலும்
உலகில் நிலைப்பது ஒரு மதமாம்
அதுவே மனிதமாம்!!!

யார் உயிர் போனாலும்
ஆண்டியோ அரசனோ
கடைசியில் மிஞ்சுவது என்னவோ
ஒரு பிடி சாம்பலே...

உயிருக்கு பயந்து
உயிர் காக்க இடம் பெயர்ந்து
வாழ்ந்த ஊரை விட்டு
பிறந்த மண்ணை விட்டு
வாழும் மனிதனின் பெயர் அகதி
அவர்களின் அடையாளத்தையும்
அழிக்க முடியாது
அவர்களின் வரலாற்றையும்
அழிக்க முடியாது....

உலகத்தில் நியாயம் கேட்டால் .
வாயை மூடி வாழ கற்று கொடுத்தது இந்த உலகம் .
அகதிகளுக்காய் கதவை திறக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்!


VenMaThI:






ஆடி அடங்கும் வாழ்க்கையடா , ஆறடி நிலமே சொந்தமடா
சொன்னவன் அன்று அறியவில்லை .
நிலத்தில் மக்கும் உடலும் ஓர் நாள்
நெருப்பிலிட்ட சாம்பலாய் நீரில் கரையுமென்று ....

குழந்தையின் கண் முன்
பெற்றோர் பிணமாய் விழுவதும்
பாசமாய் வளர்த்த பிள்ளை
பெற்றோரின் கரங்களில் சடலமாய் விழுவதும் ..

காலத்தின் கொடுமையாய்
நாம் கண்ணால் காணும் நிலை ...
எங்கோ எவனோ பிழைக்க
எத்துனை உயிர்களடா நீங்கள் பறிக்க ...

பால் மனம் மாறாப்பிள்ளையும் கூட
பரிதவிக்குதடா உங்கள் போர் முறையால்
பாதுகாக்க வந்த வீரனும் கூட
பொசுங்கி விட்டானடா உங்கள் சுயநலத்தால்

தாயின் தாலாட்டு கேட்ட காதுகளோ இன்று
விண்ணதிரும் வெடி சத்தம் கேக்குது
பறிவோடு பிற உயிரைப்பார்த்த கண்களோ இன்று
பூமி பிளக்கும் பீரங்கியின் முழக்கம் காணுது ...

மண்ணுக்காய் உன் மக்களை அழித்தாய்
தேசிய கீதமாய் இன்று..மக்களின்
கூக்குறளே கேக்குதடா....
" சொந்த மண்ணில் கூட இன்று
சிரித்து வாழ முடியல
ஆடம்பர வாழ்க்கை வேண்டாம்
அமைதியான வாழ்க்கை போதும்...."

இறைவன் அளித்த இயற்கையோ நீ
அனுபவிக்கவேயின்றி அழிக்க அல்ல
அவன் படைத்த உயிர்களும் கூட
வாழவேயன்றி உன்னால் வீழ அல்ல

வீழும் உயிர் அனைத்தும்
விதையாய் மாறும்
விதை அனைத்தும் ஒரு நாள்
விருட்சமாய் மாறும் ...

வாழ்க்கையே ஓர் போர்க்களம் அதை நாம் வாழ்ந்து தான் பாக்கணும்

சொன்னான் ஒருவன் அந்நாளில்
அதை எதிர் கொள்கிறோம் நாமும் இந்நாளில்
சொல்லி சென்றவன் மாண்டு விட்டான்
அவன் வார்த்தையை மட்டும் நம் மனதில் பதித்துவிட்டான் ..

வாழ்க்கை போரில் போராடுவோம்
ஆயுதமாய் அணுசக்தி கொண்டல்ல
அமைதியாய் அன்பைக்கொண்டு
வாழ்வோம் வாழ்விப்போம்.....
மனிதனாய் பிறந்துவிட்டோம்
சிறிதேனும் மனிதம் காப்போம் ....

அனோத்:

மனிதமதை மதிகெட்ட மனிதன் அழிக்கும்
  ஆயத்தங்களின் பெயர் தான் யுத்தம் .......
விதிவிலக்கின்றி விஷமங்களின் வாயுக்களை
    வீதிதோறும் விட்டெரியும் வீணர்களால் யுத்தம் ..........
சதிகொண்ட அரசுகளால் சாமானிய வாழ்வு
     சரமாரியாய் சரிவது தான் யுத்தம்..........

சகோதர உணர்வின்றி அகோரத் தாண்டவங்களால்
      மாண்டு மானிடம் அழிவது தான் யுத்தம் .....
ஆறாய்ப்  பெருகும் இரத்த தெறிப்புகளால்
   ஆறாத வடுவாய் உரத்த உணர்வுகள் தான் யுத்தம் ......

உதிரம் கொடுத்த தாயும் தந்தையும்
   உதிரும் பூக்களாய் மண்ணில் சரிவதுதான் யுத்தம்...

அவர்கள் பெற்றடுத்த மழலை குண்டதன் மழையில்
   புழுவாய் தவிப்பது தான் யுத்தம்......

போலி நட்பாடும் நண்பர்களால் யுத்தம் ......

அறத்தைக் கொன்று அரசமைப்பதால் யுத்தம்.....

சமத்துவம் மீறும் சம்பாத்தியங்களால் இந்த யுத்தம்   ......

அன்பைக் கொன்று வன்மம் காப்பது யுத்தம்.....

இறுதியில் அனாதையாக அரவணைக்க யாருமின்றி
 தொடரும் பயணத்தின் பெயர்தான் இந்த

இறுதி யுத்தம் ............

ஏன் இந்த யுத்தம் ?

பாலகன் என்ன செய்வான் பாவம் ?
   மீண்டுமோர் யுத்தம் தொடர ஏன் இந்தச் சாபம் ?

KS Saravanan:
அறிவுதனை மனதில் தீயிட்டு
அறம் எனும் பெயரினிலே
ஆற்றலை உலகிற்கு நிலை நாட்ட
இன்பம் கொண்ட மாந்தர்களே,
ஈனப்பிறவிகளே...!
உங்களில் அனைவருக்கும்
ஊனமில்லா மனங்களை
எட்டா கனியாக்கிய
ஏட்டு சுரைக்காயாய் இருக்கும் இறைவனுக்கும்
ஐந்தறிவா...?  இது சாபமே..!

ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் கனவுகளுடன்
இடிந்த சுவர்களோடு
மரணித்த மனிதநேயம்
ஒன்றாய் கூடிய பிணங்கள்
உயிர்தவனுக்காக பிராத்தனை
செய்யும் அவலநிலை...
தண்ணீரெல்லாம் செந்நீராய் மாற்றி
பிண்டம் வைத்து இந்த
அண்டம் காக்க தேவையில்லை...!

ஆயுதமே ஆயுதமே,
ஒட்டுமொத்த ஆயுதமே...!
செவி சாய்த்து கேட்டுக்கொள்...மறந்துவிடாதே...
உன்னையும் கூறு கூறாய் கொன்று குவித்து
மரணித்த புதைந்து போன மனிதநேயத்தை
இப்பூவுலகில் புதியதொரு உருவமாய்
மீண்டு வரும் யூகம் தொலைவில் இல்லை...!

ஆளுமையே ஆளுமையே,
அழிய போகும் ஆளுமையே...
நீ விதையாய் விதைத்த ஆயுதம் எல்லாம்
விஷமாய் மாறி ஒரு நாள் உன்னையும்
அழிக்கும் நினைவில் கொள்...ஆளுமையே...!

புதியதாய் பிறந்த பூக்களையும்
புரியாத புதிராய் புழுதியில்
புதைத்ததின் வினையின் பலனை......இறைவனே...!!!
உனக்கும் படைத்து பங்கிட வேண்டுமே..!

இது சாபமல்ல, சாப விமோட்சனம்..!

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version