FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AK Prakash on October 30, 2021, 08:00:33 PM

Title: ஒருதலைக் காதல்
Post by: AK Prakash on October 30, 2021, 08:00:33 PM
 உந்தன் நெற்றியில் இருக்கும் அந்த ஒற்றை துளி வியர்வைகாக காத்திருக்கிறேன் நான் இறக்கும் நொடிப்பொழுது வரை.


தேவதைகள் விண்ணுலகில் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன் உன்னை இம்மண்ணுலகில் கானும் வரை.

உன் காதோரம் இருக்கும் ஒரு சில முடிகளுக்கு மட்டுமே தெரியும் தென்றலின் ஸ்பரிசம்.

சாலையில் ஓரத்தில் மழைக்காக நின்றிருந்த பொழுது தான் பார்த்தேன் என்னவளின் தரிசனத்தை அந்த நொடிப்பொழுது முதல் காத்திருந்தேன் அந்த வெண்மழை எப்போது வருமென்று.