மந்திகளின் வழியே மாண்புமிகு
மாந்தர்களாய் உருவெடுத்த நாம்
இன்று எல்லையில்லா வளர்ச்சியை
கண்டோம், அவைகள் நம் வளர்ச்சியல்ல
முன்னோடிகளான இம்மந்திகளின் முயற்சி
கற்கால மனிதன் காட்டாறு போல
காடுமேடுகளை கடந்து ,உடையின்றி
உன்ன உணவின்றி,இருக்க இருப்பிடமின்றி
தனக்கென பேச மொழிகளற்று, நாடோடி
வாழ்கையை நாடினான்,
ஆறறிவு இருந்தும் ஐந்தறிவு
ஜீவன்களை கூரான கற்களை
ஆயுதமாக கொண்டு வேட்டையாடினான்
என்ன வேற்றுமை உள்ளது கற்கால
மனிதனுக்கும் ஐந்தறிவிகளுக்கும்,
பின் புதர்களையும் ,குகைகளையும்
தன் இருப்பிடமாக கொண்டான்,
இன்றும் குகைகளில் அவர்களின்
கிறுக்கல்கள் , காலத்தால்
அழியாத காலச்சுவடுகளாய்,
ஐந்தறிவு ருசியை மட்டுமே கண்ட
நம் முன்னோடிகள் , ஆறாம் அறிவின்
சுவையையும் கானத்துவங்கினர் ,
மரப்பட்டை,செடி,கொடி,தழைகளை
தன் உடலை மறைக்க உன்னதமான
உடையாய் பயன்படுத்தினான்,
பின் சிக்கிமுக்கி கற்களை உரசி
தீயை தீண்டினான் , தீண்டிய தீயில்
தன் அறியாமைகளை அள்ளித்தூவி
கருகலாக்கினான்,புரியாதவற்றையும்
அறியாதவற்றையும் அறிந்து கொள்ளும்
ஆர்வத்தோடும்,முனைப்போடும்,
பண்டமாற்றங்களுக்கு அவர்களின்
பாதசுவடுகள் பாதைகளின் வழியே
தேய்பிறையாய் தேய்ந்து கிடந்தன,
இன்று தேய்மானம் வளர்பிறையாய்
வளர்ந்து கிடக்கிறது, சுழலும்
சக்கரத்தின் சந்திப்பால்,
சுழல் சக்கரம் சுழற்றி விட்டது கற்கால
மனிதனின் வாழ்க்கை முறையை ,
குடும்பம்,உறவுகள் என தனக்கென
தனி வழியை வகுக்கலானான்
தங்கள் உணவிற்காக வேளாண்மையை
வரவேர்க்கலானான் ,
அன்று அறிவிலியாய் இருந்தவர்கள்
அறிவியலின் முன்னோடி ஆனார்கள்,
அவர்கள் விட்டுச்சென்ற சிறுச்சாயலில்
எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகள்
எண்ணற்ற கண்டுபிடிப்புகள், இன்று
குவிந்து கிடக்கின்றது இப்பூவுலகில்,
இன்று இவ்வுலகமே ஒரு கணிப்பொறியாய்
இயங்குகிறது,கண் இமைக்கும் நேரத்தில் கூட
நாம் பயன்படுத்துகின்றோம் அக்கனிப்பொறியை
நாம் வளர்ந்து விட்டோம் ,நாம் இனியும்
வளர்வோம், கற்கால மனிதனாகிய
நம் முன்னோடியால்,
ஒருக்கணம் நாம் கடவுளுக்கு நன்றி
சொல்வோம், நம்மை நன்றி மறவாமல்
படைத்தமைக்காக, பத்து மாத தாயின் கருவறையை
விட்டு விடைபெற்றாலும் ,அடுத்த எட்டு மாதம்
கழித்து நம் முன்னோடிகளின் முன்மாதிரியாய்
நன்கு காலில் அவர்களைப்போல கற்கால
மனிதனின் ஆதியை நினைவுபடுத்தும் வகையில்!!!