ஒரு ஓவியத்தை பார்த்து நமது உணர்வுகள், நினைவுகள், வலிகள்,காதல்,எல்லாம் கற்பனையாக உருமாறி ஓவியம் உயிர் பெற்று கவிதையாக வெளிப்படுகிறது.
299 பகுதியை கடந்து 300- வது பகுதியில் அடியெடுத்து வைக்கும் ஓவியம் உயிறாகிறது நிகழ்ச்சி,பல பேரின் உள்ளில் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
இந்த 300 நாட்களில் எத்தனை கவிதைகள், எத்தனை கவிஞர்கள் இது முடிவு அல்ல இது ஆரம்பம்
இது ஒரு புது சகாப்தம் ,பல பேரின் அழியாத நினைவுகள்,ஓவ்வொரு வாரமும் பல கவிஞர்கள் உருவாகுகிறார்கள்,அந்த கவிஞர்களை ஊக்கப்படுத்தி மேலும் உற்சாகம் கொடுக்கும் வகையில் ஒரு இனிமையான குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். அது வெறும் குரல் அல்ல கவிஞர்களுக்கு கொடுக்கப்படும் உற்சாகம் என்னும் உரம்.
கவிதையே உன்னைக் காதலித்தேன், உன் ஓவியத்தை பார்த்து கவிஞன் ஆனேன்,என் காதலை FTC மூலமாக தூது விட்டேன்,காதல் அழிவதில்லை போல, கவிஞனும் அவன் கற்பனையும் என்றும் அழியாது.300 ஓவியம் வந்தாலும் 3000 ஓவியம் வந்தாலும் உன் மீது கொண்ட காதல் என்றும் மாறாது.
உறங்கி கொண்டிருக்கும் மானிடா!!!
APJ அப்துல் கலாம் பிறந்த மண்ணில் வாழும் உனக்கு சோதனைகளை சாதனைகளாக்கி,வெற்றி பெற முடியவில்லையா, உன் இரத்தம் கொதிக்கவில்லையா, எரிமலை வெடித்து அக்னி பிழம்புகள் வெளிவருவது போன்று உன் திறமைகளை வெளிக்கொண்டு வருவது எப்போது?.....
தோற்று கடந்த நொடிகள்
விதைத்து விட்டுப்போகும்
வெற்றியின் வெளிச்சத்தை பார்க்க கற்றுக்கொள்..!
உன்னை கொல்லும் ஆயுதமும்,
வெல்லும் ஆயுதமும் உன்னிடமே உள்ளது.கொல்லும் ஆயுதத்தை
கொலை செய்துவிட்டு _
வெல்லும் ஆயுதத்தை
விளைச்சல் செய்து விடு.!
குறிப்பு: ஓவியம் உயிராகிறது 300 அல்ல 400,500,1000 என்று மேலும் மேலும் முடிவில்லாமல் பயணிக்க போகிறது.நமது கற்பனைகள் கவிதைகள் ஆகிறது. நமது திறமைகள் வெளிவருகிறது,ஓவியம் உயிராகிறது
இன்னும் பல படைப்புக்களுக்காக உங்களை போன்று காத்திருக்கும் நான் உங்கள் தோழன் அபினேஷ்....